Monday, January 28, 2008

JJ வின் சேலைக்குப் பின்னால் PJ ??

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

'கையில காசு வாயிலே தோச' என்ற மகத்தான (தவ்ஹீது?!) கொள்கையை பிரகடனப்படுத்தி 2005இல் அரசியல் அரங்கினில் திருவாளர் PJ களம் புகுந்த போதே அவரது களவாணித்தனம் அம்பலத்துக்கு வந்து விட்டது.

என்றாலும், வரலாறு அறியாத சில விவரங்கெட்டதுகள் சீடர்களாக கிடைத்து விட்ட சந்தோசஷத்தில் இந்த ஆன்மீக குரு ஆனந்த பரவசத்தில் உள்ளார் போலும். அதனால் தான் இன்றளவும், தான் போயஸ் தோட்டத்தில் புதையுண்டு கிடப்பதை மறைக்க சம்பந்தமில்லாமல் பேசி தமது சீடர்களை மேலும் முட்டாள்களாக்கிக் கொண்டுள்ளார்.

போயஸ் தோட்டத்து பொன்மகளிடம் சமுதாயத்தை அடகு வைத்து பெற்ற கோடிகளைப் பற்றி யாராவது கோடிட்டு காட்டினால், உடனே தமது சீடர்களிடம் ஆதாரமில்லாமல் அவதூறு பேசுகிறார்கள் என்று தட்டிக்கழித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமுதாயத்தை கூறுபோட JJ விடம் PJ பெற்றது இலஞ்சம்/கையூட்டு. இலஞ்சத்தையும், கையூட்டையும் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்துப் போட்டா ஒருவர் வாங்குவார் என்ற அடிப்படை கேள்வி ஞானம் கூட ததஜ அடிவருடிகள் எவருக்கும் இல்லாத காரணத்தால் அவரின் வாதத்தை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை அறிவு சிறிதளவேனும் இருந்திருந்தால், பாக்கரின் பஸ் லீலைகளுக்காக ஒரு அமர்வு ஏற்படுத்தி அல்லாஹ்வின் மீது (பொய்யாக) சத்தியம் செய்தவர், இதற்கு ஏன் செய்யவில்லை என இப்பொழுதாவது கேள்வி கேட்டிருப்பார்கள்.

பாவம் அவர்கள் தான் மகுடிக்கு மயங்கும் அப்பாவி ஜந்துக்களாயிற்றே.

ஆனாலும், திருவாளர் PJ, தான் இப்பொழுதும் JJ வின் விசுவாசிதான் என்பதனை பல நிலைகளில் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்.

இஸ்லாமிய இன விரோதி, பார்ப்பனீய பாப்பாத்தி JJ வின் அழைப்பை ஏற்று அவரின் அன்பு அண்ணன் நரபலி நாயகன் மோடி போயஸ் தோட்டம் சென்றார். பாப்பாத்தி JJ வாசலில் வழி மேல் விழி வைத்து காத்திருந்து விருந்துக்கு அழைத்துச் சென்று அரசியல் பேரம் பேசி முடித்துள்ளார்.

இந்த நிலையில் JJ வோடு தான் கொண்டுள்ள UNDERSTANDING வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக PJ வும் ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். 10,12 நாட்களுக்கு முன்பாக அரசை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமாக உரையாற்றிய அண்ணன் (?!) தற்பொழுது மோடிக்கு எதிராக முழக்கமிடுவார் என எதிர்பார்த்து அங்கு கூடிய ததஜ அடிவருடிகள் ஏமாந்து போனார்கள்.

சென்னை ஆர்ப்பாட்டம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற எந்த ஆர்ப்பாட்டத்திலும் திருவாளர் PJ பங்கு பெறவே இல்லை. ஒருவேளை கமலாயத்தில் நடைபெற்ற மோடி வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பாரோ.

ததஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய PJ வின் பினாமிகள் கூட மோடியை விருந்துக்கு அழைத்த பாப்பாத்தி ஜெயாவை கண்டித்து மறந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை. மோடியின் அட்டூழியங்களைப் பற்றி பேசுவதை விட, மோடி தமிழகம் வருவதற்கு கருணாநிதி ஏன் அனுமதி வழங்கினார் என்ற ரீதியிலேயே அமைந்திருந்தது.

இதிலிருந்து ததஜ தொண்டர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்ற நிலை மாறி பூகோளமும் தெரியாது என்ற உண்மை விளங்கியது. அத்துடன் JJ விடம் PJ பெட்டி வாங்கியுள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளது. பெட்டி வாங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை JJ வின் விட்டை முற்றுகை இட்டிருப்பார். பணம் பெற்றுக் கொண்டதால் தான் பதுங்கி விட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.

இதற்கு மேல் எவருக்கும் சான்று தேவைப்படாது என எண்ணுகிறோம்.

எதையுமே சம்பந்தமில்லாமல் பேசி சமாளித்தே பழகிப்போன பிஜே, மோடி வருகையை எதிர்ப்பதைக் குறித்து எழுப்பப்பட்ட (செட்அப்) கேள்விகளுக்கும் குழப்படியான பதிலை வழவழ கொழகொழவென குளறி வைத்து அனைவரையும் குழப்பியுள்ளார்.

மோடியின் தமிழக வருகையை எதிர்த்து முதன் முதலில் களமிறங்கியது தமுமுக தான் என அனைவரும் அறிவர். தமுமுகவின் மின்னல் வேக சுறுசுறுப்பான செயல்பாடுகளை கண்டு மிரண்டு போன PJ, நிர்பந்தத்தின் காரணமாகவே களத்தில் மற்றவர்களை இறக்கி விட்டு தான் மட்டும் துயிலுறங்கப் போனார். தான் களத்திலிருந்து போராடாமல் (ஜெயலலிதாவின் சேலைக்குப் பின்னே?!) பதுங்கிக் கொண்டதை நியாயப்படுத்த வழமை போல வாய்சவடால் விட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் தயவால் WIN TV யோ, தமுமுகவிலிருந்து திருடிச் சென்ற பாத்திரிக்கையோ இல்லையெனில் இவரின் முட்டாள்தனமான வாதங்கள் இவரின் அடிவருடி வட்டத்துக்குள்ளேயே முடங்கி விடும். PUBLIC MEDIA வையும் தனது முட்டாள் சீடர்கள் போல் எண்ணிக் கொண்டு விடுவதால் இவரின் வண்டவாளங்கள் நமது உதவியில்லாமலேயே தண்டவாளத்தில் ஏறிக் கொண்டுள்ளது.

மோடி வருகை குறித்த இவரின் கேள்வி பதிலைப் படித்த நண்பர், ததஜ சகோதரர்களுக்கு வரலாறு தெரியாமலிருப்பதன் காரணம் PJ செய்து வரும் வரலாற்று தில்லுமுல்லுகள் தான் என் குறிப்பிட்டார்.

அதுவும் உண்மை தான். அதனால் தான் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ந்த வரலாற்றை தான் விரும்புவது போல், தானே அதற்கு முழத் தகுதியானவன் போல் வரலாற்றை திருத்தி எழுதும் யூத, பார்ப்பனர்களைப் போன்ற முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, மோடி வருகை குறித்த இவரது பதிலில் உள்ள உளறல்களைப் பார்ப்போம்.

மோடி என்பவனின் அரக்கத்தனத்தை எதிர்க்க வியூகம் வகுத்த தமுமுக, தமிழகத்திலுள்ள சமூக நீதி ஆர்வலர்களையும், மனித உரிமை போராளிகளையும் ஒருங்கிணைத்து, 'ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மோடி எதிர்ப்பை வலுவாக்கியது.

ஆனால் சமூக பிரச்சனையில் கூட ஒன்றிணைந்து போக முடியாத ஒற்றுமையின் எதிரி நவீன அபூஜெஹல் பிஜே, AFF ஐ தனது பதிலில் குறை கூறி உள்ளார்.

வரலாற்றை அறியாத தமது சீடர்களுக்கு பதிலளிப்பதால் வரலாற்றில் முதன் முறையாக தமுமுக 6 அமைப்புகளுடன் இணைந்து போராடியுள்ளது. அரசாங்க நெருக்கடியின் காரணமாக தனித்து போராட இயலாத அளவிற்கு வாரியத்தைப் பெற்று வீரியம் இழந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் யாரும் செய்யத் துணியாத செயலான, சினிமாக்காரன் ஒருவனை ஜும்ஆ மேடையில் இவர் ஏற்றி வைத்தாரே அவர், சொடுக்குப் போட்டு ஜும்ஆ மேடையில் சிலம்பாட்டம் (?) போல் சொல்லாட்டம் ஆடினாரே அந்த தொப்பை TR தான் இவருக்கு அடுக்கு மொழி ஆசான் போலும். அதனால் தான் எப்பொழுதும் வாரியம்/வீரியம் என பேசித் திரிகிறார்.

நண்பர் முன்பு குறிப்பிட்டதைப் போல வரலாற்றை திருத்தும் PJ வின் முயற்சியைப் பாருங்கள்.

உண்மையில் தமுமுக அமைத்த AFF இல் தமுமுக தவிர்த்து ஏனைய 12 இயக்கங்கள் இணைந்து உள்ளன. 12 அல்லது 13 என்று எழுதினால், 2005 தேர்தலின் போது, தான் கோனிகா பஷீருக்கு சீட் வாங்குவதற்காக JJ வை சந்தித்த பின் WIN TV க்கு அளித்த பேட்டியில் 12 இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து (அன்றைய) முதல்வரை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதி கூறியுள்ளது என்று பில்ட் அப் செய்தாரே அது குறித்து எவரும் கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் AFF ஐ குறைத்து எழுதி/பேசி விட்டாரோ என்னமோ.

உண்மையில் அன்று (2005இல்) பிஜேவை நம்பி 12 அமைப்புகளெல்லாம் கூடவில்லை. இதனை சுட்டிக்காட்டிய பின் 12 அமைப்புகளல்ல, 12 பிரமுகர்கள் என சுருதியை குறைத்தார். பின்னர் அதுவுமில்லை என்ற உண்மை வெளியான போது வாயடைத்து மௌனமாகி விட்டார்.

AFF ஐ தமுமுக உருவாக்கியது வரலாற்றில் முதல்முறை என்பதே கூட தவறுதான். சமூக நீதியை நிலைநாட்ட தமுமுக தேவையான சமயங்களில் பிறருடன் இணைந்து இதற்கு முன்பும் களம் கண்டுள்ளது. பாப்பாத்தி ஜெயலலிதா, மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்த பொழுது, அதனை எதிர்த்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டணியை அமைத்ததை மறந்து விட்டாரா அல்லது நமது நண்பர் சுட்டிக்காட்டியது போல் மறைக்க முயற்சித்துள்ளாரா தெரியவில்லை.

அல்லது ஜெயலலிதாவிடம் பணம் பெற்ற அன்றே, அவருக்கு எதிராக சமுதாயம் நடத்திய போராட்டங்களை மறந்து/மன்னித்து விட்டாரோ தெரியவில்லை.

தமுமுக மற்றவர்களுடன் இணைந்து போராடியது அரசாங்க நெருக்கடியினாலாம். அரசுக்கு நெருக்கடி தராமல் இருக்க வேண்டும் என எண்ணியிருந்தால் இவர் நடத்தியது போல் அங்கும் இங்குமாக சிதறி சின்னாபின்னப்பட்டு அதனை அரசு எளிதாக கையாளுவதற்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். மாறாக, பல இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ததன் மூலம் அரசுக்குத்தான் நெருக்கடி தந்திருக்கிறார்களே அல்லாமல் அரசுக்கு சாதகமாக இம்முற்றுகை போராட்டம் நடைபெறவில்லை என்பதை நாடே அறிந்து கொண்டது.

ஜன-14 அன்று அரசும், காவல் துறையும் எந்த அளவுக்கு நெருக்கடிக்குள்ளானார்கள் என்பது சென்னைவாசிகளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அதனை கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதன் நோக்கம், இவ்விஷயத்தில் தனது துரோகத்தை மறைப்பதற்காகத் தானே அன்றி வேறில்லை.

வக்ஃப் வாரியம் குறித்து நாம் மட்டுமல்ல டெல்லியிலிருந்து வந்திருந்த மத்திய அரசின் குழு விசாரித்த வரையில் கூட, தமிழக வக்ஃப் வாரியத்தின் சமீப கால செயல்பாடுகள் மிக சிறப்புக்குரியதாகவே அமைந்துள்ளன. அதே சமயம் வாரியம் பெற்ற பின்னும் கூட தமுமுக, சமுதாய உணர்வுகளை பிரதிபலிப்பதிலோ, சமுதாய உரிமைக்காக குரல் கொடுப்பதிலோ, தனது வீரியமிக்க வழிமுறைகளை கூர்படுத்தியே வந்திருக்கிறது என்பதே உண்மை.

அப்படியிருந்தும், குறுமதியாளர் குறை கூறுகிறார். எனில் பொறாமையைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது என்பதனை சமுதாயம் புரிந்தே வைத்துள்ளது.

அதனால் தான், சமீபத்தில் அவர் திருடிச் சென்ற பத்திரிக்கையில் வெளியிட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்த நண்பர் POSTER ல பேரு போட்டிருந்தாலே இமாலய தப்பு மாதிரி வட்டம் போட்டிருக்காரே, படிக்க வந்த பொண்ணக் கூட்டிக்கிட்டு பஸ்ஸுல சாஞ்சுக்கிட்டு போனா தான் சரியான தவ்ஹீது(?!) போல இருக்குன்னு கமெண்ட் அடிக்கிறாரு.

அவரு குறிப்பிட்டது அஜித் படத்தோட தமுமுக பெயரில் ஒரு உடற்பயிற்சி கழகம் நடத்திய கபடிப் போட்டியப் பற்றிய விளம்பரத்தைத் தான்.

சமுதாய மக்கள் விழிப்போடு தான் இருக்கிறார்கள் என்று நண்பரின் கமெண்ட் நமக்கு உணர்த்தினாலும், இன்னும் பலர் அறியாத விட்டில் பூச்சிகளாய் இந்த அபூஜெஹ்லை நம்பி வெந்து கொண்டிருக்கிறார்களே என்றும் எண்ணத் தோன்றுகிறது.

வல்ல அல்லாஹ் முழு சமுதாயத்தையும் ஏமாற்றிப் பிழைக்கும் PJ போன்றவர்களின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 29.01.2008

Saturday, January 26, 2008

பிஜே - வரலாற்றில் செய்த எடிட்டிங் வேலை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மோடியின் தமிழக வருகையை எதிர்த்து A.F.F. தலைவர்கள்.

அல்லாஹ்வின் பெரும் உதவியினால் தமிழக முஸ்லிம்களின் 50 ஆண்டுகால இடஒதுக்கீட்டுக் கனவு சிறப்புக்குரிய 2007 ரமளான் மாத துவக்கத்தில் நிறைவேறியது. மனிதனை இறைவனின் அருளுக்குரியவனாக ஆக்க பயிற்சி அளிக்கும் அந்த மாதத்தை அடைந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த தமிழக மக்கள், இடஒதுக்கீட்டை பெற்றுவிட்டோம் என்ற மற்றொரு மகிழ்ச்சியையும் ஒருசேர பெற்றனர்.

இடஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டும் கூட, அதன் விபரீதங்களை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம்களும் முன்பு இருந்தார்கள்.

முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் இடஒதுக்கீடு அவசியம் என்பதை உணர்ந்து, அந்த ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்தே தமுமுக உதயமானது.
பூவா தலையா போட்டுப் பார்த்து தமிழகத்து அரசியல் கட்சிகளுக்கு தங்களது வாக்குகளை போட்டு வந்த முஸ்லிம்கள், இடஒதுக்கீடு தந்தால் அல்லது தருவதாக சொல்லும் கட்சிகளுக்கு தான் ஒட்டுப் போடுவோம் என்று தமுமுகவின் வருகைக்குப் பிறகு சொல்ல ஆரம்பித்தார்கள்.

தமுமுக உதயமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சாத்தியமானது.

அந்த இடஒதுக்கீடு திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டு, அதைத் தொடர்ந்து திமுகவிற்கு கொடுத்த அழுத்தங்களின் காரணமாக இடஒதுக்கீட்டை பெற்று விட்டோம்.

தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவேன் என்று வாக்களித்து விட்டு, முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை மீறிய, நயவஞ்சகி ஜெயலலிதா அவரது ஆட்சிக் காலம் முடியும் வரை இடஒதுக்கீட்டுக்காக ஒரு துரும்பைக் கூட நகர்த்த வில்லை.

தொல். திருமாவளவன் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக சீரணி அரங்கில் சொன்னீர்களே அதை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? என்று ஜெயலலிதாவிடம் கேட்ட போது, நான் அப்படி ஏதும் வாக்குறுதி அளிக்க வில்லை என்று கூறினார்.

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தந்த போது, அந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதற்குப் பிறகும் இவர் இடஒதுக்கீடு தருவார் என்று எந்த கூமுட்டையாவது நம்புவானா?

அவரது இந்த திமிரான விமர்சனங்களை எதிர்த்து தமுமுகவினர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகை செய்யும் போராட்டத்தை துணிந்து செய்தார்கள்.

அதனாலேயே அதை அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் தமுமுக, திமுக கூட்டணியை ஆதரித்து 40க்கு 40 இடங்களிலும் வெற்றிக் கொடி நாட்டியது. தமிழக வரலாற்றில் இப்படிப்பட்ட ஸ்வீப் என்றைக்குமே நடந்ததில்லை. அதற்கு தமுமுக எடுத்த தேர்தல் நிலைபாடும், முஸ்லிம்களின் ஓட்டுக்களும் மிக முக்கிய காரணங்களாகும்.

இவ்வளவு நடந்த பிறகும், பாசிச விஷக்குறுதி உடம்பெங்கும் ஓவராக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவை ஆதரிப்பதங்கு எந்த முஸ்லிமுக்கு துணிச்சல் வரும்.

ஆனால் தமிழகத்தில் ஒருவர் துணிந்தார். அதற்கு ஜெயலலிதா தந்த பெட்டிகள் தான் முக்கிய காரணம் என்பதை பத்திரிக்கைகளும் சொன்னது, அதைவிட அரசு அலுவலர்களும் பிஜே பெட்டி வாங்கியதை உறுதி செய்தார்கள். அடுத்தடுத்து அவர் செய்த செயல்களும் அவர் ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கினார் என்பதை உறுதி செய்தன.

பிஜே என்ன ஜெயலலிதாவிடம் வேலை(?) செய்து விட்டு சம்பளமா வாங்கினார்? இவ்வளவு ரூபாயை இந்த மாத சம்பளமாக பெற்றுக் கொண்டேன் என்று எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, ஆதாரம் கேட்பவர்களிடம் காட்டுவதற்கு!

செய்த வேலை திருட்டு வேலை, ஃபிராடு வேலை, முஸ்லிம் சமுதாயத்தை பாப்பாத்தியிடம் லஞ்சத்திற்காக அடகு வைத்த வேலை. பாப்பாத்தி ஜெயலலிதா கடந்த ஆட்சியில் டாஸ்மார்க் வியாபாரத்தில் பெற்றுக் கொண்ட லஞ்சப்பணத்திற்கு, கணக்கில் வராத கறுப்புப்பணத்திற்கு ஜெயலலிதாவிடம் தான் ஆதாரம் இருக்குமா என்ன!? அல்லது அந்த கறுப்புப் பணத்தை பெற்றுக் கொண்ட பிஜேயிடம் தான் ஆதாரம் இருக்குமா?

அப்படியே ஆதாரங்கள் இருந்தாலும் எப்படி அதன் தடயங்களை மறைப்பது என்பதில் தான் பிஜே குறியாக இருந்திருப்பார்.

லஞ்சமாக ஜெயலலிதாவிடம் பெற்ற பணத்திற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்ட முதல் ஆள் பிஜேவாகத்தான் இருக்க முடியும். அதாவது லஞ்சத்திற்கு ஆதாரம் கேட்ட ஒரே ஆள் பிஜே தான்.

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பதற்கு அவரது முட்டாள் குஞ்சுகளால் தான் முடியும்.

அவர் ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கினார். அதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தந்தார்.

அதற்காக மக்களிடம் பொய்யான காரணத்தைக் கூறி எல்லோரையும் முட்டாள்களாக ஆக்க முயற்சித்தார்.

ஜெயலலிதா ஆணையம் போட்டு விட்டார், அதனால் தான் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று பொய் கூறினார். அந்த ஆணையம் கூட, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு வெளியிடப்பட்டதால் செல்லுமா? செல்லாதா? என்று இன்று வரை சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா போட்ட ஆணையம் புதியதாக அமைக்கப்பட்ட ஆணையம் அல்ல. ஏற்கனவே இருந்த ஆணையம் காலாவதியானதினால் மீண்டும் புதுப்பித்தார் என்பது தான் உண்மை. இதற்காகவெல்லாம் ஓட்டுப் போட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

தமுமுகவை விட்டு பிரிந்து செல்வதற்காக, தமுமுக தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுகிறது, என்று எப்படி ஒரு பொய்யை சொன்னாரோ அது போன்றது தான் மேலே குறிப்பிட்ட பொய்யுமாகும். தமுமுகவிலிருந்து பிரிந்து செல்வதற்காகவும் ஜெயலலிதாவிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டார் என்பது பத்திரிக்கைச் செய்தி.

நாம் மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு அவரது இப்போதைய விளக்கத்தை சற்று உன்னிப்பாக கவனிப்போம்.
சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்திற்கு நரபலி புகழ் நரேந்திர மோடியை விருந்துண்ண அழைத்தார் ஜெயலலிதா. அந்த பாசிச ஜெயலலிதாவின் பெட்டியை வாங்கிக் கொண்டு தமுமுகவிலிருந்து கால்கள் பிடரியில் பட ஓட்டமெடுத்த பிஜே 'விலக்கினார்கள், விலகினார்' என்று தமிழகத்து மக்களை குழப்பி நாடகமாடி முடித்தார். சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் பெட்டியை வாங்கிக் கொண்டு அவரை ஆதரித்த பிஜே, 'தமிழக முஸ்லிம்களுக்கு பிஜே செய்த துரோகத்திற்கு பதில் சொல்ல வேண்டும்' என்று சொன்னால், அறிவுப்பூர்வமாக பதில் சொல்கிறேன் என்ற பெயரில் மழுப்பலை பதிலாக்கி தப்பிக்க முயற்சிக்கிறார்.

மனிதர்களின் மறதியை மூலதனமாக்கி உண்மையில் நடந்த சம்பவங்களில் அவருக்கு சாதகமானவைகளை வைத்துக் கொண்டும், அவருக்கு பாதகமானவைகளை நீக்கியும் எடிட்டிங் செய்வதில் கைதேர்ந்தவர் பிஜே என்பது இப்பொழுது நிரூபணமாகி இருக்கிறது.

மோடியின் ஆட்சியை கலைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது கருணாநிதி மோடியை ஆதரித்தாராம், அந்த கருணாநிதியை தமுமுக ஆதரித்ததாம், அது தான் இப்பொழுது பிரச்சனையாம்.

மோடி வெற்றியை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில் குஜராத் சென்று மலர்செண்டு கொடுத்து விட்டு வந்தவரும், இந்த முறை மோடி தேர்தலில் வென்ற போது விருந்துண்ண தமிழகத்திற்கே அழைத்த பாசிச பாப்பாத்தி ஜெயலலிதாவை கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆதரித்த பாவத்திற்காக தமிழக முஸ்லிம்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று சொன்னால், தீர்மானம் நிறைவேற்றப்படும் போது மோடியை ஆதரித்த கருணாநிதியுடன் இருப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் பிஜேக்கு இல்லையாம். எவ்வளவு திமிர் இவருக்கு இருக்கிறது என்பதை கவனியுங்கள்.

இந்த விஷயத்தை இன்னும் விளக்கமாக சொன்னால் முழுமையான தெளிவு கிடைக்கும். நம்மை பொறுத்த வரை கருணாநிதி மோடிக்கு ஆதரவாக எடுத்த நிலைபாட்டை ஆதரிக்க வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மோடியின் ஆட்சியை கலைப்பதற்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்தது. அதுவும் பிஜேபியிடம் பெரும்பான்மை பலம் இருந்தது.

இடதுசாரிகளான கம்யூனிஸ்ட்டுகள் பிஜேபிக்கு எதிராக அப்போது இருந்ததால், மோடியின் ஆட்சியை கலைக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்கள்.

நிச்சயமாக பெரும்பான்மை பலம் இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் போன்ற சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பெரும்பான்மை பலம் கொண்ட பிஜேபியை வெல்ல முடியாது. தீர்மானம் வெற்றி அடையாது. அதனால் மோடியின் ஆட்சியை கவிழ்க்க எந்த முகாந்திரமும் இருக்கவில்லை.

அப்படி இருக்கும் போது, அந்த நேரத்தில் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்த திமுக எப்படி பிஜேபிக்கு எதிராக, மோடிக்கு எதிராக வாக்களிக்கும்?

மிகக்குறைவான எம்பிக்களை அப்போது வைத்திருந்த திமுக, பிஜேபிக்கு எதிராக வாக்களித்தாலும் மோடியின் ஆட்சியை கவிழ்க்க இயலாது என்றிருக்கும் போது, தேவையற்ற முயற்சியை திமுக எப்படி எடுக்கும்? அப்படி எடுத்திருந்தால் பிஜேபியுடன் இருக்கும் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் அது அரசு அமைக்க ஏதுவாக இருக்குமோ அந்த கட்சிகளுக்குதான் ஓட்டுப் போட வேண்டும், இல்லாவிட்டால் அத்தனை ஒட்டுக்களும் பயனற்றதாக ஆகிவிடும் என்ற தத்துவத்தை நமக்கு போதித்தவர் பிஜே என்பதை நாம் இங்கே நினைவுபடுத்துகிறோம். அந்த தத்துவத்தின் படி கருணாநிதியை குறை சொல்ல இவருக்கு அருகதை இல்லை.

திமுக பிஜேபிக்கு எதிராக வாக்களித்திருந்தால் மோடியின் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று பிஜே சொல்வது சுத்தப் பொய்.

திமுக அப்போது பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை நியாயப்படுத்துவது எமது நோக்கமல்ல, திமுக மட்டுமல்ல எந்த அரசியல் கட்சி அந்த இடத்தில் இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பதை இங்கே நினைவு படுத்துகிறோம்.


திமுக, பிஜேபியின் கூட்டணியில் இருக்கும் போது கூட்டணியை சிதைக்கும் விதமாக திமுக மட்டுமல்ல வேறு எந்தக் கட்சியும் நடந்து கொள்ளாது என்பது அறிவிலிக்கு கூட தெரியும். ஆனால், ஆட்சியில் இருக்கும் போது தனி விமானத்தில் சென்று மோடிக்கு மலர் கொத்து கொடுத்து மகிழ்ந்த ஜெயலலிதாவின் சிறுபான்மையினருக்கு எதிரான பார்ப்பண புத்தியை என்னவென்பது, இப்பொழுது ஆட்சியில் இல்லாமல் இருக்கும் போது தனிப்பட்ட, பிரத்தியேக விருந்துக்கு மோடியை ஜெயலலிதா அழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. சிந்தித்துப் பார்த்தால் யாருக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பார்ப்பணிய புத்தி இருக்கிறது? என்பது விளங்கும்.

இதிலிருந்து நமக்கு விளங்குவது என்னவென்றால், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவிடம் மேலோங்கி இருப்பது சிறுபான்மையினருக்கு எதிரான பார்ப்பணிய வெறி மட்டுமே. இவ்வளவு தெள்ளத் தெளிவாக தெரிந்திருந்தாலும் அவருக்கு சப்பைக்கட்டு கட்டும் பிஜேவை தெரிந்து கொள்ளுங்கள்.

தான் செய்த அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக எந்த விதத்தில் மறைத்தும் திரித்தும் சொன்னால் விசிலடிச்சான் ததஜவின் குஞ்சுகள் குவ்வா குவ்வா என்று கத்திக் கொண்டு திரியுமோ அதற்காகவே டிவியிலும், களவாடிய பத்திரிக்கையிலும் வெட்கமில்லாமல் சொல்லித் திரிகிறார்.

சுயமாக சிந்திப்பவர்கள் ஒருபோதும் பிஜேயுடனும், தமுமுக என்ற ஒரு சமுதாய பேரியக்கம் இருக்கும் போது, முஸ்லிம்களை பிரித்து, போட்டி தமுமுக என்று ஒன்றை ஆரம்பித்து தில்லுமுல்லுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அவரது இயக்கத்திலும் இருக்க மாட்டார்கள்.

அவரது கட்சியில் இருக்கும் சுயநினைவு அற்றவர்களுக்காகவும் அவருக்காகவும் இறைவன் நேர்வழிகாட்ட பிரார்த்திப்போமாக.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா

Thursday, January 24, 2008

அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு!
சாத்தியமாகிறது டெல்லி பிரகடனம்!



அகில இந்திய அளவில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஆவண செய்யப்படும் என்றும் சச்சார் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் மாநில சிறுபான்மை ஆணையங்களின் வருடாந்திரக் கூட்டத்தில் உரையாற்றும்போது மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.

எமது அரசு சிறுபான்மை சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சச்சார் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதோடு, பிரதமரின் 15 அம்ச திட்டத்தையும் நிறைவேற்றுவோம். அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் சிவராஜ்பாட்டில் தெரிவித்தார்.


டெல்லியில் தமுமுக நடத்திய பேரணியின் வெற்றியாகவே கருதப்படுகிறது. முஸ்லிம்கள் சுய வேலை வாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர் ஆள் பற்றாக்குறையில் சிறுபான்மையின ருக்கான நலத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்காக எத்தனையோ திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் அவையனைத்தும் சிறுபான்மை மக்களை சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியே என இந்தக் கூட்டத்தில் பேசிய தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் சஃபி குறைஷி குறிப்பிட்டார்.

நன்றி: தமுமுகவின் அதிகாரபூர்வ இணையதளம்

Wednesday, January 16, 2008

பிஜேயின் ஜெயலலிதாவை நோக்கிய பயணம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

தமிழகத்து பாசிச கும்பலின் அழைப்பின் பேரில் குஜராத்தின் பாசிச, நரபலி மோடி தமிழகத்திற்கு ஜெயலலிதாவின் விருந்துக்கு வந்தார். முஸ்லிம்களின் உயிர்களை பறித்து இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கும் கொலை வியாபாரி, சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்திற்குள் நுழைவதற்கு கடுகளவும் தகுதியற்றவர். இஸ்ரேலியர்களுக்கு இணையாக சதிவலை பிண்ணக்கூடிய பார்ப்பாணிய கும்பலின் -முஸ்லிம்களுக்கு எதிரான- சதித்திட்டங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற சமுதாய பேரியக்கம் இதற்கு எதிராக தனது சொந்த ஸ்டைலில் பாசிசத்திற்கு எதிரான அமைப்புகளை ஒன்று திரட்டி மோடிக்கு எதிராக குரல் கொடுக்க 'பாசிச எதிர்ப்பு முன்னணி' யை உருவாக்கி இருக்கிறது.

இந்த தருணத்தில் சமுதாயத்தின் மீது அக்கரை இருப்பதாக காட்டிக் கொண்டும் நடித்துக் கொண்டும் இருக்கிற பிஜே எனும் சுயநலக்காரரும் அவரது குடும்பத்து குஞ்சுகளும் தமுமுகவுக்கு மக்கள் ஆதரவு இல்லாதது போலவும் அதனால் தான் மற்ற இயக்கங்களோடு கூட்டு சேர்ந்து இருப்பதாகவும் தனது சின்ன புத்தி தனத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இவர்கள், முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கரையே இல்லாதவர்கள் என்பதற்கு இவர்களின் போக்கே சரியான சான்று, இவர்களால் தான் இந்த சமுதாயத்திற்கு, அதன் எதிரிகளால் பெரிய ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சமும் நமக்கு இருக்கிறது.

எப்போதும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளும் போது, பிரத்தியேகமாக சில விதிவிலக்குகளையும் பிஜே சேர்த்துக் கொள்வார். உதாரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம் என்று பிஜே எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தில் ஒரு ஷரத்தையும் கூடவே சேர்த்திருக்கிறார். பலர் இதை கவனித்திருக்க மாட்டீர்கள். அதாவது, திமுகவை, அதன் ஆட்சியை எதிர்த்து ஆர்பாட்டங்களோ போராட்டங்களோ செய்வது இந்த உடன்படிக்கையை பாதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான் நாம் சொல்கிறோம், ஜெயலலிதாவிடம் கோடி கோடியாக பணத்தை பெற்றுக் கொண்டு, புதிதாக ஆணையம் போட்டுவிட்டார் என்று மக்களிடம் பொய்யை சொல்லிக் கொண்டு, ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கைகளோ போராட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ விமர்சனங்களோ செய்வது அவரை ஆதரிப்பதிலிருந்து எந்த விதத்திலும் பாதிப்புகளை ஏற்பாடுத்தாது என்று ஒப்பந்தமும் செய்து கொண்டு, ஜெயலலிதாவை எதிர்ப்பது போல் நடித்து, மக்கள் எல்லோரையும் கேணையர்களாக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது அத்தனை தில்லு முல்லுகளும் அவரோடு உடன் இருந்தவர்களுக்கு மட்டும் தான் நன்றாக தெரியும். ஆனால் டிவியில் நல்ல மனிதரைப் போல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் நல்ல மனிதரைப் போல் தான் தோற்றமளிப்பார். வெகுவிரைவில் அவரின் மறுபக்கத்தை மக்கள் பார்க்கும் காலம் வரும். அப்போது நாம் சொல்வதற்குரிய ஆதாரங்களை கேட்கும் நிலை அவர்களுக்கு ஏற்படாது.

ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திற்காக புதுப்பிக்கப்பட்ட ஆணையத்தை புதிய ஆணையம் என்று திரும்ப திரும்ப மக்களிடம் சொல்லிக் கொண்டு அவரை ஆதரித்ததை நியாயப்படுத்தி வரும் பிஜே, மோடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவில்லையாம், ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தாராம். பாசிசத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் மோடி வந்த அன்று சென்னையை கலக்கிக் கொண்டிருந்த போது, இவரும் இவரது குஞ்சுகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கினார் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் இல்லையா?

முஸ்லிம் லட்டர் பேடு இயக்கங்களையெல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு தனது பாலிசியை தளர்த்திக் கொண்டு அந்த பண்டாரப்பரதேசி, ஃபிராடு பாப்பாத்தி ஜெயலலிதாவின் முன்னால் அமுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

கும்பமேளாவில் பத்து இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று பொது மக்களிடம் கூறிவிட்டு, ஜெயலலிதாவிடம் ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் என்ன வந்தது பிஜேக்கு?

அம்மா! உங்கள் ஆட்சியில் தான் நிம்மதியாக சுவாசித்தோம் என்று நல்ல பாம்பு ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது பிஜேயின் பினாமி பாக்கருக்கு?

ஆணை புதுப்பிக்கப்பட்டது, எல்லா அரசுகளும் வழக்கமாக செய்யும் வேலைதான், இதை ஆணை புதியதாக போட்டு விட்டார் என்று பிஜே ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்த ஆணையை கூட செல்லுபடியானதாக ஜெயலலிதாவால் செய்ய முடியவில்லை, அந்த பேப்பரை கைகளில் வைத்துக் கொண்டு இடஒதுக்கீடு கிடைத்து விட்டதைப் போன்று பிஜே ஏன் குதூகளிக்க வேண்டும்?

இத்தனையும் அவருக்கு பெட்டி கிடைத்திருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவித்து விட்டு, அதில் முன்னிலை வகிக்காமல் எங்கே சென்று ஓடி ஒளிந்து கொண்டார் இந்த பிஜே. அவர் அங்கு வந்திருந்தால் அவர் வாங்கிய பணத்திற்கும் அதிமுகவுடனான கூட்டணிக்கும் பங்கம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமா? ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கணக்குப்படி வாங்கிய பணத்திற்கு அதிமுகவிற்கு முஸ்லிம்கள் சிலரின் ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்தாகி விட்டது, வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் போயஸ் தோட்டத்திலிருந்து பெரிய தொகை வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாரோ?

இப்பொழுது வரை ஜெயலலிதாவோடு வைத்துக் கொண்ட கூட்டணியிலிருந்து பிஜே வெளிவந்து விட்டதாக எந்த வித அறிவிப்பும் இல்லை.

முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டில் 3.5 சதவிகிதம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று கருணாநிதியை திட்டக்கூடிய விஷயத்தில் கூட எதற்காகவோ வேண்டுமென்றே ஸ்லிப் ஆகிறார் என்பது பொது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

தெளிவான விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு, அதற்கு பல ஆதாரங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு வலுசேர்க்கக் கூடிய பிஜே, கருணாநிதி ஏமாற்றி விட்டார் என்ற பச்சைப் பொய்யை எடுத்துக் கொண்டு ஏன் வழுக்கி வழுக்கி விழுகிறார்? ஜெயலலிதாவிடம் எப்படியும் இந்த முறை பல கோடி கணக்கில் வராத கருப்புப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நப்பாசையா?

வெகு விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது, அதற்காக அதிமுக சில முஸ்தீபுகளை செய்து கொண்டிருக்கிறது. நரமாமிச மோடிக்கு தமிழகத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் 45 வகை உணவு பரிமாறப்பட்டதை உண்பதற்காகவா இங்கே வந்தார்? குஜராத்தில் மூவாயிரம் பேர்களை கொன்று குவித்து அதன் மூலம் ஆட்சியை பிடித்ததைப் போன்று தமிழகத்திலும் பாப்பாத்தி ஜெயலலிதா ஆதரவுடன் சிறுபான்மையினரையும் தலித் சமுதாயத்தினர்களையும் குறி வைத்து அவர்களின் இரத்தத்தை குடிப்பதற்காக நரேந்திர மோடி எனும் குள்ளநரி தமிழகத்திற்கு வந்து விட்டு சென்றிருக்கிறது.

தமிழகத்தில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அனைவரும் உஷார் நிலையில் இருப்பது நல்லது.

நரேந்திர மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போன்று நடித்து விட்டு பிஜேயும் அவரது குஞ்சுகளும் கள்ளத்தனமாக அதிமுகவை ஆதரித்தால் தமிழக முஸ்லிம்கள் இவர்களை என்றைக்கும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லி வைக்கிறோம்.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா 16.01.2008

Monday, January 14, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 23

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன கையில சூட்கேஸோட வந்துருக்கீங்க. வெளியூர் போறீங்களோ.

போகல அஹமது. இப்பத்தான் சென்னைல இருந்து வர்றேன்.

சென்னைல இருந்தா!.. .. அப்போ ஏகப்பட்ட மேட்டர் இருக்குமே.

ஆமாமா. எப்போ இந்த நாரதர் சோ, நர மாமிச பட்சிணியான நரேந்திர மோடியை அழச்சுட்டு வரப்போறதா சொன்னாரோ அப்போ இருந்தே சென்னை பரபரப்பாயிடுச்சு. எப்பயும் போல இந்த மாதிரியான இஸ்லாமிய விரோதிகள, எல்லோருக்கும் இனங்காட்டுறதுக்காக தமுமுக பல போராட்ட முறைகள கட்டமைக்க ஆரம்புச்சுட்டாங்க.

அதுதான் எல்லா பத்திரிக்கையிலயும் வந்துருச்சே. நம்ம ததஜ கூட ஆர்பாட்டம்லாம் செஞ்சதா சொன்னாங்களே.

அதுல தான் வெஷயமே இருக்கு. நரேந்திர மோடிய எதுக்குறதுக்காக தமுமுக ஒரு வலுவான முன்னணியவே ஜனவரி 7ஆம் தேதியில உருவாக்கிடுச்சு. அந்த முன்னணியோட ஆலோசனைக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்புன்னு பரபரப்பா செயல்பட்டு மோடியப் பத்துன விழிப்புணர்வ தமிழ்நாடு முழுக்க பரவ வெச்சுடுச்சு.

ஓஹோ.. .. ..அதுக்கப்புறமா தான் நம்மாளு முழிச்சுக்கிட்டாரோ.

ஆமா அஹமது. தமுமுக – பாசிச எதிர்ப்பு முன்னணின்னு ஒரு அணியவே உருவாக்கி இரண்டு நாளைக்கு அப்புறமா, இனிமேயும் சும்மா இருந்தா, நம்மள சமுதாயம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்கன்னு பயந்து போயி தான் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செஞ்சுருக்காரு.

ஆர்ப்பாட்ட அறிவிப்ப அவரு எங்க செஞ்சாரு ஒமரு பாய். முனீரும் தொண்டியப்பாவும் தானே செஞ்சாங்க.

வாஸ்தவம் தான். சென்னைல அவுங்க தான் அறிவிப்பு செஞ்சாங்க. ஆனா அப்புறமா யாரு என்ன சொன்னாங்களோ தெரியல. நம்ம நந்தினிக்காக பிரிஞ்சு, நந்தினிக்காக சேர்ந்த இரண்டு பேரும் அதாங்க பிஜேயும், பாக்கரும் திருச்சில வச்சு பிரஸ் மீட் நடத்துனாங்க.

அப்புடியா சேதி... .. நம்ம தலவரு பிரஸ் மீட் வரைக்கும் தைரியமா வந்தாரா.. ... .. ஆனா ஆர்ப்பாட்டம் எதுலயும் அவரு தலய காணோமே.. .. ஒருவேள நாந்தான் சரியா கவனிக்கலியா.. ..

நீங்க சொன்னது சரிதான் அஹமது. நீங்க மட்டுமில்ல தமிழக முஸ்லிம்கள் எல்லோருமே சரியா கவனமா நம்ம தலவரோட திருகுதாளங்கள கவனிச்சுகிட்டு தான் இருக்காங்க. கருணாநிதிய எதிர்க்கிறதுக்கு மட்டும் உடனடியா களத்துல எறங்குற PJ, JJ வ எதுக்குறதுன்னா மட்டும் ஏன் ஓடி ஒளியுறார்ங்குறது தான் இப்போதைக்கு தமிழ் முஸ்லிம்கள் கேக்குற Million Dollar கேள்வி.

அதென்னங்க ஒமர் பாய் அம்மான்னு சொன்னாலே பணத்தோட தான் எதயும் சொல்லணுமா.

அப்புடியில்லிங்க அஹமது. எல்லோரும் கேக்குற கேள்வின்னு சொல்லப் போக அது எதேச்சயா அமைஞ்சுடுச்சு. ஆனா உண்மையிலேயே சில பேரு, அண்ணன் இப்புடி பம்முறதப் பாத்தா, போயஸ் தோட்டத்து பணப்பயிர் இப்பவும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுதோன்னு கேக்கத்தான் செய்யுறாங்க.

ஆமா. ஒங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இந்த கோனிகா பஷீரு இப்பவும் அதிமுக கூட்டணியில தான் இருக்கோம்னு அறிக்கை உட்டாராமே. உண்மையா.

அந்த வெக்கக்கேட்ட ஏங் கேக்குறீங்க அஹமது. அந்தம்மாவே புடிச்சு தள்ளிவுட்டா கூட இவரு அங்கயிருந்து எளும்ப மாட்டாரு போல. இவருக்காக கும்பகோணத்துல கூடி கூத்தடிச்சத நெனெச்சா அத விட அவமானமா இருக்கு.
இதுக்கே இப்புடி வருத்தப்படுறீங்களே ஒமர் பாய். நடக்குற நடப்பப் பாத்தா நம்ம தலைவரு பிஜே கூட அங்கயிருந்து வெலகுனா மாதிரி தெரியலியே.

எப்புடி சொல்றீங்க அஹமது.

பின்ன என்னங்க. ஆட்சியில இருந்த போது அமைச்சர்களுக்கே மாடியிலிருந்து போஸ்குடுத்த பால்கனி பேபி ஜெயலலிதா, நரபலி புகழ் நரேந்திர மோடிய வரவேற்க போயஸ் தோட்டத்து வாசல்ல நின்னு காத்து கெடந்தாங்கன்னு செய்திலாம் வந்த பிறகு கூட கமுக்கமா இருந்தா என்ன அர்த்தம். கோனிகா பஷீர் மாதிரி சூடு சொரண இல்லாம ஒட்டிக்கிட்டு இருக்கமா அல்லது மோடிய விருந்துக்கு அழச்சதுக்கு கண்டனம் தெரிவிச்சு அதிமுக கூட்டணியில இருந்து விலகிட்டமா ஒண்ணுமே பேசாம இருந்தா என்ன அர்த்தமுங்க.

ஹா.. ..ஹா.. ..ஹா.. .. அண்ணனோட பாலிடிக்ஸே புரியாம பேசுறீங்க அஹமது. அவரு ஒண்ணுஞ் சொல்லாம இருந்தா தான், நீங்களோ நானோ ஃபோன் போட்டு கேட்டா, 'கலைஞரு இட ஒதுக்கீடு தந்தப்புறமா அவருக்குத் தான் ஆதரவுன்னு எப்பவோ எளுதி குடுத்தட்டமே அப்பவே நாம அதிமுக கூட்டணியில இல்லைன்னு தானே அர்த்தம்' அப்டீனு சொல்ல முடியும்.

அப்போ அதிமுக காரங்க கேட்டா!

நாங்க தான் டிசம்பர் 28 ல கூட்டம் போட்டு திமுகவுக்கு நாங்க எளுதி குடுத்தது படி நடக்க மாட்டோம்னு பப்ளிக்கா அறிவிச்சுட்டமே. அப்புடின்னா ஒங்களோட இருக்கோம்னு தான அர்த்தம்னு ஒரே போடா போட்டிருவாருல.

அடச்சே. ரொம்ப கேவலமா இருக்கு. இவரு தவ்ஹீதுன்னு சொன்னத நம்பி வந்த நமக்குத்தான் இப்போ தலகுனிவா இருக்கு.

இதயும் கேளுங்க அஹமது. 2004 ல அம்மா கிட்ட வாங்குன பணத்தல விண் டிவி ய வாங்கி, திரும்ப விண் டிவிய அம்மா கிட்டயே வித்து சில கோடிகள் சம்பாதிச்சாங்களே நம்ம நந்தினி நாயகர்கள். அந்த டிவி ய அம்மா கிட்ட திரும்ப விக்கும் போது போட்டுக்கிட்ட ஒப்பந்தத்துல தான் சஸ்தாவா ஒரு மணி நேர புரோக்கிராம் நடத்திக்கிட்டு வர்றாங்க. இவுங்க உண்மையிலேயே நரேந்திர மோடிக்காக ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறதா இருந்தா ஒண்ணு போயஸ் தோட்டத்த முற்றுகை இட்டிருக்கணும், அல்லது விண்டிவி ல இருந்து வெளியேறி இருக்கணும். இது ரண்டுமே நடக்காதப்போ, இந்த கண்டணம்லாம் சும்மா நமக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு நாடகம் தான்னு பல பேரு பேசிக்கிறாங்க போங்க.

என்னமோ போங்க ஒமர் பாய். இவரு வெளயாடுற அரசியல் சித்து வெளயாட்டுல நாம தான் அப்பாவி பலிகடாவா ஆகிகிட்டு இருக்கோம்னு நெனக்கிறேன்.

சரி சரி ரொம்ப கவலப்படாம கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. எனக்கும் பிரயாண அசதியா இருக்கு, பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்
முல்லா 15.01.2008

Saturday, January 12, 2008

சொந்தமாக எதையும் செய்ய இயலாத ததஜ

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
..

நர மாமிச வேட்டைக்காரன் நரேந்திர மோடி, தமிழகத்தின் நச்சுப்பாம்பு, பத்திரிக்கை பயங்கரவாதி சோ.ராமசாமியால் அழைப்பு விடுக்கப்பட்டு ஜன-14 இல் சென்னை வர இருக்கிறான்.

முஸ்லிம் இன படுகொலை நாயகன் மோடியை தனது உற்ற தோழனாக எடுத்துக் கொண்டு, 2002 இல் குஜராத் வரை தனி விமானத்தில் சென்று பாசிசவாதி மோடிக்கு மகுடம் சூட்டிய பாசத்திற்குரிய பாப்பாத்தி ஜெயலலிதா, இந்த மோடியை அதே ஜன-14 இல் விருந்துண்ண அழைத்திருக்கிறார்.

இந்த செய்திகள் வெளியானவுடன் தமிழக முஸ்லிம்கள் தங்களின் மாநில இஸ்லாமிய தலைவர்களின் நிலைபாடு என்னவென எதிர்பார்த்தபடி நின்றனர்.

தமிழக முஸ்லிம்களின் நாடித்துடிப்பை தனது இருதய துடிப்பாக கொண்டுள்ள தமிழக முஸ்லிம்களின் பேராதரவு பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம், உடனடியாக நவீன நீரோ மோடி எதிர்ப்புக்கான வழிவகைகளை கட்டமைக்கத் தொடங்கியது.

உண்மையில் மோடி ஒரு முஸ்லிம் விரோதி மட்டுமல்ல, மாறாக ஒட்டு மொத்த மனித குலத்தின் எதிரி என்பதனை பறைசாற்றும் முகமாக, தலித், கிருத்துவ, இஸ்லாமிய மற்றும் திராவிட இயக்கத்தின் தலைவர்களை அழைத்து, அனைவரையும் ஒரே மேடையில், ஒரே குடையின் (பாசிச எதிர்ப்பு முன்னணி) கீழ் திரள வைத்து, இந்த A.F.F இன் மூலமாக மோடிக்கு எதிர்ப்பு காட்டும் முகமாக, நிகழ்ச்சி நடைபெற உள்ள காமராஜர் அரங்கை ஜன-14 அன்று முற்றுகை இடுவோம் என முழக்கமிட வைத்தது.

இந்த முற்றுகை முழக்கம், பாசிச மோடி, பார்ப்பன சோ மற்றும் ஜெயலலிதாவை மட்டுமல்ல மாறாக இஸ்லாமிய சமூகத்தின் கோடாரி காம்பு, தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவையும் கூட மிரள வைத்து விட்டது.

பத்திரிக்கை பயங்கரவாதி சோ, மனித குல விரோதி மோடியை அழைத்த போதும், அதே மோடியை பாப்பாத்தி ஜெயலலிதா விருந்துக்கு அழைத்த போதும் அமைதியாக கிடந்த தறுதலை குரூப், தமுமுகவின் மின்னல் வேக செயல்பாடுகளைக் கண்டு மிரண்டு போனது.

இனியும் சும்மா இருந்தால், தான் அம்மாவிடம் பெற்ற கையூட்டு அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதாலும், இருக்கும் கொஞ்ச நெஞ்ச ரசிகர்களை தக்க வைக்க வேண்டுமென்ற நிர்பந்தத்தாலும், எதாவது செய்யவில்லையானால் நிச்சயமாக தான் சமூகத்தவரால் ஓரம்கட்டப்பட்டு விடுவோம் என்ற அச்ச உணர்வின் காரணமாக சாவகாசமாக ஜனவரி 9 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

ஜன 14 அன்று தமுமுக, மற்றும் பல சமூக நீதி ஆர்வலர்களுடன் இணைந்து மோடி கலந்து கொள்ள உள்ள அரங்கையே முற்றுகையிட அழைப்பு விடுத்துள்ளதால், தான் ஏதாவது செய்ய வேண்டும், அதுவும் உடனே செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தால் மோடி வருகையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

நமது கேள்வியெல்லாம், மோடியை எதிர்க்க வேண்டுமென்றாலும் கூட தமுமுக முன்முயற்சி எடுத்தால் தான் செய்ய வேண்டுமா? மோடி எதிர்ப்பு, நாடகமாக நடத்தப்பட்டதா அல்லது உண்மையாகவே நடத்தப்பட்டதா?

உண்மையான உணர்வுள்ள போராட்டம் எனில், ஆர்ப்பாட்டத்திற்கு தறுதலை ஜமாஅத் தலைவன் பிஜே தலைமை தாங்காதது ஏன்? தங்க தலைவியிடம் பெற்ற பெட்டி இடை மறித்ததோ? நவரச நடிகன் நந்தினி நாயகன் பாக்கர் தலைமையில் நிகழ்த்தப்பட்ட உரையில், தாங்கள் ஜெயலலிதா ஆட்சியின் போது கூட ஜெயாவை எதிர்த்தே கூட போராட்டம் நடத்தியதாக சொன்னாரே. அப்படியானால் ஜெயலலிதாவின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி தலைவன் பிஜே தலை கவிழ்ந்து நின்ற சமயத்தில், 'அம்மா! உங்களின் ஆட்சியில் தான் நாங்கள் நிம்மதியாக சுவாசித்தோம்' என்று புளகாங்கிதமடைந்து சொன்னது புளுகுமூட்டையிலுள்ள சரக்கா.

நந்தினிக்காக பிரிந்து நந்தினிக்காக சேர்ந்த இந்த நவரச நடிகர்கள் இன்னும் எத்தனை நாள் தான் இந்த சமுதாயத்தை ஏமாற்ற காத்திருக்கிறார்களோ.. .. ..
அதற்கு முன்பாக இறைவன், இந்த அபூஷைத்தான்களிடமிருந்து முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர்

உள்குத்து:

நமது இந்த பதிவை பார்த்துவிட்டு ததஜ தற்சமயம் அதிமுக கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்ற நியாயமான கேள்வியை நண்பர் ஒருவர் எம்மிடம் கேட்டார்.

இதே சந்தேகம் எமக்கும் உண்டு என்றாலும் இதனைக்குறித்து பேசப்போனால் நாங்கள் தேர்தல் உடன்பாடு மட்டும் தான் வைத்துக்
கொண்டோம் என்று பிஜே சப்பைக்கட்டு கட்டுவார் என்று எண்ணியதால் தான் இந்த கேள்வியை நாம் எழுப்பவில்லை என்றாலும் கருணாநிதியை எதிர்ப்பதற்கு களத்திற்கு நேரடியாக வரும் பிஜே ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு மட்டும் தனது பினாமிகளை ஏவுவது ஏன்? என்ற கேள்வியை குறித்து சிந்திக்கும் போது நண்பர் குறிப்பிட்டது போல் இன்னமும் அதிமுக கூட்டணியில் தான் ததஜ நீடிக்கிறதா அல்லது ஜெயலலிதாவை கைகழுவி விட்டாரா என்று விளக்கம் அளிக்க வேண்டியது ததஜவினரின் பொறுப்பு.

கோனிக்கா பஷீரைப் போல வாங்கிய காசுக்கு விசுவாசமாக இன்னமும் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று சொல்லப் போகிறாரா? அல்லது சமுதாய நிர்பந்தத்திற்காக பணம் பட்டுவாடா நடக்கும் போயஸ் கார்டனை பகைத்துக் கொள்ளப் போகிறாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, January 10, 2008

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித் தொகை

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு
கல்வி உதவி தொகை

+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:

http://www.minorityaffairs.gov.in/


பார்க்க: தினத்தந்தி 06.01.2008 பக்கம் 33,


விண்ணப்பங்களை தங்கள் பள்ளி, கல்லூரியில் ஒப்படைக்க கடைசி நாள்: 31.01.2008.

பெரியதாக்க படத்தின் மீது கிளிக் செய்யுங்கள்.


Tuesday, January 08, 2008

மோடியின் தமிழக வருகை! பரவுகிறது பதற்றம்!!

மோடியின் தமிழக வருகை! பரவுகிறது பதற்றம்!!
இப்பி பக்கீர்


குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்திட தனது அரசு இயந்திரத்தை பயன்படுத்திய சங்பரிவார சக்திகளுக்கு 3 நாட்கள் வரை பெருந்தன்மையுடன் அனுமதி அளித்து உற்சாகப்படுத்திய மதவெறி நரேந்திர மோடி தேர்தலிலும் நின்று வெற்றியும் பெற்று விட்டார்.

மோடியின் வெற்றி அகில இந்திய தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜகவினர் புளங்காகிதமடைந்து வருகின்றனர் மென்மையான இந்துத்துவாவை கைவிடாத காங்கிரஸ், குஜராத்தில் வெற்றி வாய்ப்பு போய் விட்டதே என புலம்பியிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் அறிவிக்கப்படாத ஆர்.எஸ். எஸ். தலைவராக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா மோடியின் வெற்றிக்கு மனம் குளிர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன் கடந்த முறை போல நேரடியாக சென்று பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டு ஆரிய ஜோதியில் சங்கமமாக திட்டமிட்டிருந்தார். கடைசி நேரத்தில் அந்த பயணம் ஏனோ ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் மத வெறியன் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். புரோக்கர் சோ. நடத்தும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஜனவரி 14 அன்று தமிழகத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் பின்னர் ஜெயலலிதா விடுத்திருக்கும் சிறப்பு அழைப்பின் பேரில் போயஸ் தோட்டத்திற்கு மோடி சென்று ஜெ.வுடன் அளவளாவ இருக்கிறார். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பூரிப்புடன் சொல்லியிருக்கும் ஜெ. அ.தி.மு.க. பி.ஜே.பி. கூட்டணி மலர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்கவில்லை.

''இனிமேல் பி,ஜே.பி.யுடன் கூட்டணியே வைக்க மாட்டேன்'' என்று சத்தியம் செய்த இந்த நம்பிக்கை துரோகிக்குத் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சில சமுதாயத் துரோகிகள் ஊன்உறக்கமின்றி, வெட்கமுமின்றி தேர்தல்களப் பணியாற்றினர் இந்த சுயநலவாதிகள். இப்போது முகத்தை எங்கே வைத்து கொள்ளப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.

நரேந்திர மோடியின் தமிழக வருகை முஸ்லிம், கிருத்துவ, ஒடுக்கப்பட்ட மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி அவனது சொந்த மாநிலத்தில் வேண்டுமானால் சகல பாதுகாப்புடன் சுகமாக இருக்கலாம் ஆனால் சமூக நீதி மற்றும் விழிப்புணர்வுள்ள முஸ்லிம் இயக்கங்களை கொண்டுள்ள தமிழகத்திற்கு வர இருக்கும் நரேந்திர மோடிக்கு இங்கு எப்படிப்பட்ட வரவேற்பு(?) இருக்கும் என்பது காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரியாததல்ல.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கோரச் சாவுக்கு காரணமானவனை புன்னகையுடன் தமிழக மண்ணில் கால் பதிக்க எந்த உணர்வுள்ள மனிதனும் அனுமதிக்க மாட்டான். அதை மீறி மோடி வந்தால் இந்திரா காந்தி தமிழகத்திற்கு வந்த போது தி.மு.க. தொண்டர்கள் எந்த வரவேற்பை அளித்தார்களோ அதை, மோடிக்கு கொடுக்க தமிழர்கள் தயங்க மாட்டார்கள். எனவே மோடியை தமிழகத்திற்கு வர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசியல் தலைவர்களுக்கு சில இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது புதிதல்ல. எனவே நரேந்திர மோடியை தமிழகத்திற்கு அனுமதிக்கச் செய்வது அமைதியுடன் இருக்கும் தமிழகத்தில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பாசிச ஆதரவாளர்கள் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்களா?

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Monday, January 07, 2008

நரோந்திர மோடிக்கு எதிர்ப்பு - AFF உதயம்

தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு எதிராக முற்றுகைப் போராட்டம், உருவானது பாசிஷ எதிர்ப்பு முன்னணி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒத்தக் கருத்துடைய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் பிரஸிடென்ட் ஹோட்டலில் 07.01.2008 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்

1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
2. விடுதலைச் சிறுத்தைகள்
3. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
4. தலித், இஸ்லாமியர், கிறித்தவக் கூட்டமைப்பு
5. பெரியார் திராவிடர் கழகம்
6. மக்கள் கலை இலக்கியக் கழகம்
7. தமிழர் தேசிய இயக்கம்
8. மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்
9. இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம்
10. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்
11. குழந்தைகள் உரிமை இயக்கம்
12. மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்
13. புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி

உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.

அதில் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக வழியிலான போராட்டக் குழு அமைக்கப்பட்டு அதற்கு ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி (A.F.F) என ஒரு மனதாக பெயரிடப்பட்டது.

அதை வழிநடத்தும் பொருட்டாக வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு கீழ்கண்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

1. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
2. தலித், இஸ்லாமிய, கிருத்துவ கூட்டமைப்பு
3. விடுதலை சிறுத்தைகள்
4. பெரியார் திராவிட கழகம்
5. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
6. தமிழர் தேசிய இயக்கம்
7. பேரா. மார்க்ஸ் (மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்)
8. மக்கள் கலை இலக்கியக் கழகம்

இதன் அமைப்பாளராக பேரா. ஜவாஹிருல்லாஹ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டத்தின் முடிவாக, எதிர்வரும் 14.01.2008 அன்று நரேந்திரமோடி பங்கேற்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவிருப்பதால் நமது எதிர்ப்பை ஜனநாயக வழியில் தெரிவிப்பதற்காக 'காமாராஜர் அரங்கை' முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே புரட்சிபாரதம், இந்திய குடியரசு கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தவிர்க்க முடியாத அவசர காரணங்களால் வரவில்லை. ஆனால் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளன.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Sunday, January 06, 2008

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடும், ஐயமும், தெளிவும்

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடும், ஐயமும், தெளிவும்

சையத் உஸ்மான், சென்னை - 21

கேள்வி: தமிழக அரசு முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்ததில் துரோகம் இழைத்து விட்டது என்றும் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக ஒன்றரை சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் பிரச்சாரம் செய்கிறார்களே இது உண்மையா?

பதில் : இது உண்மையில்லை. இடஒதுக்கீடு அளிக்கப்படும் முறையை பற்றி அறியாதவர்கள் இத்தகைய பொய்யைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றார்கள்.


சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு செப்டம்பர் 15 அன்று வெளியிட்ட அரசாணையிலும், இதன் பிறகு அக்டோபர் 22ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திலும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தனித்தனியாக 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்த்தவர்களுக்கு மூன்றரை முஸ்லிம்களுக்கு ஒன்னரை என்று கூறி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று கூறுவது தவறாகும்.

இடஒதுக்கீடு அடிப்படையில் புதிதாக ஆட்களை வேலையில் சேர்க்கும் போதும், கல்வி நிறுவனங்களில் மாணவர் களைச் சேர்க்கும் போதும், இதேபோல் பதவி உயர்வு அளிக்கும் போதும் காலங்காலமாக கம்யூனல் ரோஸ்டர் (சுழற்சி) முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த ரோஸ்டர் முறை தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வந்த ஒன்றல்ல. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட அனைத்து மாநிலங்கüலும் இது நடைமுறையில் உள்ளது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள கேரளாவிலும் இது நடைமுறையில் உள்ளது. இந்த அடிப்படையில் தான் தமிழகத்திலும் ரோஸ்டர் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்த ரோஸ்டர் முறை என்னவென்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது சர்ச்சைக்கு இலக்காகியுள்ள தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் தொடர்பான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கடந்த நவம்பர் 15ம் தேதி டி.என்.பி.சி. வெளியிட்ட விளம்பரத்தில் 3368 தட்டச்சர்கள் மற்றும் 507 சுருக்கெழுத்தாளர்கள் தேர்வுச் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது (ரோஸ்டர் முறையில்லாமல்) எவ்வாறு பதவிகள் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறித்தும், ஆனால் ரோஸ்டர் முறையில் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் அட்டவணையில் (படம் 1 & 2ல்) தரப்பட்டுள்ளது.

படம் - 1

படம் - 2

மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை பார்வையிடும் போது ஒட்டுமொத்தமான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எந்தவொரு சமுதாயத்திற்கும் டி.என்.பி.எஸ்.சி. விளம்பரப்படி இடம் அளிக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக சுருக்கெழுத்தாளர் பணிக்கு பழங்குடியினர் ஐவர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஒருவர் தான் நியமிக்கப்படுவார் என்று டி.என்.பி.எஸ்.சி. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் பிற்படுத்தப்பட்டோர் (பொது) பிரிவினர் 117 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த பிரிவைச் சேர்ந்த 77 சுருக்கெழுத்தாளர்கள் மட்டும் நியமிக்கப்படுவார்கள் என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 101 சுருக்கெழுத் தாளர்களுக்கு பதிலாக 96 சுருக்கெழுத்தாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. விளம்பரம் குறிப்பிடுகின்றது. ஆனால் இதே நேரத்தில் பொது பிரிவைச் சேர்ந்த 157 பேர் நியமிக்கப்படுவதற்கு பதிலாக இதைவிட அதிகமாக 184 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் இதேபோல் செட்யூல்ட் சாதி பிரிவைச் சேர்ந்த 91 சுருக்கெழுத்தாளர்களுக்கு பதிலாக 125 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி விளம்பரம் தெரிவிக்கின்றது. இதேபோன்ற முரண்பாடுகளை தட்டச்சர்கள் நியமனத்திலும் இருப்பதை மேலே உள்ள பட்டியலிலிருந்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த நிலைக்கு காரணம் ரோஸ்டர் முறையாகும். ரோஸ்டர் முறையில் ஒட்டு மொத்தமாக உள்ள அனைத்து இடங்களையும் அப்படியே பிரிக்கப்படுவதில்லை. மாறாக மாவட்ட வாரியாகவும் துறை வாரியாகவும் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகின்றது. ஒரு துறையில் காலியாக உள்ள இடங்கள் எத்தனை என்று கணக்கிடப்படுகின்றது. 200 பணியிடங்கள் என்று கணக்கிட்டு அந்த இடங்களை ஒவ்வொரு பிரிவினருக்கும் சுழற்சி முறையில் அüக்கப்படுகின்றது.

இந்த 200 இடங்கள் எப்படி சுழற்சி முறையில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அக்டோபர் 29, 2007 தேதியிட்ட அரசாணை எண் 241ல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி 200 இடங்களில் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 7 இடங்களும் (28,54,80,108,134,160,188) ஆகிய முறைகளிலும், பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு (14,40,68,94,120,147,174) ஆகிய முறைகளிலும் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு துறையில் 100 பணியிடங்கள் காலியாக இருக்குமேயானால் 3 முஸ்லிம்களுக்கு 4 கிறிஸ்தவர்களுக்கு இடம் அளிக்கப்படும். 50 இடங்கள் காலியாக இருந்தால் 1 முஸ்லிமிற்கும் 2 கிறிஸ்தவர் களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதே நேரத்தில் ஒரு துறையில் 13 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தால் முஸ்லிம் கள் கிறிஸ்தவர்கள் ஆகிய இருவருக்குமே வாய்ப்பு கிடைக்காது. இதே அடிப்படையில்தான் பல்வேறு பிரிவினருக்கும் துறை வாரியாக சுழற்சி முறைப்படி வாய்ப்பு அளிப்பதால் இந்த முறை ஒருசில பிரிவினர்களுக்கு கூடுதலான இடங்களும் வேறு சில பிரிவினருக்கு குறைவான இடங்களும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அடுத்த வேலை வாய்ப்பு அளிக்கப்படும் போது எண்ணிக்கையில் உள்ள இந்த ஏற்றற் தாழ்வு சரிசெய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக அந்த துறையில் உள்ள மொத்த இடங்களில் இடஒதுக்கீட்டின் விகிதாச்சார அடிப்படையில் பணியாளர்கள் இருக்கும் நிலை ஏற்படுத்தப்படும். உதாரணமாக நாம் சுட்டிக்காட்டியது போல் ஒரு துறையில் தற்போது 13 இடங்கள் நிரப்பப்பட்டால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வாய்ப்பே கிடைக்காது என்று குறிப்பிட்டோம். ஆனால் அடுத்த முறை அத்துறைக்கு ஆள் எடுக்கப்படும் போது சுழற்சி எண் 14ல் அதாவது கிறிஸ்த்தவர்களில் இருந்து வாய்ப்பு தொடங்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. விளம்பரப்படி பொதுப்பணித் துறையில் 172 தட்டச்சர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இதில் முஸ்லிம்கள் 6 பேரும் கிறிஸ்த்தவர்கள் 6 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இதே போல் பள்ளி கல்வி துறையில் 190 தட்டச்சர் பணியிடங்கள் உள்ளன. இதில் 7 முஸ்லிம்களும் 7 கிறிஸ்தவர்களும் நியமிக்கப்பட உள்ளார்கள். இதே போல் போக்குவரத்து துறை, மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை துறை ஆகியவற்றிலும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் சம எண்ணிக்கையில் பணியிடங்களை பெறுகின்றார்கள். சில துறைகளில் மிகக் குறைவான பணியிடங்கள் இருக்கும் போது பெரும்பாலான பிரிவினருக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது. உதாரணமாக நிலசீர்திருத்த துறையில் ஒரு தட்டச்சர் மட்டுமே நியமிக்கபட உள்ளார். இந்த முறை அது பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதேபோல் தமிழ்நாடு தீயணைப்பு சேவை துறை, தடய அறிவியல் துறை, தொழில் மற்றும் வர்த்தகத் துறை உள்ளிட்ட சில துறைகளில் சொற்ப எண்ணிக்கையில் தட்டச்சர் கள் தேவைப்படுவதால் அனைத்து பிரிவினருக்கும் இம்முறை வாய்ப்பு கிடைக்காது. ஆனால் அடுத்த முறை இந்த முறை வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு பணியிடங்கள் அளிக்கப்படாமல் சூழற்சி வரிசையில் அடுத்துள்ள பிரிவில் இருந்து வாய்ப்பு வழங்கப்படும்.

கிறிஸ்தவர்களுக்கு 14வது சூழற்சியில் இருந்தும் முஸ்லிம்களுக்கு 28வது சூழற்சியில் இருந்தும் வாய்ப்பு அளிக்கப் படுவதால் இம்முறை கிறிஸ்தவர்களுக்கு கூடுதல் இடங்களும் முஸ்லிம்களுக்கு குறைவான இடங்களும் கிடைத் துள்ளன. இதற்குக் காரணம் கிறிஸ்தவர்களுக்ககான ஆங்கில எழுத்து C முதலிலும், முஸ்லிம்களுக்கான ஆங்கில எழுத்து M பிறகு வருவதாலும் கிறிஸ்தவர்களுக்கு முதலிலும் முஸ்லிம்களுக்குப் பிறகும் சுழற்சியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இடஒதுக்கீடு அளவு முஸ்லிம்களுக்கு குறைக்கப்பட்டு விட்டது, துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானதாகும்.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Wednesday, January 02, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 22

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..


வ அலைக்கும் அஸ்ஸலாம். வாங்க. வாங்க. ஒமர் பாய். ஒங்களத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருந்தேன்.

நானும் தான் ஒங்கள்ட்ட பல விஷயங்களப் பத்தி பேசுறதுக்காக இன்னைக்கி சீக்கிரமா ஓடி வர்றேன்.

சரி சரி. நேரத்த கடத்தாம, விறுவிறுன்னு எடுத்து வுடுங்க.

அஹமது. கடந்த முற நாம சந்திச்சப்போ, சென்னைல நடந்த மாநாட்டப்பத்தி பேசிக்கிட்டோம்ல, அத மாதிரி இன்னிக்கு சென்னைல நடந்த ஆர்ப்பாட்டத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அதுவும் சரிதான். நானே கேட்க நெனெச்சேன். சொல்லுங்க சொல்லுங்க.

அந்த கொடுமைய எப்புடிச் சொல்றது அஹமது. சுருக்கமா சொன்னா, நரேந்திர மோடிக்குப் பின்னால கூடுன கூட்டத்துக்கும், இப்போ பிஜேக்கு பின்னால கூடுனவுங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லைன்னு சொல்லலாம்.

என்ன ஒமர் பாய். இப்புடி சொல்லிப்புட்டீங்க.

தப்பே இல்லீங்க அஹமது. முன்னால் முதல்வர் ஜெ.ஜெக்கு மோடியும் கூட்டாளி, நம்மாளு பிஜேவும் கூட்டாளி தானே.

அதுக்காக இப்புடியா சொல்லுவாங்க.

இது மட்டுமில்லீங்க. அஹமது பாய். தேர்தல் பிரச்சார கூட்டத்துல போலி என்கவுண்டர நியாயப்படுத்தி மோடி சொன்னதும், அங்க இருந்தவங்க எல்லோரும் அத ஆமோதிச்சாங்களே, அதே மாதிரி, இப்போ பிஜே விவரங்கெட்ட தனமா பேசுன எல்லாத்துக்கும் ஒத்து ஊதி, கூப்பாடு போட்டு முஸ்லீம்கள்ல இப்படியும் ஒரு மந்தைக் கூட்டமான்னு மத்தவங்க கேலி பேசுறமாதிரி ஆக்கிட்டாங்க போங்க.

அவரு பின்னால இப்போ நிக்கிற கூட்டம், எதையும் யோசிக்க இயலாத ஆட்டு மந்தைக் கூட்டம்னுதான் எல்லோருக்கும் தெரியுமே. நீங்க அவரு பேசுன விஷயத்த சொல்லுங்க ஒமர் பாய்.

விவரங்கெட்ட பேச்சுன்னு தான் முதல்லயே சொல்லிட்டேனே. அப்புறம் அத வேற வெளக்கமா முதல்ல, இவரு எந்த வெளம்பரத்த புடிச்சு தொங்கிக்கிட்டு உளர்ராரோ அது போன மாசமே வந்திருக்கு. அத பாத்ததும், தமுமுக சம்பந்தப்பட்ட அதிகாரிகள புடிச்சு விசாரிச்சதுல, அது பழைய ஜி.ஓ, அதுனால சுழற்சி முறைல வர்ற வேலைவாய்ப்புன்னு தெரிஞ்சுகிட்டு ஒடனடியா முஸ்லிம்கள், கிருத்துவர்கள்னு தனித்தனியா லிஸ்ட் போட்டிருக்குறதுனால கிருத்தவர்கள் 16 வது இடத்துலயும், முஸ்லிம்கள் 28 ஆவது இடத்துலயும் இருக்குறத கண்டுபுடிச்சு, உடனடியா அத மாத்தி கிருத்தவர்களும் முஸ்லிம்களும் அடுத்தடுத்து லிஸ்ட்ல வர்றா மாதிரி திருத்தி அமைக்கனும்னு அதிகாரிகளுக்கு எழுதியிருக்காங்க. அதுனால இனி வரக்கூடிய வேலைவாய்ப்புகள்ல முஸ்லிம்களுக்கு உடனடியா வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பம் அமைஞ்சுருக்கு. ஆனா இப்புடி எதயுமே செய்யாம, சும்மா கூட்டத்தக் கூட்டி, அவுங்களுக்கும் தவறான தகவல் தர்ற இவர மோடியோட ஒப்பிட்டதுல என்ன தப்பு இருக்கு சொல்லுங்க பாப்போம்.

அப்போ சரிதான். அது இருக்கட்டும். அங்க கூடுன கூட்டத்துல ஒரு விஷயத்த கவனிச்சீங்களா.. .. தவ்ஹீது, தவ்ஹீதுன்னு பேருக்கு அடிச்சுகிறவுங்க ஆணும் பெண்ணுமா கலந்து நின்னத கவனிச்சீங்களா.

நாசமாப் போச்சு. இந்த தர்ஹாவாதிகள்ல்லாம் களியக்காவிள விவாதத்துக்கப்புறமா நம்மளப் போட்டு பொறட்டி எடுத்துக் கிட்டிருக்குற நேரத்துல இப்புடி நடந்துருச்சேன்னு நான் அமுக்க நெனச்சா நீங்க கிண்டுறீங்க.

அது எப்புடிங்க ஒமர் பாய் கண்டுக்காம விட முடியும். ஆரம்ப காலத்துல தர்ஹாவுல நடக்குற அனாச்சாரம்ன எதயெல்லாம் பிஜே சொன்னாரோ, அது இப்போ அவரு கூட்டத்துல நடக்கும் போது எப்புடி சொல்லாம இருக்க முடியும்.

அஹமது.. .. ஆணும், பொண்ணும் கலந்து நின்னதப்பாத்து இவ்வளவு ஆவேசப்படுறீங்களே. இந்த ஆர்ப்பாட்டத்த அவுங்க ஸைட்ல போட்டிருக்குறத பாத்தா என்ன சொல்லுவீங்களோ.. .. ..

அப்புடி என்ன போட்டிருக்காங்க ஒமர் பாய்.

அஹமது, தொழுகைக்கு நிக்கிற வரிசயப்பத்தி ரஸுலுல்லாஹ் என்ன சொல்லியிருக்காங்க.

முதல் வரிசையில ஆண்களும், அப்புறமா சிறுவர்களும், கடைசியா பெண்களும் வரிசையா நிக்கணும்னு சொல்லியிருக்காங்க.

அப்புடித்தான் நிக்கணும். ஆனா அங்க என்ன நடந்ததுன்னா.. .. ..

எல்லோரும் கலந்து நின்னு தொழுதாங்களோ.. .. ..

வரிசை மாறி மாறி நின்னது மட்டுமில்லாம, அத ஃபோட்டோ எடுத்து நம்ம ஸைட்டுல போட்டிருக்காரு பாருங்க அஹமது.. .. அதுல தான் நம்ம நந்தினி மணானனோட டச் இருக்கு.

அப்புடி என்னத்த செஞ்சுட்டாரு.

நம்ம பெண்கள இப்புடி காடசிப் பொருளாக்கியிருக்க வேணாம்னு பல பேரு திட்டுற அளவுக்குள இருக்கு.

சரி விடுங்க. பெண்கள் விஷயத்துல எந்த அளவு மூடி மறைச்சாலும், நம்ம தலைவருங்க பிஜே, பாக்கரு, சைபுல்லாஹ். அத்துர்ரஹ்மான்னு பல பேரோட லட்சணம்தான் சந்தி சிரிச்சுடுச்சே. இதுக்கு மேலயும் அதுல புதுசா என்ன இருக்கு. விடுங்க. வேற என்ன செய்திகள் ஆர்ப்பாட்ட கூட்டத்துல. அதச் சொல்லுங்க.

வேற அதுல குறிப்பிட்டு சொல்றா மாதிரி வேற ஒண்ணுமில்லை. ஆனா கொஞ்ச நாளா ஒரு விஷயத்தை ஒங்ககிட்ட பகிர்ந்துகணும்னு நெனெச்சேன்.

அது என்னங்க ஒமர் பாய்.

அதாவது அஹமது, நம்ம தலைவர்கள் மும்மூர்த்திகளா எல்லா இடத்துலயும் நிப்பாங்களே, ஆனா இப்போ அது இருவர் அணியாயிடுச்சே. மூணாமவருக்கு என்ன ஆச்சுன்னு தான் யோசனை.

வெளங்களியே ஒமர் பாய்.

2004 ல மிகப்பெரிய மேடை நாடகத்துல குணச்சித்திர வேடத்துல நடிச்சு எல்லோருடைய அனுதாபத்தையும் பெற்றாரே நம்ம மர்மஸ்தான அடி புகழ், ஸ்டான்லி நாயகரத்தான் சொல்றேன்.

அடேடே... .. ஆமா நாங்கூட மறந்துட்டேன். நம்ம அலாவுதீனுக்கு என்ன ஆச்சுங்க ஒமர்பாய். ததஜவுல இருந்து வெலகிட்டாரா, என்ன ... .. ஒரு நெகழ்ச்சிலயும் பாக்க முடியலியே.

அஹமது.. .. ..அவரு மட்டுமில்ல. அவர மாதிரி இன்னுஞ்சில பேரு எந்த காலத்திலியும் நம்ம தலவரு பிஜேவ விட்டுட்டு போக மாட்டாங்க. அந்த அளவு ஸ்;ட்ராங்கான பொருளாதார காரணங்கள் இருக்கு.

அதெல்லாம் சரி. இப்போ எங்கதான் போனாரு அவரு.

நமக்கு கெடச்ச தகவல்படி, இதுவர தவ்ஹீது பேரச் சொல்லி வசூல் பண்ணுனது, போயஸ் தோட்டத்து பணப்பயிர அறுவடை செஞ்சதுன்னு ஏகப்பட்ட சொத்து சேர்ந்துடுச்சுல்ல. அத முதலீடு பண்ண மலேசியாவுல பினாமியா உக்காந்து கிட்டு இருக்குறதா தகவல்.

அடப்பாவமே. கத இப்புடிப் போவுதா. அதுதான் ஆளக் காணமா.

நீங்க கவனமா பாத்தீங்க வையுங்க. 2004 ல இருந்து ஒட்டிக்கிட்டே இருக்குற இரட்டப் பிறவிங்க இரண்டே பேரு தான். மத்தவங்களய்லாம் தேவைக்கு ஏத்தாப்ல நம்ம தலைவரு பிஜே சேத்துக்குவாரு. காரியம் முடிஞ்சதும் களட்டி வுட்டுடுவாருன்னு ஒங்களுக்குத் தெரியாதா.

என்ன ஒமர்பாய். நீங்க இப்புடி பெரிய குண்டா தூக்கிப் போடுறீங்க.

அட 2004ல இருந்து பாருங்களேன். எஸ்.எஸ்.யு.வ மாநிலத் தலைவர்னாரு. அதுக்குப் பெறகு தானே தானைத் தவைராகி எஸ்.எஸ்.யு.வ து.தலைவருன்னாரு. இப்போ பாத்தா எந்த சந்திப்புலயும், எந்த மீட்டிங்லயும் அவர பாக்க முடியலியே.

அட ஆமா.

இப்புடி லிஸ்ட் போயிகிட்டே இருக்கு. ஆனா, அதப்பேசினா நமக்கு தான டயம் வேஸ்ட்.

யாரு வந்தாலும் போனாலும், நீங்க சொன்ன மாதிரி நந்தினி நாயகன் மட்டும் ஒட்டிப்பிறந்த இரட்டயரா அல்லவா இருக்காரு.

அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கான வியாபார ஒப்பந்தம்ல இருக்கு. அதுனால தான தவ்ஹீத காப்பாத்தப் போறோம்னு பேருக்கு சொல்லி வசூல் வேட்டைய வெற்றி அடைஞ்சாலும், விபச்சார குற்றம் சொல்லி வெளியேத்தியவரை மறுபடியும் ஞான ஸ்னானம் செஞ்சு பொதுச் செயலாளரா பதவி உயர்வு குடுத்து பக்கத்துல வெச்சுக்கிட்டாரு.

என்னத்த செய்றது ஒமர் பாய். நாமளும் தவ்ஹீதுங்குற பேற நம்பி இவரு பின்னால வந்துட்டு இப்போ விக்கவும் முடியாம கக்கவும் முடியாம பொலம்பிக்கிட்டு இருக்கோம்.

சரி சரி ரொம்ப கவலப்படாதீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. மறுபடியும் வேற விஷயங்களோட மறுபடியும் சந்திப்போம்.

சரி ஒமர்பாய். போயிட்டு வாங்க.


வஸ்ஸலாம்

முல்லா 31.12.2007