Wednesday, February 27, 2008

அரசியல் வெற்றிடத்தை நிரப்ப புதிய கட்சி!

தமுமுக அதே வழியில் பயணிக்கும்!
அரசியல் வெற்றிடத்தை நிரப்ப புதிய கட்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கடந்த ஆகஸ்ட் 26, 2007 அன்று தஞ்சை மாவட்ட பாபநாசத்தில் கூடியபொழுது.., தேர்தலில் பங்கெடுத்து நேரடி அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியிருந்தது. தமிழகத்தில் தனி இடஒதுக்கீடு பெற்று சமுதாய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது.

அப்பாவி கோவை சிறைவாசிகளின் வழக்கை விரைந்து முடிக்க சட்டரீதியாக போராடி, அதில் வெற்றி கண்டு மனித உரிமைகளை காப்பாற்றியது - என இருபெரும் கடமைகளை நிறைவு செய்துள்ள நிலையில், சமுதாய மக்களின் பேராதரவும் பெருகியுள்ள சூழலில், தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்புதல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 22.02.08 அன்று தமுமுகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது.

பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் கள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பல்வேறு கருத்துகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடத்தப் பட்டன.

தமுமுகவை பெயர் மாற்றத் துடன் அரசியல் கட்சியாக மாற்றுவது,

தமுமுகவின் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது, என இரு தலைப்பில் சாதக பாதகங்கள் அலசி ஆராயப்பட்டன. இறுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இப்போது இருப்பது போன்ற எழுச்சியுடன் சமுதாய மற்றும் மார்க்கப் பணிகளை மேற்கொண்டு சமுதாய இயக்கமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம்களின் தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கி தமுமுகவின் வழிநடத்தலில் அரசியல் பணி ஆற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய அரசியல் கட்சி என்பது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றும் வகையில் முழுமையாகிற ஜனநாயக கட்சியாக செயல்பட வேண்டும் என்றும், அதன் முக்கிய பொறுப்புகளில் அரசியலில் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூடுதலாக ஆய்வு செய்யவும், தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவுகளை திட்டமிடுவ தற்கும், அமைப்பு நிர்ணய சட்டத்தை உருவாக்குவதற்கும், குறிக்கோள்களை வடிவமைப்பதற்கும் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில்.

பி. அப்துஸ் ஸமது (மாநிலச் செயலாளர்)
மௌலா. நாசர் (மாநிலச் செயலாளர்)
பேரா. ஹாஜாகனி (மாநில துணைச் செயலாளர்)
ஜெ. அவுலியா (மாநில தொழிலாளர் அணி செயலாளர்)
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐவர் குழு மார்ச் 31, 2008 தேதிக்குள் தனது அறிக்கைகளை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கைகள் குறித்து தலைமை நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்கும்.

புதிய அரசியல் கட்சி குறித்து கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் தங்கள் ஆலோசனைகளை எழுத்துமூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு மார்ச் மாதம் 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். வெளிநாடுகளில் உள்ளவர்கள் tmmk@tmmk.in என்ற மின்னஞ்சல் வழியாக கருத்துகளை அனுப்பலாம்.

கட்சிக்கான பெயர்

கொடி வண்ணம் (வரைந்து அனுப்புக)

கொள்கைகள் மற்றும் விதிகள்

தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவு

வேட்பாளர் தேர்வு முறைகள்

கட்சிக்கான தனித்தன்மைகள்

நிர்வாகப் பொறுப்புகளை நிரப்புவது ஆகியன குறித்து மட்டும் தங்கள் ஆலோசனைகளை புரியும் வகையில், தெளிவான எழுத்துகளில் எழுதி அனுப்ப வேண்டும். தமுமுக சகோதரர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் பொறுப்பு களை குறிப்பிட வேண்டுகிறோம். மற்றவர்கள் தங்கள் முகவரியோடு ஆலோசனைக் கடிதங்களை அனுப்ப வேண்டுகிறோம்.

இவண்
தலைமை நிர்வாகக் குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

முகவரி:
அரசியல் ஆய்வுக்குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
7, வடமரைக்காயர் தெரு,
சென்னை - 600 001

Sunday, February 17, 2008

CBSE ‘HOTS’ Puts Gulf Students in Hot Seat

CBSE ‘HOTS’ Puts Gulf Students in Hot Seat
Gopal Sutar, Arab News

RIYADH — The decision of the Central Board of Secondary Education (CBSE) to include Higher Order Thinking Skills (HOTS) for Class X and XII students has evoked a mixed reaction from Indian students and parents studying in the Gulf.

The 2008 examination to be set on the new curriculum will have 20 percent of questions based on HOTS to test the application skills of the students who now have to understand and interpret the questions. This is in contrast to Most of the Same (MOTS) type which was repetitive and stereotype.

According to CBSE, question papers would be designed in a way that help students answer all the questions within the stipulated time. They would get some time to revise them.

“We welcome the new pattern but we are not sure whether the students in the Gulf region would be able to cope with it,” says a parent in Riyadh.

One of the students says that schools in the region are not equipped to inculcate interpretative skills among students as most of the schools struggle to get a proper staff. “They even find it difficult to teach the stereo type syllabus. I wonder how these schools will prepare students for application based questions,” wonders another parent.

Some with capacity to spend more money for special coaching and personal grit always do well, feels a student.

Most of the Indian schools in the Gulf and Saudi Arabia in particular have adopted CBSE curriculum but do not have qualified staff to teach key subjects at the higher levels due to various reasons.

Friday, February 15, 2008

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தவ்ஹீது மாநாடா?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

பிஜே

ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரது ஆசியோடு கும்பகோணத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்து கட்டுக்கதைகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு கட்டுக்கதைகளும் அப்போது அவிழ்த்து விடப்பட்டு, அவை தமிழகமெங்கும் உலா வந்து கொண்டிருந்தன.

இந்த கும்பகோணம் பேரணியின் இறுதியில் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்ற புரூடாவை ததஜவினர் உலவ விட்டிருந்தனர்.

பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்கு இப்படிப்பட்ட வளர்ச்சி தேவை தானா?

உலகத் தமிழ்மாநாட்டை எம்ஜிஆர் மதுரையில் நடத்தும் போது, இப்படிப்பட்ட சூப்பர்ஃபிசியல் புரூடாக்களை அவிழ்த்து விட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்று, எம்ஜிஆர் மாறுவேடம் அணிந்து உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்கிறார். அதனால் தான் மதுரை மாநகர் முழுவதும் தெருவிளக்குகள் புதிதாக போடப்பட்டுள்ளன என்றார்கள். அப்போது அவரது சினிமாவில் தாவிக்குதித்து வந்து வில்லன்களை பதம் பார்க்கும் காட்சிகள் தான் பலரது நினைவுக்கு வந்திருக்கும்.

கும்பகோணம் பேரணிக்கு ஜெயலலிதாவின் இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்பார்த்து சென்றவர்கள் அனைவரும் ஏமாந்து போனார்கள்.

'மதத்தின் பெயரால் எவ்வளவு பெரிய அறிஞனையும் காலடியில் விழ வைத்து விடலாம்' என்ற சூத்திரத்தை மேடை தோறும் சொல்லிக் கொண்டு திரிந்த பிஜே, அதன் மீது நப்பாசை கொண்டும், தனக்கு கிடைத்த பொருளாதார ஆதரவைக் கொண்டும் தமுமுகவை ஹைஜாக் செய்வதற்கு திட்டமிட்டு தோற்றுப் போனார்.

தமுமுகவில் இருப்பவர்கள் எல்லோரும் இந்த முல்லாவின் காலடியில் கிடப்பதாக எண்ணிக் கொண்டு, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக தமுமுக தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுவதாக – எல்லா முஸ்லிம்களையும் ஒரே பிளாட்பார்மில் கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தமுமுகவை – குறை கூறிக்கொண்டு அதைவிட்டும் வெளியேறினார்.

அவரது சூத்திரப்படி அவரது காலடியில் கிடந்த ஒரு சிலரைத் தவிர, அவர் எதிர்பார்த்தபடி அவர் பின்னால் தமுமுகவினர் செல்ல வில்லை, தமுமுக முன்பை விட பன்மடங்கு வளர்ச்சியை அவர் சென்ற பின்புதான் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக இறைவனுக்கு எமது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

மதத்தின் பெயரால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தையும் செய்யலாம் என்ற சூத்திரத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடித்தான் பார்த்தார், அத்தனையும் அவருக்கு எதிராகவே அமைந்தது. அவரை மக்களுக்கு மேலும் வெளிச்சம் போட்டுத்தான் காட்டின.

இறுதியில் அவரது நப்பாசையில் மண் விழுந்தது தான் மிச்சம், தமுமுகவை அழிக்காமல் விட மாட்டேன் என்று கொக்கரித்ததும் அவரது இந்த சூத்திரம் தான் காரணம்.

அவரது பேச்சைக் கேட்பதற்கு மக்கள் ஓரளவுக்கு கூடுகிறார்கள் என்பதால், அத்தனை பேரும் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று கற்பனை செய்து கொண்டார்.

பிஜே உண்மையே பேசினாலும் சரி, பொய்யை உண்மை போல் பேசினாலும் சரி, பொய்யையே பேசினாலும் சரி, அவர் பேசும் போது நமக்கு சளிப்பு தட்டாது, கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றும். அவரைப் பற்றி விபரம் தெரிந்தவர்கள் வேண்டுமானால் நாலு வார்த்தை நறுக்கென்று பேசிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்கள்.

அப்படித்தான் கலைஞர் கருணாநிதியும் தப்புக் கணக்கு போட்டார். சென்ற இடங்களிலெல்லாம் அவருக்கு கூட்டம் கூடுகிறது என்பதால் தேர்தலில் ஜெயித்து விடலாம் என்று நினைத்து பல முறை மண்ணை கவ்வி இருக்கிறார்.

அவரது பேச்சின் இனிமைக்காகவே மட்டும் மக்கள் கூடினார்கள் என்பதை அவர் மிகவும் தமதமாகவே விளங்கிக் கொண்டார்.

கும்பகோணத்தில் பேரணியில் கூட்டத்தைக் கூட்டி தனக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் காட்டி ஜெயலலிதாவிடமிருந்து பல கோடிகளை பெற்றுக் கொண்டார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பிஜே.

இந்த இடத்தில் ஒரு விஷயம் எமது நினைவுக்கு வருகிறது.

முஸ்லிம்கள் ஊர் என்றால் ஒரு ஜமாஅத் என்றிருக்கும், அந்த ஜமாஅத்திற்கு தலைவர் என்று ஒருவர் இருப்பார், தேர்தல் என்று வந்து விட்டால் ஜமாஅத் தலைவர் யாருக்கு ஓட்டுப் போடச் சொல்கிறாரோ அவருக்கே ஊர் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். இந்த ஜமாஅத் தலைவரை கவனித்து விட்டால் மொத்த ஓட்டுக்களையும் பெற்று விடலாம் என்று தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் ஜமாஅத் தலைவரை போட்டி போட்டுக் கொண்டு கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஜமாஅத் தலைவரின் வீட்டில் பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டும்.

ஊர் ஜமாஅத் தலைவர் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் நடந்து கொண்டார்.

கும்பகோணத்தில் கூடிய முஸ்லிம்களை எல்லாம் பல கோடிகளுக்கு ஜெயலலிதாவிடம் விற்று விட்டார் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் பிஜே.

இப்பொழுது நாம் சொல்லக்கூடிய விஷயங்களை விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள். நாம் சொல்வது நியாயமானது தான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

2000 ல் மதுரையில் தவ்ஹீது மாநாடு நடத்தப்பட்ட போது, யாரும் யாரிடமும் விலை பேசுவார்கள் என்ற அச்சம் இருந்ததில்லை, துணிந்து மக்கள் தவ்ஹீது மாநாடுகளில் கலந்து கொண்டார்கள். இதற்கு முந்தைய தவ்ஹீது மாநாடுகளின் நிலையும் இது தான்.

ஆனால் இப்பொழுதெல்லாம் தவ்ஹீது மாநாடுகளுக்கு செல்வதற்கே பெரும் அச்சமாக இருக்கிறது. ஏனென்றால்,

மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த நேரத்தில் தவ்ஹீது மாநாடு என்றால் பிஜேவையும் அவருடன் கூட இருப்பவர்களையும் நம்ப முடியவில்லை.

தவ்ஹீது மாநாடு என்று கூறி கூட்டத்தைக் கூட்டிக் காட்டி மீண்டும் அரசியல்வாதிகளிடம் முன்பை விட கூடுதலாக பணம் பெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனவே மே 10,11 ல் நடக்கக்கூடிய தவ்ஹீது மாநாட்டிற்கு செல்வதா, இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரண்டு முறை கொட்டுப்பட மாட்டான் என்பது நபிமொழி. ஏற்கனவே கும்பகோணத்தில் கொட்டுப்பட்ட நீங்கள் இரண்டாம் முறையும் கொட்டுப்பட வேண்டுமா? சிந்தியுங்கள்.

வஸ்ஸலாம்

இப்னு ஃபாத்திமா
16.02.2008

Friday, February 01, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 24

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வஅலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன கோவமா இருக்குறாப்ல தெரியுது.

என்ன செய்யுறது அஹமது. நம்ம தலைவர நம்பி வந்துட்டு, இப்போ அவரு நடத்துற கூத்த ஏத்துக்கவும் முடியாம, எதுக்கவும் முடியாம தவிக்கிற தவிப்புல நம்ம மேலயே கோவம் தான் வருது. ஆனாலும் என்ன செய்ய முடியும் சொல்லுங்க.

சரி ஒமர் பாய். நீங்களே இப்புடி ஆயிட்டா. நாங்கள்ல்லாம் என்ன பண்றது. சரி விஷயத்த சொல்லுங்க.

எல்லாம் இந்த மோடி விவகாரம் தான். மோடி வருகையை எதுத்து நம்ம கட்சி நடத்துன ஆர்ப்பாட்டம் எதுலயும் நம்மாளு பிஜே கலந்துக்கலியா. இத பத்தி நம்மாளுங்க பேச ஆரம்பிச்ச உடன அவுங்க கவனத்த திச திருப்புறதுக்காக தமுமுக அரசாங்கத்துக்கு பயந்துகிட்டு தனியா போராட்டம் நடத்தாம, கூட்டணி அமச்சு போராடுனாங்கன்னு எளுதி யிருக்காரு.

தமுமுக - ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணின்னு ஒரு அமைப்ப ஏற்படுத்தி தான போராட்டம் நடத்துனாங்க.

அதுல என்ன தப்பு அஹமது. ஒங்களுக்கு ஞாபகமில்லையா. 2004 ல ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிச்சாங்களே. அதுக்கு இந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவிச்சாங்களே. அப்ப தமுமுக அத எதுத்து ஜெயலலிதா வீட்ட முற்றுகை போராட்டம் அறிவிச்சு நடத்தலியா.

ஆமா. நடத்துனாங்க. அத பாராட்டி எல்லா பத்திரிக்கையும் தான் எளுதுச்சு. நம்ம பத்திரிக்கைல தான் ஒண்ணுமே எளுதல.

எப்படி எளுத முடியும் அஹமது. அம்மாகிட்ட ஒப்பந்தமும் பண்ணிகிட்டு, அம்மாவ எதுத்து நடத்துன போராட்டத்த பாராட்டி எப்புடி எளுத முடியும். அதுவும் தமுமுக நடத்துன போராட்டம். அதப் போயி பாராட்டி எளுத முடியுமா.

சரி வுடுங்க ஒமர் பாய். அது முடிஞ்சு 3 வருஷத்துக்கு மேல ஆச்சு. அதுக்காகவா இப்போ கோவமா இருக்கீங்க.

இல்ல அஹமது. தமுமுக தனியா நடத்துன அந்த போராட்டத்த பாராட்டி எளுத அப்பவும் இவரு விரும்பல. இப்ப கூட்டணி சார்பா நடத்துன போராட்டத்த பத்தி எளுதவும் இவரு விரும்பல. ஆனா அதயே குறையாவும் சொல்லிக்கிட்டு திரியுறாரே அத நெனச்சாத்தான் கோவமா வருது.

விடுங்க ஒமர் பாய். ஆமா என்னவோ தமுமுக அரசாங்கத்துக்கு பயந்துகிட்டுத்தான் மத்தவங்களோட கூட்டு சேர்ந்து போராடுனதா சொல்றாரே நெசமாவா.

எப்புடி அஹமது. அரசாங்கத்துக்கு பயந்தா, இவரு எதுலயும் கலந்துக்காம ஓடி ஒளிஞ்சுகிட்டா மாதிரி அவுங்க இருந்திருக்கணும். ஆனா தமுமுக தலைவரும் சரி, பொதுச் செயலாளரும் சரி முற்றுகை போராட்டத்துல முன்னாலயுல நின்னாங்க.

ஆமா ஒமர் பாய். அதுமட்டுமில்ல. கூட்டணி அமைச்சாலும் அந்த AFF வையும் தமுமுக தானே வழி நடத்துனிச்சு. அதுமாத்திரமல்லாம அதுக்குனு ஒரு வழிகாட்டு குழுவ தமுமுக தலைவர் தலைமைல தான ஏற்படுத்துனாங்க. அப்புறம் எப்படி தமுமுக அரசாங்கத்துக்கு பயந்துகிட்டு தனியா நடத்தாம கூட்டு வச்சு நடத்துனாங்கன்னு சொல்ல முடியும்.

சரியாச் சொன்னீங்க அஹமது. இத தான் பாக்குறவன்லாம் கேக்குறான். இது மட்டுமில்லாம மோடி செஞ்சது என்ன ஜெயலலிதா நடந்துகிட்டா மாதிரி வெறுமனே முஸ்லிம்களுக்கு மட்டுமா எதிரா நடந்துகிட்டாரு. முஸ்லிம், கிருத்துவ, தலித்னு அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரா நடக்கலியா. அப்போ அவுங்களயும் சேர்த்துகிட்டு எதிர்ப்ப வலிமையா காட்டுறது எப்புடி தப்பாகும்.
இது என்ன நம்ம தலைவருக்கு மட்டும் தெரியாமயா இருக்கப் போவுது. அனாலும் ஜெயாவுக்கு பயந்துகிட்டு இவரு பதுங்குனதப் பத்தி யாராவது கேட்டு வைச்சா என்ன செய்யுறதுங்குற முன்னெச்சரிக்க நடவடிக்கையா இத கொளுத்திப் போட்டிருக்காரு. இனிமே நம்மாளுங்க யாரும் இவரு ஏன் போராட்டத்துல கலந்துக்கலங்குறதப் பத்தி பேச மாட்டானுங்க. தமுமுக பயந்து ஓடிடுச்சுன்னு தான் திரும்ப தீரும்ப பேசுவானுங்க.

ஆனா ஒமர் பாய். நீங்க சொல்ற மாதிரி நடக்கனும்னு தான் நம்மாளு இப்புடி செஞ்சிருப்பாரு.

அது மட்டுமில்ல அஹமது. இதே மாதிரி முன்னால, மத மாற்ற சட்டம்னு ஒண்ண ஜெயலலிதா கொண்டு வந்தாங்களே அப்பவும் தமுமுக இது மாதிரி மற்ற சமூக மக்களோட இணைஞ்சு தான் போராடுனாங்க. அப்ப இவரு தமுமுகவுல தான் இருந்தாரு. அப்ப ஜெயலலிதாவுக்கு பயந்துகிட்டா கிருத்தவங்களோட சேர்ந்து போராடுனோம். இரண்டு சமூகமும் பாதிக்கப்பட்டிருக்குங்குற அடிப்படைல தான சோந்து போராடுனோம். அத மாதிரி தான் இப்பவும். மோடி நடந்துகிட்டது முழு மனிதகுலத்துக்குமே எதிரானதுங்குற எண்ணம் யாருக்குலாம் இருக்கோ அவுங்க ஒண்ணா சேர்ந்து போராடுறது எப்புடி தப்பாகும்.

சரி. சரி. அதுக்காக கோவப்படாதீங்க. மத்தவங்களோட ஒத்துமையா இருக்குறது தான் நம்மாளுக்குப் புடிக்காதே. அதுனால இப்புடி சொல்லியிருப்பாரு விடுங்க.

இதோட விடலியே நம்மாளு. தமுமுகவுக்கு வாரியம் கெடச்சதுனால தான் இப்புடி பதுங்குறாங்கன்னு வேற சொல்லியிருக்காரு.

தமாஷ் பண்ணாதீங்க ஒமர் பாய். பதுங்குனது நம்மாளு தான். அவுங்க களத்துல தான நின்னாங்க.

பதுங்குறதுன்னா களத்துக்கு வராம பதுங்குறதுன்னு அர்த்தமில்லியாம். மத்தவங்களோட சேர்ந்து நின்னா பாதுகாப்பா இருக்குன்னு நெனெச்சு எல்லோரோடையும் கூட்டா நிக்கிறதாம். ஆனா ததஜ தலைமை தைரியமானவங்களாம், அதுனால தனியா போராட்டம் நடத்துனாங்களாம்.

ஒமர் பாய். இப்போ நாம யாரோட ஆதரவுமில்லாம தனியாத்தான் நிக்கிறோம் எல்லோரும் நம்மள விட்டு வெலகிட்டாங்கங்கிறத இப்புடி சூசகமா சொல்லியிருப்பாரோ.

இருக்கலாம் அஹமது. 2005 எலக்ஷனுல ஜெயலலிதாவ பாக்க கூட்டிக்கிட்டு போனோமே ஒரு கூட்டம். தனித்தனி ஆளா கூப்புட்டு சேர்த்து பெறகு அவுங்க இருக்குற அமைப்பெல்லாம் நம்மளோட சேர்ந்து வந்ததா பில்ட் அப் பண்ணுனப்பவே நம்ம சாயம் வெளுத்துப் போச்சு. இப்போ நாம கூப்டாலும் எவனும் வரமாட்டான். நம்மள எவனும் கூப்புடவும் மாட்டான். அம்மா மட்டும் தான் கதி.

என்ன ஒமர் பாய். இப்புடி சொல்லிட்டீங்க. அந்தம்மா பிஜேபி கூட கூட்டணி வப்பாங்க போல இருக்கே. அப்பவுமா நாம அம்மாவே கதின்னு நிக்க முடியும்.

வேற யாரு நம்மள சேத்துக்குவாங்க அஹமது. எது எப்புடி இருந்தாலும் அம்மாவே சரணம்னு கெடக்குறோம்கிறத போயஸ் தோட்டத்துக்கு தெரியப்படுத்துறதுக்காக தானே, மோடிய சாப்புட கூப்புட்ட ஜெயலலிதா வீட்ட முற்றுகை இடுவோம்னு சொல்லாம, மோடிய தமிழ்நாட்டுக்குள்ள நுழைய விட்ட கருணாநிதின்னு ஆர்ப்பாட்டத்தப்ப முதலமைச்சர எதுத்து கோஷம் போட்டோம்.

என்ன இருந்தாலும் கருணாநிதி நெனச்சுருந்தா, லாலு செங்சா மாதிரி மோடிய அரெஸ்ட் பண்ணி இருக்கலாம்ல.

என்ன அஹமது வெ வரங்கெட்ட தனமா பேசுறீங்க. அத்வானி ஒரு கூட்டத்த திரட்டிக்கிட்டு ஊர்வலம் போறதா வந்ததுனால சட்டம் ஒழுங்க காரணம் காட்டி அத்வானியோட சேர்ந்து கூட வந்த அத்தன பேரயும் கூண்டோட அரஸ்ட் பண்ணுனாரு நம்ம லாலு. ஆனா மோடியோட கத அப்புடி இல்லியே. இங்க இருக்குற சொவும், ஜெயலலிதாவும் கூப்டதுனால இங்க வர்ற ஒருத்தர எந்த அடிப்படைல அரெஸ்ட் பண்ணவோ, திருப்பி அனுப்பவோ முடியும்.

சரி நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கு. ஆனாலும் அமெரிக்காவே தட பண்ணின மோடிய தமிழகத்துலயும் தட பண்ணியிருக்கனும் தானே.

எப்புடி அஹமது முடியும். தமிழ்நாடு என்ன தனி நாடா. இந்தியாவுல இருக்குற ஒரு மாநிலம். அதுக்கு இந்தியாவுல வேற ஒரு மாநிலத்துக்கு முதல்வரா இருக்குற ஒருத்தன் வர்றத எப்புடி தடுக்க முடியும்.

அட ஆமாங்க. இத புரிஞ்சுக்காம போயிட்டேனே.

நீங்க மட்டுமில்ல அஹமது. நம்மாளுங்களுக்கு நம்ம தலைவரு எத எப்புடி சொல்றாரோ அப்புடிதான் வெளங்கும். அது உண்மைக்க மாத்தமா இருந்தாலும் அப்புடித்தான் வெளங்கிக்குவாங்க. அந்த தைரியத்துல தான் நம்மாளு வுட்டு அடிச்சுக்கிட்டு இருக்காரு.

கரெக்ட்டுங்க ஒமர்பாய். உண்மையிலேயே இவுங்க கருணாநிதிய கண்டிச்சு பேசுனதுக்கு பதிலா மோடிய கூப்பிட்ட சோவையோ, ஜெயலலிதாவயோ எதுத்து ஆர்ப்பாட்டமோ முற்றுக்கையோ நடத்தி இருந்தால் கொஞ்சமாவது நமக்கு மரியாதையாகவாவது இருந்திருக்கும்.

திரும்ப திரும்ப இந்த நெனப்பு வரக்கூடாதுங்குறதுக்காகத் தான், முன்னாலயுலாம் மோடிய தனியா எதுத்த தமுமுக இப்போ மட்டும் ஏன் கூட்டணி வச்சுக்கிச்சுன்னு வேற கௌப்பி வுட்டுருக்காரு. நாம இப்போ பேசிக்கிட்டா மாதிரி மோடிக்கு எதிரா தமுமுக போரட்டம் நடத்துனப்போ மோடி குஜராத்ல தான் இருந்தாரு. ஆனா இப்போ நம்ம ஏரியாவுக்கு வரும் போது நம்ம எதிர்ப்பு இன்னும் வலிமையா இருக்கணும்னா, மோடிக்கு எதிரான எல்லா சக்திகளையும் ஒரு முனைப்படுத்தி மோடி ஒரு மனித குல விரோதின்னு எல்லோருக்கும் புரிய வைக்கணுமா இல்லியா அப்புடீன்னு தமுமுக காரங்க சொல்றது நியாயமா படுது.

இந்த போராட்டத்துல கலந்துகிட்டவங்கன்னு மக்கள் உரிமைல செய்தி போடுறப்ப, ஹைதர் அலி பேரப்போட்டு தமுமுக பொதுச் செயலாளர்ன்னோ, வக்ப் வாரிய தலைவர்ன்னோ போடாம, சிறுபான்மையினர் அமைப்பு தலைவர்னு போட்டிருக்காமே. உண்மையா?

உண்மை தான். இதுல என்ன கொற இருக்கு அஹமது. அவரு சிறுபான்மையினர் அமைப்பு தலைவரா இருக்குறதுனால தான அப்புடி போட்டிருக்காங்க. இல்லாத பதவிய போடலையே. தவிர தமுமுக சார்பா ஏ.எப்.எப் முன்னணியில தமுமுக தலைவர் கலந்துகிட்டு இருக்கும் போது, ஹைதர் ஏன் தமுமுக சார்பா கலந்துக்கணும். அல்லது சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பா ஏன் கலந்துக்கக் கூடாது. இதுக்கும் வாரிய தலைவர் பதவிக்கும் ஏன் முடிச்சுப் போடணும்னு யோசிச்சாலே நம்மாளு இந்த வாரியத்துனால எப்புடி வெந்து நொந்து நூடுல்ஸா போயிருக்காருன்னு புரிஞ்சுடும்.

இன்னொன்னுங்க ஒமர் பாய். அதாவது ஏ.எப்.எப் கூட்டணி பேர்ல நடத்துன முற்றுகை போராட்டத்துல கலந்துகிட்ட மொத்த பேரையும் அதுல பங்கு பெற்ற அமைப்புகள் எண்ணிக்கைய வச்சு வகுத்துப் பாத்தா தமுமுக ஆதரவாளர்கள்னு 100 பேரு கூடத் தோறதுன்னு வேற எளுதியிருக்காரே.

சரியாப்போச்சு போங்க. நம்மாளு ஜெயலலிதா கூட சேர்ந்த பெறகு எதார்த்தத்தை புரிஞ்சுகவே முடியாதவரா ஆகிப் போயிட்டாரு போல. அப்போ என்னடான்னா கும்பகோண கூட்டத்தப்பத்தி ஆளாளுக்கு 10இல இருந்து 18 இலட்சம் வரைக்கும் கதையளந்தாங்களே. அப்ப அத நியாயப்படுத்த கும்பகோணம் சிட்டி மேப்பை எடுத்து வச்சுகிட்டு, ஒரு ஆள் நின்னா இத்துன சதுர அடி, மொத்த பரப்பளவு இத்துன சதுர அடி ஆக மொத்தம் அங்கு நின்னது நிச்சயமா 10க்கு மேலன்னு ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போட்டு காம்பிச்சாரு. அதையே ஜெயலலிதா முன்னால, கைய கவட்டுக்குள்ள வச்சுக்கிட்டு ஒரு இலட்சம் பேர் கூடுனாங்கன்னு சுரத்தில்லாம சொன்னது வேற விஷயம். அப்போ பெருக்கிப் பாத்தவரு இப்போ வகுத்துப் பாத்திருக்காரு போல.

சரி சரி எனக்கு புரிஞ்சுடுச்சு. இன்னும் ஒரே ஒரு சந்தேகம். தமுமுக காரங்க நம்மளப் பத்தி அதாவது நம்ம தலைவரப் பத்தி இல்லாததையும், பொல்லாததையும் எளுதுறதுனால தான் நம்மளோட டிவி நிகழ்ச்சிகள்ல அவுங்கலப்பத்தி பேசுனதா ஒரு கேள்வி பதில்ல எளுதி இருக்காரே. நெசமாவா.

அடப்போங்க அஹமது. நம்மாளு தவ்ஹீத சொல்லுவாரு. மக்களுக்கு மார்க்கத்த வெளங்க வைப்பாருன்னு நம்பி நம்மள மாதிரி ஆளுங்க நன்கொடையும், செல முதலாளிங்க விளம்பரமும் தந்தாங்க. ஆனா அதுல முக்காலே மூணு வீசம் நம்மாளு தமுமுகவ திட்டுறதுக்கும், மத்தவங்கள ஏசுறதுக்கும் தான் பயன்படுத்துறாரு. அதுனால இப்பல்லாம் நம்மாளுங்களே நம்ம டிவி நிகழ்ச்சிகள பாக்குறதுமில்ல, அதுக்கு நன்கொட தர்றதுமில்ல. அதுனால தான இப்புடி ஒரு கேள்வி பதில். இத படிச்ச வுடன ஏதோ கொஞ்ச பேராச்சும் இத நம்பி நன்கொட குடுப்பான் பாருங்க. அதுக்காகத்தான்.

உண்மைதான் ஒமர் பாய். நானும் கூட இப்ப நம்ம டிவி நிகழ்ச்சிகள பாக்குறதில்ல. அதுலயும் குறிப்பா நம்ம பாக்கரு வந்து மார்க்கம் பேசுறாரு பாருங்க. அதப் பாத்தாலே நமக்கு டென்ஷன் ஆகிறது. நம்ம வீட்லயும் என்னங்க இவரு மேல பொம்புள விவகாரம்னீங்க. இப்ப இவர வச்சு மார்க்கத்த சொல்றோம்கிறீங்களே. வெக்கமாயில்லயான்னு கேக்குறாங்க. அதான் ஏன் வம்புன்னு நம்ம நிகழ்ச்சிகள போடுறதே இல்ல.

சரி சரி அஹமது. ரொம்ப நேரமாயிடுச்சு. பெறகு சந்திப்போம். வர்றேன்.

வஸ்ஸலாம்
முல்லா 31.01.2008

(குறிப்பு: ஒமரின் கூற்று சாய்ந்த எழுத்திலும், அஹ்மதின் கூற்று கொட்டை எழுத்திலும் படிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறது.)