Sunday, October 26, 2008

மாலேகான் குண்டுவெடிப்பு

மாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட
"சங்' பயங்கரவாதிகள் சிக்கினர்!


ஸப்ரன் ஹபீப்




(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)


மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதிகளின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.


செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித் தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடா சாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


ரமலான் மாதத்தில் ஈகைத் திருநாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன. செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலேகானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலியானவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது. சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.


இதில் நேர்மையான வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். சங்பரிவார பயங்கரவாத இயக்கங்களின் சதி பின்னணியில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருவது நாடறிந்த ஒன்று.


இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்புகளின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.

இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்-க்கு நெருங்கிய தொடர்புடைய “ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்’’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.


விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.


உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற தேசத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.


(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)


நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.


நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணி யில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.


இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

நன்றி: தமுமுகவின் இணையதளம்

Thursday, October 16, 2008

சிறைவாசிகளோடு ஈகைத் திருநாள்

ஈகைத் திருநாளை சிறைவாசிகளோடு கொண்டாடிய

வேலூர் தமுமுகவினர்!

நமது செய்தியாளர்

வேலூர் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய வேலூர் மத்திய சிறைச் சாலை மற்றும் மகளிர் சிறைச்சாலை. இங்கே இருக்கக்கூடிய முஸ்லிம் கைதிகளுக்கு ஆண்டுதோறும் ரமலான் மாதம் நோன்பு நோற்பதற்கும், நோன்பு திறப்பதற்கும் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கடந்த சில ஆண்டுகளாக தமுமுகவின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட அவர்களுக்கு புத்தாடையும், பிரியாணி சமைப்பதற்கான உணவுப் பொருட் களும் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த உதவியை சிறை அதிகாரி களின் ஒத்துழைப்போடு உரிய அனுமதி பெற்று முஸ்லிம் கைதிகளிடம் நேரடி யாகக் கொடுத்து வந்தனர். சிறைக் குள்ளேயே முஸ்லிம்கள் ரமலான் நேரத் தில் சொந்தமாக சமைத்து சாப்பிடு வதற்கு பிரத்யேகமாக தனி இடம் ஒதுக்கப்பட்டு தரப்படுகிறது. கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பொருட் களை வழங்க சில அதிகாரிகள் சிறப்பு அனுமதி வழங்க மறுத்ததால் பல இன்னல்கள் ஏற்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முறையான அனுமதி தமுமுக தலைமைக் கழகத்தின் மூலம் சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் அவர்களிடம் பெறப்பட்டது.


மேலும் முஸ்லிம் சிறைவாசிகளின் விருப்பத்தின் அடிப்படையிலும், வேலூர் சிறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலும் இந்த ஆண்டு ரமலான் பெரு நாளன்று சிறைவாசிகள் அனைவருக் கும் சிறப்பு பிரியாணி உணவு வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு, அதனடிப்படையில் சிறைத்துறை டி.ஜி.பி. அவர்களிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து இரண்டு சிறைச்சாலை யிலும் உள்ள சிறைவாசிகள், ஊழியர் கள், பயிற்சி ஊழியர்கள், அதிகாரிகள் என்று சுமார் 2000 பேருக்கான உணவு தயாரிக்கும் பணி கள் முடுக்கிவிடப்பட்டன.

முன்னதாக அதிகாலை சுபுஹ் தொழுகையை முடித்தவர்களாக வேலூர் மாவட்ட, மாநகர, வார்டு கிளை நிர்வாகிகள் சுமார் 30 பேர் கொண்ட குழு சிறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டு, சிறை வளாகத்திலேயே பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் உணவு தயாரிக்கும் பணி உடனடி யாகத் துவங்கியது. சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஜெயிலர், துணை ஜெயிலர், உளவுத்துறை அதிகாரி கள் பலரும் இப்பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர்.

பகல் சுமார் 2 மணியளவில் ஜெயிலர் கருப்பையன் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஏஜாஸ் அஹமத், மாவட்ட உலமா அணி செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில தொழிலாளர் அணி செய லாளர் ஜே. அவுலியா ஆகியோருடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணி துவங்கியது. குறித்தபடி மகளிர் சிறை உட்பட அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

இறுதியாக சிறை கண்காணிப்பாளர் மற்றும் ஜெயிலர் ஆகியோர் தமுமுக தொண்டர்களை அழைத்து, டி.ஜி.பி. யின் வாழ்த்துக் கடிதத்தையும், நன்றி யையும் வெளிப்படுத்தி, தமுமுகவின் ஈடு இணையற்ற சேவையைப் பாராட்டினர்.

சிறைவாசிகளோடு இந்த ஈகைத் திருநாளைக் கொண்டாடி மகிழ அரிய வாய்ப்பை நல்கிய சிறைத்துறை அதிகாரிகளுக்கும் மாநில, மாவட்ட கழகத்தின் சார்பாக சகோ. ஜே. அவுலியா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

புதிய சரித்திரம் படைத்த நிம்மதி யோடு, ஈத் பெருநாளை நிறைவாகக் கொண்டாடிய மன நிறைவுடன், மனைவி மக்களையும், பெற்றோரையும் சந்திக்க ஆர்வமுடன் தமுமுகவினர் புறப்பட்டுச் சென்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமுமுக நிர்வாகிகளுக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொண்டனர்.

சமத்துவ மகிழ்ச்சி


சிறைவாசிகளைப் பிரியும் போது கண்ணீர் மல்க வழியனுப்பியதுடன், உயர் வகுப்பு - கீழ் வகுப்பு என்ற அடிப்படையின்றியும், சாதி மத பேதங்கள் இல்லாமலும் எல்லோருக்கும் சமமான முறையில், திருப்தியான அளவுக்கு உணவு பரிமாறியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.


27 ஆண்டுக்கும் மேலாக ஆட்டுக் கறி சுவையை அறியாதிருந்த நாங்கள் இன்று அந்த வாய்ப்பை பெற்றோம் என்று ஒரு சிறைவாசி மகிழ்ச்சியுடன் கூறினார்.

தூய்மையான மஸ்ஜித்


தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைச் சாலைகளில் வேலூர் மத்திய சிறைச் சாலையில் மட்டும்தான் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மஸ்ஜித் இடம் பெற்றுள்ளது. சுமார் 100 பேர் தொழும் வசதியுள்ள இம்மஸ்ஜித் தண்ணீர், கழிவறை, மின் விசிறி உள்ளிட்ட வசதிகளுடன் மிகத்தூய்மையாக பராம ரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கவலை மறந்து கண்ணீர் துறந்தனர்


தமுமுக நிர்வாகிகளும் - முஸ்லிம் சிறைவாசிகளும் இணைந்து ஈத் பெருநாள் சிறப்புத் தொழுகையை இங்குள்ள மஸ்ஜிதில் தொழுதனர். வேலூர் மாவட்ட உலமா அணிச் செயலாளர் மவ்லவி சம்சுதீன் நாசர் உமரி அவர்கள் தொழுகை நடத்தி குத்பா பேருரை ஆற்றினார். இறுதியில் ஹ வகுப்பு தண்டனைக் கைதி சகோ. மவ்லவி ஃபஜ்லி பாய் கூறுகையில், ஒவ்வொரு ஈத் நாட்களிலும் குடும்பத் தினரை நினைத்து கண்ணீரோடு தக்பீர் முழக்கமிடும் சிறைவாசிகள், தமுமுக சகோதரர்களின் வருகையால் அவற்றை மறந்து குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வுடன் இருப்பதாகவும், தமுமுகவைத் தவிர வேறு எந்த அமைப்புகளும் தங்களைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.

நன்றி: தமுமுகவின் இணையதளம்.

Saturday, October 11, 2008

குமுதம் டாட் காமில் டாக்டர் ஜவாஹிருல்லாஹ்

ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சி (ஆன்லைன் வீடியோ)

டாக்டர் ஜவாஹிருல்லாஹ்

http://www.kumudam.com/webtv_streaming.php?leftid=7&catid=87&type=Astrology#

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆபத்தா? அனல் பறக்கும் விவாதம் (ஆன்லைன் வீடியோ)

ராதா ராஜன் மற்றும் டாக்டர் ஜவாஹிருல்லாஹ்

http://www.kumudam.com/webtv_streaming.php?leftid=2&catid=66&type=Politics#

குமுதம் டாட் காம்

இந்த நிகழ்ச்சிகளை காண முதலில் குமுதம் டாட் காமில் இலவச சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் சுலபமானதாகும்.