Thursday, September 28, 2006

முஃமின்களின் தாய்மார்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ


'இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கிறார், இன்னும் அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருகின்றனர். (அல்குர்ஆன் 33:06)

சென்ற ரமளானில் (2005) 'அந்த 72 கூட்டத்தினர்' என்ற பெயரில் சிறந்த காலகட்டத்தில் வாழ்ந்த நபித்தோழர்களை 'ரவுடி', 'கிரிமினல்', 'பதவி ஆசை பிடித்தவர்' என்றெல்லாம் கொச்சைப்படுத்திய பின் இந்த வருடம் அவரது பினாமியான ததஜவின் பாக்கர் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களை தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளார்.

'அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்' என்ற தலைப்பில் பேச ஆரம்பித்த பாக்கர், நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்த அத்தனை பெண்களும் கிழவிகள் ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர, என்று கூறினார்.

இவரது இலக்கணப்படி கிழவிகள் என்ற நிலை எத்தனை வயதிலிருந்து ஆரம்பமாகிறது? 45ஆ? 50ஆ?

சரி! அதிகபட்சமாக ஐம்பது என்றே வைத்துக் கொள்வோம். பாக்கர் வேண்டுமானால் ஐம்பதை தாண்டாதவராக இருக்கலாம். அவரது அருமை அண்ணன் பிஜே ஐம்பதுக்கு மேல் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அந்த பிஜேயை அவர் கிழவர் என்றோ கிழவன் என்றோ இந்த பாக்கர் மேடை போட்டு சொல்வாரா?

நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் நபி (ஸல்) அவர்களோடு வாழ்ந்தவர்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கங்களை அவர்களிடமிருந்து தான் பெற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவர்களின் விளக்கங்களை விட தனது விளக்கங்கள் தான் சிறந்தது என்பதை விலைகூறி விற்பதற்காக புறப்பட்டு விட்ட பிஜே போன்றவர்கள் சஹாபாக்களை ஷியாக்களுக்கு நிகராக விமர்சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

முதலில் சஹாபாக்கள் விமர்சிக்கப்பட்டார்கள் இப்பொழுது இறைவனின் வாக்குக்கு எதிராக முஃமின்களின் தாய்மார்களை கிழவிகள் என்று சொல்ல இந்த முஸ்லிமு(?)க்கு எங்கிருந்து தான் துணிச்சல் வந்ததோ?

இந்த நிலை இன்னும் மோசமாவதிலிருந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

போயஸ் தோட்டத்து பொன்மகள், பிரபல சினிமா நடிகை, பலரோடு ஆடிப்பாடி நடனமிட்ட நடனதாரகை ஜெயலலிதா முன்பு கூனிக்குறுகி நின்று கொண்டு உங்கள் ஆட்சியில் தான் நாங்கள் நிம்மதியாக சுவாசித்தோம் அம்மா!(???????) என்று சொன்ன பாக்கரின் வாய் முஃமின்களின் தாய்மார்களை 'எங்களது தாய்மார்கள்' என்று சொல்ல வாய் கூசுகிறதோ?

துணிச்சலிருந்தால் அரசியல் அதிகாரம் பிடுங்கப்பட்டு செத்த பாம்பாகிப்போன ஜெயலலிதாவை கிழவி என்று பொதுமேடையில் பாக்கர் சொல்லிப் பார்க்கட்டும், அது எமது ஊர் வழக்கு என்றும் சொல்லட்டும். அவர் என்ன நிலைக்கு ஆளாவார் என்பதை அடுத்த நிமிடமே கண்டு கொள்வார். ஆனால் முஃமின்களின் தாய்மார்களை கிழவிகள் என்று பலமுறை மேடைபோட்டு கூறிவிட்டு, உலகமெங்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விட்டு, எந்த கூச்சமோ பயமோ இன்றி தமிழகத்தில் உலாவர முடியும். ஏனெனில் தமிழக முஸ்லிம்கள் சொரணையின்றி இருக்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ளார் பாக்கர்.

முஸ்லிமுக்கு உதராண புருஷராக திகழ வேண்டிய தவ்ஹீத்(?)வாதி பாக்கர் வாயிலிருந்து 'தே......மகனே' என்ற வார்த்தை வெளிவருகிறது, அதை ஒரு மேடையில் வைத்து 'ஆம் நான் அப்படித்தான் சொன்னேன்' என்று ஊர்ஜிதம் செய்கிறார். அவ்வாறான வார்த்தையை பயன்படுத்தியது 'தவறு' என்பதை மூதறிஞர்(?) பிஜே கண்டிக்க வில்லை, ஆனால் நியாயப்படுத்தினார் என்ற வரலாற்றை நாம் மறக்க வில்லை.

கூவப்பகுதியிலும் சேரிப்பகுதியிலும் வசிப்பவர்கள் இப்படிப்பட்ட வாசகங்களை தங்களுக்குள் சர்வசாதாரணமாக பயன்படுத்திக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் கூட கண்ணியமானவர்கள் என்று பிறரை கருதினால் அவர்கள் முன்பு இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வார்கள். ஆனால் பாக்கர் அவர்களை விட மோசமானவர் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்கள் பற்றியும், அவர்களது தோழர்களான சஹாபாக்கள், சஹாபியப் பெண்கள், மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைமார்களான முஃமின்களின் தாய்மார்கள் பற்றி ஏதேனும் தரக்குறைவான விமர்சனங்கள் இனியும் ததஜவினரிடமிருந்து வந்தால் பொதுமக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லி வைக்கிறோம்.

பாவ மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படும் இந்த ரமளானிலாவது தான் முன் செய்த தவறுகளுக்கு பகிரங்கமாக அல்லாஹ்விடத்திலும் சமுதாய சொந்தகளிடத்திலும் மன்னிப்புக் கோர பாக்கர் தயாராகட்டும். இல்லையேல் இம்மையிலும் மறுமையிலும் இழிவை சந்திக்கட்டும்.

'யார் நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்'. (அல்குர்ஆன் 2:161)

இப்னு ஃபாத்திமா 28.09.2006

Tuesday, September 26, 2006

Is Terrorism a muslim monopoly? By Dr.Zakir Naik


உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 3

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

வஅலைக்கு முஸ்ஸலாம். வாங்க உமர் என்ன சோர்வா இருக்குறாப்ல இருக்கு. தல நோன்புன்னா?

அதெல்லாம் இல்லீங்க அஹமது பாய். நம்மளப் போட்டு பின்னி எடுக்கிறாங்க அதான் கொஞ்சம் டயர்டா இருக்கேன்.

என்ன உமர் ! யாரும் உங்கள டார்ச்சர் பண்றாங்களா. அதுக்கு ஏன் நீங்க கலங்குறீங்க. நம்ம தலமைல சொல்லி ஏதாவது ஆர்ப்பாட்டம் நடத்தி நம்ம பொதுச் செயலாளர் பாக்கர வுட்டு கலக்கிறலாமே.

என்னங்க அஹமது அலி. உண்மையிலேயே வெவரம் எதுவும் தெரியாம தான் பேசுறீங்கள. இல்ல நீங்களும் என்னய கிண்டல் பண்ணிப் பாக்குறீங்களா.

சே! சே! அப்புடியெல்லாம் தப்பா நெனக்காதீங்க. வெவரத்தை சொல்லுங்க.

என்னத்த சொல்றது. ஜெயலலிதா ஆண்டிப்பட்டில பேசுன இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுக்கே நாம என்ன சொல்றதுன்னு புரியாம வாயடச்சு போய் நின்னோம். இப்போ என்னடான்னா நம்ம பாக்கர் இங்க துறைமுகம் மீட்டிங்ல பேசுனத வச்சு தமுமுககாரன் கொடயுறான்.

அப்புடி என்னதான் சொன்னாரு நம்ம பொதுச் செயலாளரு?

'அன்றய பெண்களும் இன்றய பெண்களும்' ன்னு ஒரு தலைப்புல பேசும் போது நபி (ஸல்) அவுங்களோட மனைவிமார்கள கௌவிகள்ன்னு சொல்லிட்டாரு. அதப்போயி கவனிச்சு இப்போ பெரும் பிரச்சன பண்றானுவ.

இது என்னங்க இது அநியாயமா இருக்கு. அவரு ஏதோ பேச்சு பராக்குல ஒரு தடவ சொல்லியிருப்பாரு இதயுலாமா பெரிசுபடுத்துவாங்க.

அப்படியும் சொல்ல முடியாது அஹமது அலி. நம்மாளு பாக்கரு மருபடியும் மருபடியும் கௌவிகள் தான்னு சொல்றத நானே கேட்டேனே.

அடடா. அப்டீன்னா - தெரியாம பேசிட்டேன் ஸாரின்னு பாக்கர் சொல்லிற வேண்டியது தானே. அது எப்படிங்க முடியும், இன்னைக்கி இத ஒத்துக்கிட்டா, இப்புடி ஒவ்வொண்ணா தமுமுககாரன் கேக்குறதயெல்லாம் ஒத்துக்கிட்டு போவச் சொல்லுவீங்க போல இருக்கே. வரவர நீங்க யாரும் அவனுகளுக்கு பதிலே எழுதுறதில்லை. நான் ஒருத்தன் மட்டும் கெடந்து மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இதுல ஏந்தான் மூக்க நொளச்சோமோன்னு இப்ப கவலையா இருக்கு.

அட இதுக்குப் போயி கவலைப்படலாமா? அண்ணன் பிஜேட்ட சொன்னா, வசமா குர்ஆன் ஹதீஸோட இந்த பிரச்சனய எடுத்துப்போட்டு, அதுக்கு சம்பந்தமில்லாத வெளக்கத்த குடுத்து சுத்திவுட்டுட மாட்டாரா. அல்லது வழக்கம் போல தமுமுககாரன் பேர்ல என்னமாவது ஒரு கப்ஸாவ அவுத்து வுட்டுட மாட்டாரா. நீங்க கவலப்படாம அவருக்கு போன் போட்டு பேசுங்க.

ஹ்ஹா..... அஹ்மது பாய். இதுவும் கூட அந்த தமுமுககாரனுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல. அப்துல்லாஹ்ங்கிறவர் எழுதியிருக்குற மெயில்ல, உளறுவாய் உமரோ (அதாவது என்னயத்தான்) அல்லது அவருக்கு எழுதிக் குடுப்பவரோ அல்லது எழுத அனுமதிப்பவரோ (அதாவது பிஜேவ) அப்டீன்னு எழுதியிருக்காரு. இதாவது பரவாயில்ல. எப்போதும் போல கண்டுக்காத மாரி விட்டுடலாம். ஆனா வேற ஒரு கேள்வி கேட்டுருக்கானுக பாருங்க. நாமெல்லாம் மூட்ட முடிச்ச தூக்கிக்கிட்டு எங்காவது அகதியா போயிரனும்.

அட ஏன் அலுத்துக்கிறீங்க, அப்டி என்ன கேட்டுட்டானுவ.

உம்மஹாத்துல் முஃமீன்களை தரக்குறைவாக பேசி, அதனை கொஞ்சங்கூட வெட்கப்படாமல் உலகம் முழுவதும் டிவி இல் ஒளிபரப்பிய நீ, பெட்டி வாங்கிக் கொண்ட நன்றிக்கடனாக நாடறிந்த நடிகையான ஜெயலலிதாவை பொதுமேடையில் மிக பணிவாக, மரியாதையாக அம்மா என்று அன்போடு அழைக்கிறாயே, தைரியமிருந்தால் பொதுமேடையில் ஜெயலலிதாவை கௌவி என்று குறிப்பிட்டு பேச முடியுமா - இது பயங்கரவாதி பாக்கருக்கும் உளறுவாய் உமருக்குமான சவால்னு எழுதி மெரட்டுறானுக.

சரி சரி உமர் பாய் எனக்கு வேலையிருக்கு நான் வர்றேன்.

வஸ்ஸலாம்

முல்லா 26.09.2006

Sunday, September 24, 2006

ததஜ உமரின் குடியிருப்பு கூவத்தில்....

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

உ.உ.கூ.உமர் உளறுவாய் மட்டுமல்ல தான் ஒரு பினாமி என்றும் நிரூபித்துள்ளார்.

முகவைத் தமிழனுக்கு, கான் சாயபு எழுதிய கடிதத்தில், தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவின் கடந்த கால ஓட்டங்களைத் தான் நினைவுபடுத்தினாரே அல்லாமல் இதனை காரணம் காட்டி, முகவைத் தமிழனை ஓடி விடுமாறு உபதேசம் செய்ய வில்லை.

யாரோ ஒருவரின் மெயிலை காரணம் காட்டி ஓடிவிடுவதும், தள்ளி வைப்பதும் கிரிமினல் பிஜேவுக்குத் தான் கை வந்த கலை. அதேபோல் பிஜேக்காகவும் பாக்கருக்காகவும் பதில் எழுதும் உளறுவாய் உமர் தானொரு பினாமி என நிரூபித்துத்துள்ளார். தன்னுடைய பாரம்பரியத்தை மறைக்காமல், தான் இருக்குமிடத்தை தெளிவான தலைப்பாக்கிய உளறுவாய் உமருக்கு வாழ்த்துக்கள்.

கூவம் நதிக்கரையினிலே என தலைப்பிடப்பட்ட அவரது இந்த இடுகை கிரிமினல் பாக்கர், நமது மதிப்பிற்குரிய உம்மஹாத்துல் முஃமினீன்களை தரக்குறைவாக விமரிசனம் செய்தது தொடர்பாக முகவைத் தமிழன் கான் சாயபு போன்றோர்களின் கேள்விக் கணைகளுக்கான பின்னூட்டமாகும்.

ஆனால் உளறுவாய் உமர் தனது கிரிமினல் தலைவன் பிஜேயின் சுன்னத் படி, வேறு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டு, விவாதப் பொருளிலிருந்து பிறர் கவனத்தை திசை திருப்ப பெருமுயற்சி செய்துள்ளார்.

அதனால் தான் நெல்லை ஜெபமணி விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். நெல்லை ஜெபமணி அல்ல நமது விவாதப் பொருள். எனவே கிரிமினல் பாக்கரின் பயங்கரவாத பேச்சிற்கு உளறுவாய் உமர் என்ன சொல்லப் போகிறார்.

பயங்கரவாதி பாக்கர் பேசியது தவறு, பிழையாக வாய் தவறி வந்துவிட்ட வார்த்தை என ஒப்புக் கொண்டு, சமுதாய மக்களிடம் மன்னிப்புக் கேட்கப் போகிறாரா?

அல்லது, உளறுவாய் உமர் சப்பைகட்டு கட்டியதைப் போல், அவ்வாறு பேசுவது தனது வழமை என்று ஒப்புக் கொள்ளப்போகிறாரா. அவ்வாறு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், உளறுவாய் உமர், ஜெத்தா செய்தியாளர் தீன் முஹம்மது போன்ற கள்ள விசுவாசி என ததஜ தலைமை உளறுவாய் உமரை மறுக்கப் போகிறார்களா?

அல்லது,

இப்னு ஃபாத்திமா வேண்டுகோள் விடுத்துள்ள படி, பொது மேடையிட்டு, போயஸ் தோட்டத்து பொன்மகளை கிழவி என்று விமர்சிக்கப் போகிறார்களா.

ஒரு முன்னாள் நடிகையிடம், நாடறிந்த .......... யிடம் மண்டியிட்டு தண்டனிட்டு தாள் பணிந்து, 'பெட்டி' வாங்கி பெட்டிப்பாம்பாக ஒடுங்கி, கையது கொண்டு மெய்யது பொத்தி பவ்யமாக அம்மா என்று அழைப்பவர்கள் இதற்கு முன்வருவார்களா.

அல்லது, கான் சாயபு குறிப்பிட்டதைப் போல, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஒடப்போகிறார்களா.

பொறுத்திருந்து பார்ப்போம்.

-ராவுத்தர் 24.09.2006

Thursday, September 21, 2006

ததஜ உமரின் உளறல்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

உண்மைக்கும் உ.உ.கூ உமருக்கும் ஊசி முனை அளவு கூட சம்பந்தம் இருப்பதில்லை என்பது உலகறிந்த உண்மையாகிக் கொண்டுள்ளது.

உ.உ.கூவின் சமீபத்திய மெயல் இவ்வகையில் மற்றுமொரு ஆதாரமாக திகழ்கிறது.

http://tmpolitics.googlepages.com/bakarreply.doc

உளறுவாய் உமரின் (உபயம்: கான் சாயபு) தடுமாற்றம் தலைப்பிலிருந்தே துவங்குகிறது.

'களியக்காவிளையிலிருந்து காத்தான்குடி வரை' - இது முகவைத்தமிழனின் இணையத்தில் வெளியான கட்டுரையின் தலைப்பு.

ஆனால் உ.உ.கூ உளறுவாய் உமர் இதனை 'இலங்கை டூ காத்தான்குடி' என தலைப்பிட்டிருப்பதாக கதைக்கிறார். கொட்டை எழுத்துக்களில் உள்ள தலைப்பையே மாற்றிச் சொல்வதாக இருந்தால், எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரராக இருப்பார் என விளங்கிக் கொள்ளலாம். இந்த இலட்சணத்தில் இவர் மற்றவர்களை கோமாளி என்றும், பைத்தியக்காரன் என்றும் பட்டப்பெயர் சூட்டி எழுதும் கேவலம்.

உளறுவாய் உமரின் அடுத்த உளறல்.

'ஒரு நாட்டிலிருந்து வெளியாகக்கூடிய ஒரு ஊடகத்தில், அடுத்த நாட்டின் செய்தியைத் தரும்போது சம்பந்தப்பட்ட நாட்டின் தலைநகரை இணைத்தே செய்தி தருவார்கள். அதனடிப்படையில் இலங்கையில் உள்ள காத்தான்குடி முஸ்லிம் ஜமாஅத்தை 'இலங்கை ஜமாஅத்' என்று குறிப்பிட்டது.

உளறுவாய் உமர் தன்னுடைய இஷ்டம் போல் எழுதுவதில் அவரது தலைவன் கிரிமினல் பிஜேவை பின்னுக்கு தள்ளக்கூடியவர்.

முதலில் இந்த பில்ட்அப் செய்தி வெளியானது ஆன்லைன்பிஜே டாட் காமில். அதற்கு பொழிப்புரை எழுதப் புறப்பட்டவர் தான் இந்த பொய்யாமொழி உளறுவாய் உமர். முன்பே இத்தளத்தில் முத்துப்பேட்டை டாட் பிளாக்ஸ்பாட் டாட் காமில் ஒரு கேள்வி வெளியாகி இருந்ததை மீண்டும் நினைவுபடுத்தியது உமரின் இந்த செயல்.

அந்த கேள்வி என்னவென்றால், பிஜேவின் சார்பாக, களவாடிய உணர்வின் சார்பாக பதில் எழுதிக் கொண்டிருக்கும் இந்த உமர் பிஜேயின் பினாமியா அல்லது தீன் முஹம்மது போன்ற ததஜவின் கள்ள விசுவாசியா? -இதற்கு இன்று வரை பதில் இல்லை.

சரி விஷயத்திற்கு மீளுவோம். உளறுவாய் உமரின் கொள்கைப்படி காத்தான்குடி முஸ்லிம் ஜமாஅத்தை சம்பந்தப்பட்ட நாட்டின் தலைநகரோடு இணைத்து செய்தி தருவதாக இருந்தால், கொழும்பு முஸ்லிம் ஜமாஅத் என்றல்லவா வெளியாகி இருக்க வேண்டும். நாம் மட்டுமல்ல உலகிலுள்ள அனைவருமே இலங்கையின் தலைநகர் கொழும்பு என்று தான் விளங்கி வைத்துள்ளனர். ஒருவேளை ததஜவின் ஆய்வாளர் கிரிமினல் பிஜே சவுதியில் மேற்கு கரையிலுள்ள யான்புவை கிழக்கு கரைக்கு மாற்றியதைப் போல், இலங்கையின் தலைநகர் இலங்கை எனும் புதிய சிந்தாந்தமோ?

ஒருவேளை எந்த ஊர் தவ்ஹீத் ஜமாஅத் சொத்தாக இருந்தாலும் அதனை தமிழ்நாடு தவ்ஹீத் சொத்து என சொந்தம் கொண்டாடி அபகரித்து வருகிறார்களே அந்த அடிப்படையில் இதனை குறிப்பிட்டிருப்பாரோ என்னவோ?

அடுத்த உளறல், ஆனால் உண்மை.

'களியக்காவிளை விவாத சிடி............உலக மக்களை தட்டி உசுப்பியது..........'

தட்டி உசுப்பியது உண்மைதான். ஆனால், எந்த வகையில் என்பதில் தான் அவரது அறியாமை அடங்கியுள்ளது.

சிடியைக் கண்டவர் கிரிமினல் பிஜேவை காரி உமிழ்ந்ததையும் மனைவி, மக்களோடு கண்டு வந்த தமிழன் டிவியில் பிஜே நிகழ்ச்சிகளை பெரும்பான்மையானோர் கை விட்டதையும், சின்னத் திரை ஹீரோ இமேஜ் இதனால் சிதைவுறுவதையும் கண்ட பயன் தான் காத்தான்குடி ஜமாஅத் - இலங்கை ஜமாஅத்தாக பதவி உயர்வு பெற்றது என்பதனை அறிவுள்ளவர்கள் புரிந்து கொண்டார்கள்.

அடுத்த உளறல்:

முன் கட்டுரை எழுதியவர் 'இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரர்' என குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி, ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவரை இலங்கைவாசி எனும் பொழுது காத்தான்குடி ஜமாஅத்தை இலங்கை ஜமாஅத் என ஏன் குறிப்பிடக் கூடாது என அறிவுப்பூர்வமாக (?) வாதிடுகிறார்.

பாவம். தொண்டிவாசியை தமிழ்நாட்டுக்காரர் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தொண்டி ஜமாஅத்தை, தமிழ்நாட்டு ஜமாஅத் எனக் குறிப்பிடுவது தவறு என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாதவராக இருக்கிறாரே என பரிதாப்படலாம். அல்லது நேர்வழி கிடைக்க துஆச் செய்யலாம்.

உமரின் உளறல்கள் முடிவதில்லை. தொடராக குறிப்பிடுகிறார், 'சத்தியமார்க்கத்தை ஓரிடத்தில் எத்தி வைத்து விட்டால், அது செல்ல வேண்டிய இடங்களுக்கு தானாக சென்றுவிடும்' -

- இதுவும் கற்பனையாகும். தானாக எதுவும் செல்லாது. அதிலும் குறிப்பாக சத்திய மார்க்கம் தானாக பரவாது. நபி (ஸல்) அவர்களது போதனைகளையும், அல்குர்ஆனையும் சுமந்த ஸஹாபிகள் உலகில் பரவிச் சென்றதால் தான் இஸ்லாம் உலகமெங்கும் பரவியது. நபி (ஸல்) அவர்களின் வாக்குகளையும், இறைவேதத்தையும் எத்தி வைப்பதற்கே இந்த நிலை எனில்...........

ஆனால் இன்றைக்கும், வரையறுக்கப்பட்ட சிலருக்கு அனுப்பப்படக்கூடிய மெயில்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் படிப்பதாக பாசாங்கு செய்யும் சிலர் இருக்கிறார்கள். அத்தகையோர் அல்லது உண்மை எழுந்து நிற்கும் முன் பொய் உலகை வலம்வந்து விடும் எனும் முதுமொழிக்கேற்ப செயல்படும் ஷைத்தானின் தோழர்கள், இத்தகையோர் மூலம் பொய்கள் வேகவேகமாக பரப்பப்பட்டு பின்னர் அவை குறித்த விசாரணைகள், கேள்விக் கணைகள் எழுப்பப்படும் போது அலட்சியமாக, அல்லது திசை திருப்பும் விதமாக உளறிக் கொட்டுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

அந்த வகையிலான ஓர் உளறலே உமரின் இந்த வாதமும்.

உமரின் திரிபு வாதத்திற்கு மற்றொரு சான்று:

கிசுபுள்ளா பாக்கர் என்றால் கிசுகிசுக்கப்படும் புள்ளையாண்டான் பாக்கர் என்பது பொருள், ஆனால் உமரோ அதற்கு ஹிஸ்புல்லாஹ் என்று திரித்து பொருள் கூறுகிறார். இதிலும் அவர் திருகுதாளம் செய்ய முயன்றுள்ளார்.

உமரின் உளறல்களுக்கு அளவேயில்லை. என்றாலும் அறிவுடையோர் விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.

வல்ல அல்லாஹ் உமரின் உளறல்களிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 21.09.2006

விவஸ்தையை கூறி அவஸ்தைபடும் உமர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்......)

தவறை தவறு என்று ஒப்புக் கொள்ளும் பக்குவமில்லாத உளறுவாய் உமரின் விவஸ்தை கெட்ட அடுத்த கட்ட உளறல் ஒன்று தற்சமயம் வெளியாகி உள்ளது.

சமயத்தில் இவர் எதிராளியை குறிப்பிடுகிறாரா தனது தலைவன் கிரிமினல் மிஜேவை குறிப்பிடுகிறாரா என சந்தேகப்படும்படி உளறிக் கொட்டுவதில் சாதனை படைப்பவர்.

'உனது மரணத்திற்கு உன்னைப் போன்ற சக மனிதன் காரணமாக முடியும் என்று இஸ்லாமிய இயற்கை சித்தாந்தத்தை தலைகீழாகப் புரட்டிய தறுதலை நீ......'

பிற மனிதனால் தனது உயிருக்கு அபத்து நேரும் என்று கருதுவது எப்படி இஸ்லாமிய இயற்கை சித்தாந்தத்திற்கு எதிரானதாக அமைய முடியும்.

உண்மையிலேயே உளறுவாய் உமர் இக்கொள்கையில் பிடிப்பானவராக இருந்தால் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜேவை அரச பாதுகாவர்கள் இன்றி தனியே கோவை வந்து திரும்பச் சொல்லட்டும் பார்க்கலாம்.

ஆக இவர் (உ.உ.) முகவை தமிழனை பரிகசிக்கிறாரா அல்லது தனது தலைவன் கிரிமினல் பிஜேயை பரிகசிக்கிறாரா. விளக்குவாரா.

முன்னுக்குப்பின் முரணாகவும், சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறுவதும் உமருக்கு கைவந்த கலை அதனால் தான் எதேச்சையாக நடந்த காயல்பட்டிண தமுமுக (முன்னால்) நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய குறிப்பை, திட்டமிட்ட பாக்கரின் உரையோடு கந்து திசை திருப்பப் பார்க்கிறார்.

இரண்டிற்குமிடையே பாரிய வித்தியாசங்கள் இருந்தாலும், ஒரு வாதத்திற்காக இரண்டையும் சமமாக பாவித்து சிந்தித்தால், அப்பொழுது கூட தறுதலை ஜமாத் தலைமையின் தடுமாற்றம் தெளிவாக புலனாகிறது.

காயல் சம்பவத்தைப் பொறுத்த வரை தமுமுக நிர்வாகிகள் இன்று முன்னாள்களாகி போனார்கள். ஏனெனில் இஸ்லாமிய கண்ணியத்தை உணர்ந்த கனவான்கள், தங்களால் இயக்கத்தின் தூய்மை பழுதுபட்டு விடக்கூடாதென தாமாகவே விலகிச் சென்று விட்டனர்.

ஆனால் தறுதலை ஜமாஅத் நிலை என்ன?

தவறை தவறென்று ஏற்றுக் கொள்ளும் ஆண்மையில்லாதவர்களாகிப் போனதால் சப்பை கட்டு கட்டித் திரிகின்றனர்.

உதாரணம் சொல்வதாக உதார் விட்டு, அதிலும் உதை வாங்கிக் கொள்பவர் தான் இந்த உ.உ. பாக்கரின் ஒய்.கே மேன்சன் விவகாரத்தை நினைவுபடுத்தித்தான் ' தள்ளிக்கினு போறதை' உதாரணம் சொன்னாரோ தெரியவில்லை.

மீடியா வேர்ல்ட் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து வின் டிவியையே விலைக்கு வாங்கி அதிலேயும் அதிக இலாபம் பெற்று விற்பனை செய்த பாக்கர் பாவம் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எளியவர் என உளறுவாய் உமர் கூறுகிறாரோ இந்த வருடத்தின் சிறந்த ஜோக்குக்கு இதனை பரிந்துரைக்கலாம்.

உமரின் உளறல்கள் முடிவதில்லை. ஒவ்வொன்றிற்கும் ஏதாவது உளறி வைக்கும் உமர், ஜெஜெவின் ஆண்டிப்பட்டி பேச்சிற்கும், ஜெஜெவின் ஆணவ, முஸ்லிம்களுக் கெதிரான போக்கிற்கும் எந்த மறுப்பும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறாரே ஏன்?

ஓ கிரிமினல் தலைவன் எவ்வழி, உளறுவாய் உமர் அவ்வழி.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 21.09.2006

ததஜ கிரிமினல் பாக்கருக்கு சவால்

மரியாதைக்குரிய உம்முல் முஃமினீன்களை கண்ணியக் குறைவாக விமர்சித்த ததஜ கிரிமினல் பாக்கருக்கு பகிரங்க சவால்.

'அம்மா' முன்பு 'பெட்டி'ப் பாம்பாக அடங்கி கடந்த ஆட்சியில் தான் நிம்மதியாக சுவாசித்தோம் என்று புகழாரம் சூட்டினாரே அந்த போயஸ் தோட்டத்தின் பொன்மகளுக்கு ஐம்பத்தேழு வயதாகிறது.

பொது மேடையில் பகிரங்கமாக ஜெயலலிதாவை கிழவி என்று கூறுவதற்கு பயங்கரவாதி பாக்கர் தயாரா?

இடத்தையும் நேரத்தையும் சொல்லி மேடையமைத்தால் எங்களது செலவில் படம் பிடித்து உலகம் முழுக்க பரப்ப நாங்கள் தயார்.

பயங்கரவாதி பாக்கரும் உளறுவாய் உமரும் இதற்கு தயாரா?

இப்னு ஃபாத்திமா 21.09.2006

Monday, September 18, 2006

ஜாமிஆ புஷ்ரா புதிய கட்டிட திறப்பு விழா


ஜாமிஆ புஷ்ரா இஸ்லாமிய மகளிர் கல்லூரி காரைக்கால் - பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா

Sunday, September 17, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் -2

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும், வாங்க உமர் பாய் சௌக்கியமா. நாம போனவாரம் பேசிக்கிட்ட விஷயத்தை அண்ணன்ட சொல்லிட்டீங்க போல....

வஅலைக்கு முஸ்ஸலாம். ஆமாமா. முனீர் ஹுதா விஷயத்தத்தான கேக்குறீங்க. ஆனாலும் அஹமது பாய், இந்த வாரம் உணர்வலைகள்ல எழுதியிருக்குற தொனி உப்பு சப்பில்லாமத்தான் இருக்கு.

இதுக்கு மேல என்னத்த எதிர்பாக்குறீங்க உமர். இந்த அளவுக்கு எறங்கி வந்து பணிவா, மயிலெறகுல தடவி குடுத்து கண்டிச்சதே பெரிய விஷயம் தான். ஆனா, என்னான்னா, வெத்துப் பேப்பர வச்சுக்கிட்டு இட ஒதுக்கீடே கிடச்சுட்ட மாதிரி குதிச்சது போல இந்த விசயத்துல அண்ணன் கண்டன அறிக்க குடுத்துட்டார்னு குதிக்க முடியாது.

இன்னமொன்னையும் கேளுங்க! உணர்வு பத்திரிக்கைக்கு 10 வருசம் முடிஞ்சுட்டுன்னு ஞாபகம் வருதே - ஞாபகம் வருதேன்னு பட்டியல் போட்டாங்களே அதுல 1999 வாழ்வுரிமை மாநாட்டு சேதிய மறச்சுப்புட்டாங்க. இதப்பாத்த தமுமுக காரன் சும்மா இருப்பானா? மெயில் அடுச்சுட்டான். ஆனா அதுக்கு நடுவுல வழக்கம் போல ஷார்ஜாவுலருந்து வந்தது மாதிரி ஒரு லட்டர வாசகர் கடிதத்துல போட்டுட்டாங்க. அதச் சொல்லிக்கிட்டு இந்த வார வாசகர் கடிதத்துலயும் ஒரு லட்டர போட்டிருக்காங்க.

ஏங்க உமரு, ததஜவ தலமேல வச்சுக்கிட்டு ஆடுற நாமலே வெள்ளிக்கிழம தான் உணர்வ படிக்கிறோம். அப்ப தமுமுக காரன் எப்படி அதுக்கு முன்னால படிப்பான். தமுமுக காரனோட மெயில நான் வியாழக்கிழமையே (செப்டம்பர் 07) பார்த்தேன். எனக்கென்னமோ நம்மாளுங்க, 'ஆமா! தப்பு நடந்துருச்சு, விடுபட்டுப் போச்சு இனிமே நடக்காம பாத்துக்குறோம்' னு நாலுவரி கட்டம் கட்டி போட்டுட்டு போயிரலாம்னு தோணுது.

என்ன அஹமது பாய்! நம்ம வழக்கத்தையே மாத்தச் சொல்றீங்கலே, மறந்துட்டீங்களா நம்மோட அதிகாரப்பூர்வ செய்தியாளர் தீன் முஹம்மதுவோட ஜித்தா வர்ணனைய பொய்யின்னு தெரிஞ்சே போட்டப்புறம், இந்த தமுமுககாரனுங்க நம்மள சரியா கார்ணர் பண்ணுனப்புறம் என்ன செஞ்சோம். ஜித்தா ததஜ சார்பா ஒரு கடிதத்தை போட்டுட்டு, உணர்வு வருத்தம் தெரிவிச்சதா சொல்லிக்கலயா, அது மாதிரி தான் இப்பவும் யாரோ ஒருத்தர் பேர்ல வாசகர் கடிதம் போட்டாச்சுல. அப்புறமும் அதிகாரபூர்வமா வருத்தம் தெரிவிக்க நாம என்ன முறையான செயல்கள்ல்லயா ஈடுபட்டிருக்கோம். நாம நடத்துறதே திருடிக்கிட்டு வந்த பத்திரிக்க, அதுக்கு இது போதும்.

அது சரி! ஆனா ஜனங்க முன்ன மாதிரி, நாம சொல்றத கேட்டுட்டு தலையாட்டிட்டு போவ மாட்டேங்குறாங்களே. மடக்கி மடக்கி கேள்வி கேக்குறாங்களே.

அஹமது பாய்! இப்புடி பொத்தாம் பொதுவா சொல்லாம குறிப்பா சொல்லுங்களேன்.

அதாவது உமரு! நம்மள முக்கியமா சப்போர்ட் பண்ற சவுதி அரேபியாவுல உள்ள நம்ம பொறுப்புதாரி ஒருத்தரு சமீபத்துல வரதட்சணை வாங்கி கல்யாணம் கட்டிக்கிட்டாராம். இததான் இப்போ நாம எங்க போனாலும் கேக்குறாங்க.

அட என்னங்க நீங்க இப்பவும் புரியாம பேசுறீங்க! தமுமுக காரனோ, ஜாக் காரனோ வரதட்சணை பரிமாற்றம் உள்ள கல்யாணத்துல கலந்துக்கிட்டாலே அவங்கல முஷ்ரிக் அல்லது முனாஃபிக் ரேஞ்சுல பேசுற நம்ம அண்ணன், இதப்பத்தி என்ன சொன்னார்னு தெரியாதா ஒங்களுக்கு!

இல்லையே! தெரியாதே! என்ன சொன்னாரு...... தேர்தல் பிரச்சார கூட்டத்துல கூத்தும் கும்மாளமுமா ஜகஜ்ஜோரா நடந்த கூட்டத்துல, ததஜ கொடிகளோட நம்மாளுங்க கலந்துகிட்டத மறச்சு, நம்ம கொடிகளை யூஸ் பண்ணி தமுமுககாரன் செஞ்ச பித்தலாட்டம்னு அவனுக மேல பழிபோட்ட மாதிரி, இவரு எங்க ஆளே இல்லேன்னுட்டாரா.

சே.சே அப்படியெல்லாம் சொல்லல. இவரு நம்ம ஆளுதான் ஆனா இத கண்டுக்காதீங்கன்னு மத்த நிர்வாகிகள்ட்ட சொல்லிட்டாராம்.

அப்படிப்போடு அருவாள! நம்ம பாக்கரு கைய்யும் மெய்யுமா லாட்ஜில வச்சு மாட்டுனப்புறம் கூட அத மறுத்து டிவி பேட்டியெல்லாம் தந்தவரு தான் நம்ம தலைவரு. என்ன செய்யுறது. இப்புடி பல பேரோட குடுமி கைல இருக்குறதுனால தான அவுங்களும் அடங்கி கெடக்காங்க! இவரும் இஷ்டப்பட்ட படியெல்லாம் ஆடுறாரு. பாவம் இந்த ஜுனைஃபர், இப்ப இவரோட குடுமி அண்ணன்கிட்டயா....சரி சரி.

அது கிடக்கட்டும். 2 வருசத்துக்கு முன்னால இந்த தமுமுககாரங்களை மிரட்டுறதுக்காக பேட்ட ரவுடி கோட்டூர் ரபீக்க கூட்டிட்டு வந்து பதவி குடுத்து, தமுமுக ஆபீஸ்ல அடிதடிக்கு ஏற்பாடு செஞ்சு வைச்சுருந்தாரே அண்ணன், அந்த கோட்டூர் ரஃபீக் எங்க இப்போ ஆளய காணோம்.

ஆமாமா. பக்காவா திட்டம் போட்டுத்தான் ரஃபீக்கையும் மத்த அடியாள்களையும் கூப்ட்டு வச்சுருந்தாரு, ஆனா அண்ணைக்கு எப்டியோ மோப்பம் புடிச்சு தமுமுக காரன் உஷாராகி போலீஸ கூப்ட்டு நிக்க வச்சுட்டான். அதனால தான் அண்ணன் நெனச்ச மாதிரி ஒண்ணும் செய்ய முடியல. ஆனாலும் நம்மாளு விடலயே. கோத்ரா சம்பவத்த நரேந்திர மோடி யூஸ் பண்ணிக்கிட்டா மாதிரி, ஒடனே பரபரப்பா ஈமெயில், நம்ம கிட்ட இருந்த வின்டிவில ஸ்குரோல் நியூஸ், அப்புறம் நியூஸ் கவரேஜ், அவரோட பேட்டின்னு கலக்கிட்டார்ல.

எல்லாம் சரிதான். ஆனா, அப்பவும் நம்மாளு முண்ணுக்குப் பின் முரணா பேசி நம்மளோடது செட்டப்புன்னு பொதுமக்களுக்கு புரிய வச்சுட்டாரு. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் பாணியில ஆரம்பமா வுட்ட ஈமெயில், டிவி பேட்டி எல்லாம் ஒர்க்அவுட் ஆகத்தான் செஞ்சுச்சு. ஆனா இஸ்லாமிய எதிரிகள எதிர்க்குறதுக்கு இப்படியெல்லாம் திட்டம் போட மாட்டேங்குறாரே.

அதெப்புடிங்க முடியும். இஸ்லாமிய சமூகத்த பிளவுபடுத்துறதுக்காகவும், பலவீனப்படுத்துறதுக்காவும் தானே அவரு பாடுபட்டுக்கிட்டு வர்றாரு. அந்த அடிப்படையில தானே, மெட்ராஸ் ட்ராமாவ முடிச்சுட்டு பாளயங்கோட்டை தமுமுக ஆபீஸ அடிச்சு நொறுக்கி, அங்க இருந்த பொறுப்பாளர்கள வெட்ட ஆளனுப்புனாரு.

அதத்தான் நான் கேக்க வந்தேன். இம்புட்டு வேலயயும் அந்த கோட்டூர் ரபீக்க வச்சுத்தானே செஞ்சாரு. அவருக்கு நெல்லை மாவட்ட ததஜ தலைவர் போஸ்ட் கூட குடுத்தாரே. இப்போ என்ன ஆச்சு அந்த ரஃபீக் பத்துன பேச்சு மூச்சய காணோம். கடையநல்லூர், மேலப்பாளையம் பள்ளி விஷயமாக சைபுல்லாவும், லுஹாவும் தான் பேட்டி குடுக்குறாங்க. ஆக மொத்தத்தில் ரஃபீக் என்ன ஆனார்னே தெரியலயே.

பொறுங்க அஹமது பாய். முடிஞ்சா அடுத்தவாரத்துக்குள்ள எதாவது தெரிஞ்சா சொல்றேன். அப்ப வரட்டுமா.

வஸ்ஸலாம்

முல்லா 17.09.2006

Thursday, September 14, 2006

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?
விளக்குகிறார், மௌலவி, டாக்டர் அஹ்மது அஷ்ரப் அஸ்ஹரி அவர்கள்.(ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக் கழகம், அப்ஹா - சவூதி ஆரேபியா)

Tuesday, September 12, 2006

ரமளானில் உம்ரா பயணம்


தமிழறிந்த சகோதரர்கள் உம்ராவின் முழுப்பயனையும் அடைந்து கொள்ள அரிய வாய்ப்பு.

Sunday, September 10, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும்-நடப்பும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் - என்ன உமர்பாய் சுபுஹு தொழுகைல ஒங்கலக் காணோமே.

வஅலைக்கும் அஸ்ஸலாம் - என்ன அஹமது அலி கிண்டல் பண்றீங்களா. நம்ம தலைவர் அச்சு மாறாம பின்பத்துற என்கிட்ட இப்டியெல்லாம் நீங்க கேக்கக் கூடாது ஆமா.

சரி சரி கோவிச்சுக்காதீங்க. அத விடுங்க. நாட்டுல என்ன புது விஷயம் அதச் சொல்லுங்கள்.

அப்டி கேளுங்க. ஆனா அதுலயும் சிக்கலாத்தான் இருக்கு.

விஷயத்தை சொல்லாம வருத்தப்படுறீங்களே அப்புடி என்ன சமாச்சாரம்.

எல்லாம் இந்த அம்மா, ஆண்டிப்பட்டி கூட்டத்துல பேசுன பேச்சப்பத்தித் தான்.

ஆண்டிபட்டியில போயி அரசி பேசுன பேச்சுல என்ன பொல்லாப்பு வந்துச்சு. அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு தயங்குறீங்க. ஏன் உமர் பாய்?

அடப் போங்க அஹமது அலி, நம்ம தலைவரு பிஜே, தமுமுக காரன் சொல்லி ஒரு நல்லது நடந்தா, நாம சொல்லித்தான் நடந்துச்சுங்கிறாரு, நாம செய்றது ஒண்ணும் நல்லதா முடியுறதில்லை. அதுக்கு மத்தவன பலியாக்குறாரு. ஆனா இப்போ ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில பேசுன பேச்ச பாக்கும் போது, அந்தம்மா நமக்கு சிக்கல கொண்டு வரும் போல இருக்குங்க.

ப்ரதர் உமர், உங்க அடைமொழி மாதிரியே குழப்பமா இல்லாம தெளிவாச் சொல்லுங்களேன்.

என்னத்தங்க சொல்றது. இந்தம்மா ஆண்டிபட்டியில நின்னுக்கிட்டு கருணாநிதி, தயாநிதின்னு யாரயாவது திட்டிட்டு வராம, நம்ம சமுதாய அதிகாரி ஒருத்தறப்பத்தி சொல்லி நம்மள சங்கடப்படுத்தி வச்சுட்டாங்களே.

யாரப்பத்திச் சொன்னாங்க? முனீர் ஹுதாவப்பத்தியா?

ஆமாங்க! தேர்தல் சமயத்துலயே இந்த தமுமுக காரங்க இந்தம்மா முனீர் ஹுதாவ பழிவாங்குன விஷயத்தைப் பத்தி கூட்டத்துக்கு கூட்டம் பேசுனானுங்க. அப்பவே நமக்கு மூச்சு முட்டிப்போச்சு. நம்ம தலைவரும் சாமர்த்தியமா ஜெவை மீண்டும் அரசமைக்க உதவுவது மார்க்க கடமைன்னும், நாம போயஸ் தோட்டத்துல போட்டுக்கிட்ட அக்ரீமெண்ட் ஹுதைபியா உடன்படிக்கை மாதிரின்னும் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசி, வாங்குன காசுக்கு வஞ்சனையில்லாம பாடுபட்டாரு. இப்போ மறுபடியும் இந்தம்மா முனீர் ஹுதாவ தொட்டு வச்சிருக்கு. நம்ம தலைவரு என்ன பண்ணப் போறாரோ பாவம்.

ஆமாங்க உமர் பாய். வாஸ்தவம் தான். களியக்காவிளை விவாதத்துக்குப் பிறகு சுன்னத் வல் ஜமாஅத் காரங்க கூட நம்மள மதிக்க மாட்டங்குறாங்க. சும்மாவே நம்ம ஆளு கோவை சம்பந்தமா எதுவுமே அறிக்க விடமாட்டாரு. கோவைன்னாலே அம்புட்டு பயம் நம்மாளுக்கு. இந்த லட்சணத்துல கோயம்புத்தூர் கேசுல சம்பந்தப்பட்ட அதிகாரின்னாலே எதுக்கு வம்புன்னு பேசாம இருந்துருவாரு. ஏதோ நம்ம அம்மாவுக்கு வேண்டப்பட்ட ரத்தின சபாபதி அல்லது சிவனாண்டி மாதிரி அதிகாரிகள்னாலும் எதாவது சொல்லலாம், செய்யலாம். அம்மாவுக்கு வேண்டாத முனீர் விசயத்துல நம்மளால என்னதான் சொல்ல முடியும்.

அதுதாங்க அஹமது எனக்கும் கவலையாயிருக்கு, அம்மாவுக்கு பயந்து முனீர் விசயத்த கண்டுக்காம விட்டா, சமுதாய மக்கள் முன்னாடி பதில் சொல்ல முடியாதே. இந்த அம்மா போயஸ் தோட்டத்துக்கு உள்ள இருந்து சொல்லியிருந்தாவாச்சும், நம்ம தலைவர் இஷ்டத்துக்கு தஃப்ஸீர் செஞ்சுடலாம். விண் டிவி கைல இருந்தாலாச்சும் என்னவாவது பேட்டி எடுத்துப் போட்டு சமாளிச்சிரலாம். ஆனா இப்புடி பொதுக்கூட்டத்துல எல்லா மீடியாக்காரங்களும் இருக்குறப்பவே அடாவடியா பேசி முஸ்லிம் சமுதாய எதிர்ப்பு தன்னோட ரத்தத்துலேயே கலந்திருக்குங்கிறதை காட்டிட்டாங்களே.

இது என்ன புதுசா! அவுங்க சட்டசபையிலேயே தான் ஒரு பாப்பாத்தின்னு சொன்ன பிறகு தானே நம்மாளு அவுங்கள ஆதரிக்கணும்னு சொன்னாரு. ஆனா இப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா கருணாநிதிய ஆதரிக்கிறா மாதிரி பேசிக்கிட்டும் எழுதிக்கிட்டும் தானே வர்றாரு. அதுனால, தேர்தல் உறவு தேர்தலோடு போச்சுன்னு டயலாக் விட்டுட்டு அம்மாவோட ஆண்டிப்பட்டி பேச்சுக்கு கண்டன அறிக்கை வுட்டுற வேண்டியது தான்.

என்ன நீங்க புரியாம ஈசியா சொல்லிட்டீங்க. தேர்தல் உறவு தேர்தலோடு போச்சுன்னு சொல்லி நாம என்னதான் கருணாநிதி ஆதரவு அறிக்கை குடுத்தாலும், அந்தாளு கண்டுக்கவே மாட்டேங்குறாரு. தவிர, இது கருணாநிதியோட நடவடிக்கைக்கு ஆதரவா இருக்குறது மாதிரியான விசயம் மட்டுமில்லையே. அத்தோட அம்மா குறிப்பிட்ட விஷயங்களை மறுத்தும், கண்டிச்சும் சூடா அறிக்கை வெளியிடனுமே. அது எப்படி நம்மளால முடியும்.

அது தவிர, தப்பி தவறி அப்படி ஒரு அறிக்கய வெளியில விட்டா, 'ஏன்யா தேர்தல் நேரத்துல இப்புடிப்பட்ட ஆளுக்கு சப்போர்ட் பண்ணுணீங்க' ன்னு நம்ம ஆளுங்களே கைல கிடக்கிறத எடுத்துக் கிட்டு அடிக்க வருவானே என்ன செய்றது. அதுனால தான தலவரு கம்முனு இருக்காரு. நானும் கவலயோட இருக்கேன்.

கவலப்படாதீங்க உமர் பாய், நாம சுனாமில சுருட்டுனத எவனோ ஒருத்தன் கேள்வி கேட்ட உடனேயே நம்மாளு தமுமுகவ பழிசுமத்தி வேகவேகமாக பிளேட்ட மாத்தின மாதிரி இப்பவும் என்னவாவது புது பிரச்சனைய கிளப்பி இத மூடி மறச்சுடலாம். என்ன புது பித்னா கிளப்புறதுன்னு, நீங்களும் யோசன பண்ணுங்க, நானும் பண்றேன். அப்புறமா தலைவர்ட்ட சொல்லி வேற ஒண்ண ஆரம்புச்சுடுவோம்.

அதுவரைக்கும் போய் ரெஸ்ட் எடுங்க. வஸ்ஸலாம்.

முல்லா 10.09.2006

Thursday, September 07, 2006

பார்ப்பனிய கைக்கூலி பிஜே

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

பத்திரிக்கை உலகின் பயங்கரவாதி எனப் புகழ்பெற்ற 'சோ' வை மிஞ்சும் ஒருவர் உண்டென்றால் அது சாட்சாத் பிஜே தான் என்பதனை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.

போயஸ் தோட்டத்து பொன்மகளிடம் விலை போனதன் விளைவாக, வெளியிடப்படாத ஒரு வரைவு ஆணையத்தை (டிராஃப்ட்) வானளாவ உயர்த்திப் பிடித்து, ஓட்டுப் பொறுக்கிய போதே, தானொரு பார்ப்பனிய கைக்கூலி என பகிரங்கப்படுத்தினார்.

அப்பொழுதே பல முஸ்லிம்கள், அவரது முந்தய கால பிரச்சாரத்தில் மயங்கி அவரை குருவாக ஏற்று வந்தவர்கள் முகம் சுழிக்கத் தொடங்கினர். பிஜேயின் முகத்தில் காறி உமிழாத குறையாக, தப்பித்தோம் பிழைத்தோம் என ததஜவிலிருந்து கழன்று கொண்டவர்கள் ஏராளமானோர்.

இதைப் புரிந்து கொள்ளக் கூட இயலாமலிருந்த இன்னும் சில அப்பாவிகள் தற்சமயம் திருவாளர் பிஜே நடத்தும் பத்திரிக்கையில் வெளியான வரலாற்று பரட்டை கண்டு புழுங்க ஆரம்பித்துள்ளனர்.

பொதுவாக முஸ்லிம்களின் வரலாற்றை புரட்டி எழுதுவது பார்ப்பனர்களின் தொழில். பத்திரிக்கைகளில் எழுதுவதை தனது தொழிலாக பதிவு செய்து வைத்துள்ள இந்த தவ்ஹீத் வியாபாரி பிஜே, தான் கூலி பெற்ற பார்ப்பனர்களுக்கு விசுவாசமாக முஸ்லிம்களின் நிகழிகால சரித்திரத்தை திருத்தி எழுத முற்பட்டுள்ளார்.

யூத, பார்ப்பனியர்களின் விருப்பத்திற்கேற்ப முஸ்லிம் அமைப்புகளை உடைத்து, முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைத்த பிஜே, தான் கையகப்படுத்திய உணர்வு பத்திரிக்கையில் பத்தாண்டு கால பழைய நினைவுகளை பட்டியலிட்டுள்ளார். (சோ-வகையறாக்கள், குருமூர்த்தி வகையறாக்கள் மூலமாக வெளியிடுவதைப் போல) பட்டியலிட்டுள்ள கட்டுரை ஆசிரியர் 'மர்யம் செல்வன்' தான் அப்பத்திரிக்கையின் ஆரம்ப கால ஆசிரியரான 'மர்யம் செல்வன்' இல்லை என வாக்குமூலம் அளிக்கிறார். இதன் மூலம் யாரோ சொல்லியவற்றை தொகுத்து கட்டுரையாக்கி உள்ளதை ஒப்புக் கொள்கிறார்.

கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் கட்டுரை எழுதுவது தவறாகாது. ஆனால் கிடைக்கும் தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாமல் எழுதுவது தான் தவறாகும். இதுவே யூத பார்ப்பனர்களின் வழிமுறையாகும்.

பத்தாண்டு கால பழைய நினைவுகளில் பல உண்மைகளை மறைத்தும் திரித்தும் வெளியிட்டுள்ளார்.

உணர்வின் ஆரம்ப காலகட்டத்தை எழுதப் புகுந்தவர் என்ன காரணத்தாலோ, 2004 க்குப்பின் உருவான கருத்தாக்கத்தை கலந்து உண்மை உணர்வை சிதைத்து விட்டார்.

'எந்த இயக்கத்தின் சார்பாகவும் உணர்வு வெளியிடப்படவில்லை' என்ற 2004 க்கு பின் உருவான, சில ஓடுகாலிகளால் உருவாக்கப்பட்ட கருத்தினை நிலை நிறுத்த, ஆரம்ப கால சேர்மன் எஸ்.எம்.பாஷாவின் நியமனத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் மிக வலுவான மக்கள் பேரியக்கமான தமுமுக, எவ்வாறு கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லீமின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்கு சங்கல்பம் எடுத்துக் கொண்டதோ, அதேபோல் மறைக்கப்படும் சமுதாய செய்திகளை வெளிக்கொணர வேண்டும் என்ற தாகத்தில் தான் ஊடகத்துறையில் தடம் பதித்தது.

தமுமுக அனைத்து தமிழ் முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக இருப்பது போல், தமுமுக சார்பாக துவங்கப்படும் ஊடகமும் அனைத்து தரப்பு முக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவானது தான் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்.

2004இல் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டையும் அதன் வெளியீடுகளையும், முஸ்லிம் டிரஸ்டையும் அதன் சொத்துக்களையும் களவாடிச் சென்றவர்கள் வைக்கும் சொத்தை வாதம் தான், இந்த டிரஸ்ட்களுக்கும், தமுமுகவிற்கும் சம்பந்தமில்லை - என்று கூறுவது.

2004 ஏப்ரலுக்கு முன் எதுவும் சொல்லாமல், 2004 ஏப்ரலில் களவாடிச் சென்றதன் பின் இவ்வாறு சொல்வதெல்லாம் வரலாறு தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகளை தக்க வைப்பதற்காக தான். அவர்களது வாதத்திற்கு, அவர்களால் முன்னிறுத்தப்படும் சாட்சிகள் இருவர். (1) ஜாக் மாநிலச் செயலாளர் ரஃபீக் அவர்கள். (2) எஸ்.எம். பாஷா அவர்கள்.

ஆனால் இந்த இருவருமே, பார்ப்பனிய கைக்கூலி பிஜேவிற்கும் அவரது சொத்தை வாதங்களுக்கும் முரணாக செயல்பட்டுள்ளனர்.
தவ்ஹீத் வியாபாரி பிஜே தான் டிரஸ்ட்டை களவாடிச் சென்றதை நியாயப்படுத்த ரஃபீக் அவர்களின் பங்களிப்பை எடுத்துக் கூறிய உடனேயே, ரஃபீக் அவர்கள் பிஜேயின் வாதத்தை மறுத்து டிரஸ்ட் தமுமுகவால், தமுமுகவிற்காகவே உருவாக்கப்பட்டது என விளக்கமளித்து பிஜேவை பொய்ப்படுத்தினார்.

அதேபோல் டிரஸ்ட்டின் ஆரம்பகால சேர்மனாக பொறுப்பேற்றிருந்த எஸ்.எம்.பாஷா அவர்கள், தனது சொந்த காரணங்களுக்காக (பின்னாளில் பிஜேபிஇல் இணைவதற்காக) டிரஸ்ட் பொறுப்பிலிருந்து ஒதுங்கிய போது, முறையாக பொறுப்புக்களை திருப்பி ஒப்படைத்து சென்றார் (தவ்ஹீத் வியாபாரி பிஜே போல் எடுத்துச் செல்லவில்லை)

ஆக, கிரிமினல் கூட்டம் ததஜ சுட்டிக்காட்டும் இருவரின் செயல்களுமே, இந்த டிரஸ்ட்கள் தமுமுகவிற்கு சொந்தமானவை என்று தான் சாட்சியமளிக்கின்றன. ஆனால் தான் களவாடிச் சென்ற மீடியாவை உபயோகப் படுத்தியே இவ்வுண்மைகளை மறைக்க பத்திரிக்கை பயங்கரவாதி பிஜே மீண்டும் முயற்சித்துள்ளார்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த பார்ப்பனிய கைக்கூலி பிஜேயின் சூழ்ச்சியிலிருந்து சமுதாயத்தை பாதுகாப்பானாக.

கட்டுரையாசிரியர், 'உணர்வோடும், அதன் செய்திகளோடும் தொடர்புடைய சில முக்கிய தினங்கள்' என ஒரு பட்டியலிட்டுள்ளார்.

இப்பட்டியலை தொகுத்துள்ள விதத்திலிருந்தே இவருக்கு ஆரம்பகால வரலாறு தெரியாது, யாருடைய வேண்டுகோளுக்காகவோ, அவர்கள் தந்த விபரங்களை தொகுத்துள்ளார் - என எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில், இப்பட்டியல் 1995 சென்னை இம்ப்பீரியல் வளாகத்தில் நடைபெற்ற கோரிக்கை மாநாடு குறித்தோ, 1999 இல் சீரணி அரங்கில் நடைபெற்ற திருப்புமுனை மாநாடான முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு குறித்தோ குறிப்புகள் இல்லை.

இக்குறிப்புகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டதோ எனும் சந்தேகம் பலருக்கு வலுவாகவே உள்ளது.

ஏனெனில், அன்று அரசியல் அநாதையாக இருந்த ஜெயலலிதாவிற்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி தந்தது. 1999 - ஜுலை மாநாடு. அந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவேன் என உறுதியளித்தார். ஆனால் 2001 இல் ஆட்சிக்கு வந்ததும் மதமாற்ற தடை சட்டத்தை அமுல்படுத்தினார். காலகாலமாய் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உடைத்தெரிந்தார் (ஒருவேளை இதுதான் அவர் கூறிய தனி இட ஒதுக்கீடோ என்னவோ) ஆட்சியிலிருந்த 5 வருட காலமும் வாளாயிருந்து விட்டு தேர்தல் அறிவிக்கைக்குப் பின் காலாவதியான பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நல ஆணையத்தை முஸ்லிம் நல ஆணையமாக மாற்றி உத்தரவு பிறப்பித்தார். (தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காததால் அவ்வாணையம் செல்லாக்காசாகியது.)

வாழ்வுரிமை மாநாடு பற்றி குறிப்பிட்டால், வாசகர்களுக்கு இவை அனைத்தும் நினைவுக்கு வந்துவிடுமோ என அஞ்சியிருக்கலாம். இத்தனை சிறப்பு பெற்ற போயஸ் தோட்டத்தின் பொன்மகளிடம் பெற்ற பெட்டிகளுக்காக கடந்த தேர்தலில் மாய்ந்து மாய்ந்து ஓட்டுப் பொறுக்கியதால் பொங்கி எழுந்த முஸ்லிம்கள் தோல்வியை பரிசாக தந்தது குறித்த அச்சமாக இருக்கலாம்.

அல்லது, வாழ்வுரிமை மாநாட்டின் நிறைவுரையாக, தவ்ஹீத் வியாபாரி பிஜே அதற்கு முன் பேசிய ஜெஜெவை விமர்சித்ததையும், தூக்கிப் போட்டு காலில் மிதிப்போம் என கர்ஜித்ததையும் எவரும் நினைவு படுத்தி விடுவார்கள் என்ற அச்சமாகக் கூட இருக்கலாம்.

எப்படியோ, முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு பற்றிய அரசியல் கட்சிகளின் கருத்தை மாற்றியமைக்க அச்சாரமாக இருந்த நிகழ்வு இவர்களின் பட்டியலில் இடம் பெறாததிலிருந்தே இவர்களின் அச்ச உணர்வை புரிந்து கொள்ளலாம்.

அதேபோல்,

10-04-2004 தமுமுகவிலிருந்து அதன் அமைப்பாளர் பிஜே விலகிய நாள் என பதிவு செய்துள்ளார்.

10-04-2004 இல் தான் துரத்தப்பட்டதாக, விலக்கப்பட்டதாக ஒப்பாரி வைத்தே அன்றைய இதழும் அடுத்தடுத்த குறுந்தகடுகளும் (சிடி) வெளி வந்தன. இரண்டரை வருடங்கள் கழிந்து விலகியதாக ஒப்புக் கொண்டுள்ளார். விலகிய சமயத்தில் களவாடிய சொத்துக்களை எப்பொழுது ஒப்புக் கொள்வார்களோ தெரியவில்லை.

மேலும், இப்பதிவில் வேறு ஒரு புரட்டும் அடங்கியுள்ளது. அதாவது விலகி ஓடிய அன்று அவர் அமைப்பாளராக இருந்தது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் அன்றைய தினத்தில் அவர் முன்னால் அமைப்பாளர் மட்டுமே. அமைப்பளார் பொறுப்பிலிருந்து அதற்கு முன்பே விலகி இருந்தார் என்பதே உண்மை.

இறுதியாக, '......மாறாமல் இருப்பது அதன் சமுதாய நோக்கமே' என சான்றிதழ் தந்துள்ளார். பாவம். புரியாமல் எழுதியுள்ளார். ......'இப்பொழுது எஞ்சியிருப்பது பத்திரிக்கை பயங்கரவாதி, பார்ப்பனர்களின் கைக்கூலி பிஜேயின் சுயநலன் மட்டுமே' என முடித்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

போனால் போகிறதென்று ஓர் உண்மையை கட்டுரை முடிவில் ஒப்புக் கொண்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.

'உணர்வின் ஆரம்பகால வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர்கள் இன்று மாற்று கருத்துடையவர்களாக இருந்தாலும்......' முஸ்லிம் டிரஸ்ட்டும் சொத்துக்களும், முஸ்லிம் மீடியா டிரஸ்ட்ம் அதன் வெளியீடுகளும் தமுமுகவிற்காக உருவாக்கப்பட்டன, தமுமுககாரர்களால் முன்னெடுத்து செல்லப்பட்டன என்பதனை விளங்கிக் கொள்ள இந்த வாக்குமூலம் ஒன்றே நடுநிலையாளர்களுக்கு போதுமானது.


எனவே, இதன் அடிப்படையில் கையகப்படுத்திய ஆக்கிரமித்த சொத்துக்களை திரும்ப ஒப்படைத்து சமுதாய சொந்தங்களிடம் மன்னிப்பை கேட்டுப் பெற்று மீட்சி பெற கிரிமினல் ததஜவினர் தயாராகட்டும்.

மூன்றாம் காரணி ஆசிரியர் மர்யம் செல்வன் அவர்களே! பாவத்தில் பங்காளிகளாக இல்லாமல், அபகரித்த ஆக்கிரமித்த சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க முதலாம் காரணியாக செயல்படுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழிபடுத்துவானாக.

வஸ்ஸலாம்
அபூ அப்தல்லாஹ் - தம்மாம்

Wednesday, September 06, 2006

முஸ்லிம் நிலத்தில் அத்துமீறும் எஸ்.வி.சேகர்

சென்னை மயிலாப்பூர் அப்பு முதலி தெருவில் சென்ற 28-08-2006 அன்று சார்சமன் பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதை ஆக்கிரமித்து குடிசை போட்டிருந்தவர்களை அகற்ற நீதிமன்ற உத்தரவுடன் காவல்துறையின் உரிய பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மயிலை சட்டமன்ற உறுப்பினரும், நாடக நடிகருமான எஸ்.வி. சேகர் பகுதி அதிமுக பிரமுகர்கள் புடைசூழ வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலதாமதம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த வேலையில் சமூக விரோதிகள் குடிசைகளுக்கு தீயிட்டு, தீ விபத்தை ஜமாஅத்தினர் மீது திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்த பெண் எஸ்.ஐ. தர்மா மற்றும் பெண் காவலர்கள் சமூக விரோதிகளை பிடிக்க முயற்சித்தனர். ஆயினும் அவர்கள் தப்பிச் சென்றனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சனையை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்ட எஸ்.வி. சேகரை கண்டித்து ஜமாஅத்தினர் வன்மையாக கண்டன கோசங்களை எழுப்பிய பின்னரே எஸ்.வி. சேகர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறினார், அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து 06.09.2006

http://www.tmmkonline.org/tml/others/109708.htm


Tuesday, September 05, 2006

Kidney Transplantation Free of cost

From:
"ABBAS ALI KHAN" abbasalikhan@hotmail.com
To: abbasalikhanj@yahoo.co.in
Subject:
FW: Kidney Transplantation Free of cost
Date:
Wed, 06 Sep 2006 05:16:37 +0000

From: Khan Pasil M Subject: FW: Kidney Transplantation Free of costDate: Wed, 06 Sep 2006 07:46:05 +0300

Dear All,
Mr. Maan Al-Sanei, one of the well-known Saudi business men, has already donated to pay the complete and full treatment expenses for 60 cases of Kidney Failure for those who can not afford to pay the expenses. The expenses will include Kidney Transplantation in Saad Specialized hospital in Dammam, Saudi Arabia. The hospital has, so far, received 4 cases only. If you know poor patients suffering a kidney failure, please tell them and here is the address of Hospital and telephone number Saad Specialized Hospital Dammam, Khobar. Tel: +966 3 8826666 xtn: 4440 Please forward this to your friends. You never know, you may help saving someone.

REGARDS
Khaja Moinuddin Khusro
QA/QCCivil Engineer
QA/QC & Safety Section
SABIC SHARED SERVICES-EPM
Yanbu
TEl :+966- 04-3965328 /+966-04-3218217
Fax :+966-04 -3965702
E-Mail : C42054@sabic.com

Monday, September 04, 2006

பிஜேயின் கழுத்து தாங்குமா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உண்மைக்கும் உ.உ.கூ.உமரின் வார்த்தைகளுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இருந்ததில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று.

தனது மெயிலில் ஏதாவது உதாரணம் எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதிவிட்டு ஏடாகூடமாக மாட்டிக் கொள்வது அவரது வாடிக்கை. சமீபத்திய மெயிலில் எழுதிய உதாரணத்தின் மூலம் ததஜ தக்லீதுகள் கூலிக்கு மாரடிப்பவர்கள், கூலி கிடைக்க வில்லையானால் எதுவும் செய்யமாட்டார்கள் என ஒப்புக் கொண்டவர்.

உண்மை தவ்ஹீத்வாதிகளையே (ஸஹாபாக்களையே), தான் எடுத்துக் கூறிய அல்குர்ஆன் வசனத்தின் மூலம் தடுமாற வைத்த ஷைத்தானின் வரலாறு (அபூஹுரைரா (ரளி)) விஷயத்தில் நாமெல்லாம் அறிந்து வைத்துள்ள சரித்திர பாடம்.

இதே வழியைப் பின்பற்றி தான் அனுப்பும் மெயில்களில் குர்ஆன் வசனத்தையோ, நபிமொழியையோ இடம்பெறச் செய்து, அதனை வாசிப்பவர் மத்தியில் தானொரு உண்மை விசுவாசி (அவரைப் பொறுத்த வரை பிஜேவின் விசுவாசி, மற்றவர்களைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் விசுவாசி) என நாடகமாடுவதில் நாட்டமுள்ளவர்.

அத்தகைய உ.உ.கூ.உமர் தனது இன்றைய மெயிலில் கீழ்காணும் நபிமொழியை இடம் பெறச் செய்துள்ளார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு மனிதன்,
இன்னொரு மனிதனின் ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொண்டால், அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் ஏழு பூமிகளை அவனது கழுத்தில் விலங்காகப் போடுவான்.'
(புகாரி, முஸ்லிம்) அறிவிப்பாளர்: ஸயீத்பின் ஸைத் (ரலி)

முதலில் இந்நபிமொழி இந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத ஒன்று. ஏனெனில் சொத்து விஷயமாக சிவில் வழக்கு நடைபெறும் கடையநல்லூர் பள்ளியை வக்ஃப் வாரியம் ஏற்றுக் கொண்டதைப் போலவே, சொத்து விஷயமாக சிவில் வழக்கு நடைபெறும் மேலப்பாளையம் பள்ளியையும் வக்ஃப் வாரியம் ஏற்றுக் கொள்ள முன் வந்தது.

கடையநல்லூர் விஷயத்தை தனக்கு சாதகமாக ஆர்ப்பரித்து குரலெழுப்பிய ததஜ கிரிமினல்கள், மேலப்பாளையம் விஷயத்தில் எதிர்த்து குரலெழுப்ப வேண்டிய காரணம் என்ன?

மேலப்பாளையம் விஷயத்தில் லுஹா வகையறாக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் கிரிமினல் தலைவன் பிஜேவுக்கு ஏற்பட்டுள்ளது. மாறாக, லுஹாவை மாட்டி விட எண்ணினால் பிஜேவின் வண்டவாளங்களை லுஹா தண்டவாளத்தில் ஏற்றிவிடுவார் என்ற பயம் பிஜேக்கு ஏற்பட்டுள்ளது.

அது, அவர்களின் உட்கட்சி விவகாரம் தெலையட்டும்.

ஆனால், பொருத்தமில்லாத இடத்தில் இடம்பெறச் செய்துள்ள இந்நபிமொழி மூலமாக, இவர் கிரிமினல் பிஜேவை சிக்கலில் மாட்டிவிட எண்ணுகிறார் போலும்.

ஒரு சாண் நிலத்தை ஆக்கிரமித்தவனுக்கே ஏழு பூமிகள் கழுத்தில் மாட்டப்படுமானால் ஏழை எளியவர்களின் பொருளாதாரத்தால், தமுமுக எனும் மக்கள் பேரியக்கத்திற்காக வாங்கப்பட்ட ராயப்பேட்டை ஃபிளாட் ஐ அபகரித்துச் சென்று கிரிமினல் தலைவன் பிஜேஇன் கழுத்தில் எத்தனை பூமிகள் தொங்கவிடப்படுமோ. அல்லாஹ் அறிந்தவன்.

இதுமாத்திரமல்லாமல், தமுமுக அலுவலக கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்திற்காக எத்தனை பூமிகளோ???

அத்துடன் மதுரையிலுள்ள தமுமுகவிற்கு சொந்தமான இடத்தை தன்னிச்சையாக தாரைவார்த்துக் கொடுத்துள்ளாரே அதற்காக எத்தனை பூமிகளோ???

இவையனைத்தையும் மீண்டும் நினைவூட்டிய உ.உ.கூ.உமரே! முதலில் இந்நபிமொழியை கிரிமினல் தலைவன் பிஜேக்கு நினைவூட்டி, ஆக்கிரமித்துள்ள, அபகரித்துள்ள தமுமுகவின் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்கும்படி வலியுறுத்துங்கள்.

வரக்கூடிய ரமளானில் ஒழுங்காக தொழுது தவ்பா செய்து கொள்வதுடன் அனைத்து தமுமுக சகோதரர்களிடமும் மன்னிக்கும்படி உருக்கமாக வேண்டிக் கொள்ள அறிவுறுத்துங்கள். மன்னிக்கும் மாண்புடைய தமுமுக சகோதரர்கள் ஒருவேளை மன்னிக்கலாம். உடனடியாக சொத்துக்களை ஒப்படைத்துவிட்டு ஒதுங்க அறிவுறுத்துங்கள்.

ராவுத்தர் 04.09.2006