Monday, December 31, 2007

2 day program of WAMY for Boys (9-13 yrs)

IN THE NAME OF ALLAH - THE MOST GRACIOUS, THE MOST MERCIFUL

World Assembly of Muslim Youth (WAMY)
Da’wah Committee – Eastern Province

Wamy - Dammam, Boys Youth Club Invites all Muslim Boys, ages between 9 – 13, for a
2-day Winter Camp: full of Fun Activities, Learning Experiences and a lot more.

InshaAllah it will be held on:
Jan 2nd & 3rd, 2008 – (Wednesday & Thursday)

Venue – Istraha Qila, Faisaliya [Near Area 91, Dammam]
Timing - 11.00 am – 8.00 pm

Transport arrangement is made from:

- Al-Khobar pick-up point: Darussalam Islamic Book Store.
- Dammam pick-up point: Masjid Rayyan.

The buses will leave at 10.00 am sharp!

This invitation is only for Muslim Teenage Boys ages 09 - 13 years.
Entry is by registration ONLY, so please Register!

For Registration, please contact:

Mohammad Sadaaqat – 0500526411, 8425116 – Ext [242]
Shaikh Zafar – 0509541802, 8425116 – Ext [289]

Email: dawah@wamyeast.org

Food will be served InshaAllah.

Sunday, December 30, 2007

பொய்யர்களின் கூடாரம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தியில் முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் குறைந்த இடங்களே கிடைத்துள்ளதை அறிந்து கொண்ட தமுமுக உடனடியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்கிறது. அதன் அடிப்படையில் சில மாற்றங்களை ரோஸ்டர் முறையில் செய்ய வேண்டும் என்ற விபரங்களை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கிறது.

அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களும் கிருத்தவர்களும் அடுத்தடுத்து வர ஏற்பாடுகளை செய்து வருகிறது தமுமுக.

இதை எப்படியோ அறிந்து கொண்ட தறுதலைகள் ஜமாத் தலைவர் வேண்டுமென்றே ஒரு ஸ்டண்ட் அடித்துள்ளார்.

கலக்கல் கேள்விகளுக்கு கலக்கலாக பதில் சொல்லக்கூடியவருக்கு இது கூடவா தெரியாது. தன்னை பின்பற்றக்கூடியவர்களுக்கு 'அறியாமை' எனும் ஷாக் ட்ரீட்டெண்ட்டை கொடுத்துப் பார்த்தார். இதில் அவரின் அடிவருடிகள் யாரும் ஒரு இன்ச் கூட பின்வாங்க வில்லை என்பதையும் எவரும் எதிர் கேள்விகள் கேட்க வில்லை என்பதையும் உணர்ந்து கொண்டு, அந்த ஆட்டு மந்தை கூட்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த ஸ்ட்ண்ட் அடிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முழுமுதற் காரணம், தமுமுக நடத்திய 'நன்றி அறிவிப்பு மாநாடு' தான். அது பெரும் எரிச்சலை அவருக்கு உண்டாக்கியுள்ளது. இந்த நன்றி அறிவிப்பு மாநாடு, பிஜே சொல்லி வரும் 'இடஒதுக்கீடு கும்பமேளா'வால் கிடைத்தது என்ற பொய்க்கு சாவு மணி. தமுமுகவின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் அல்லாஹ்வின் உதவியும் தான் 'இட ஒதுக்கீடு' கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும், தமுமுகவின் சமுதாய சேவைகளுக்கு கலைஞர் தந்த அங்கீகாரம் அவர் தனது சொந்தப் பொறுப்பில் தந்த இரண்டு ஆம்புலன்ஸ்களாகும். இந்த நன்றி அறிவிப்பு மாநாட்டால் தனது பலம் குன்றியதாக உணர்ந்த பிஜே தனக்குத் தானே தெம்பு ஏற்றிக் கொள்வதற்காக உலகில் உள்ள அறிவாளிகள் மற்றும் இந்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் கண்டு, 'கொள்'ளென்று சிரித்து ஏளனம் பேசிக்கூடிய அளவுக்கு நடந்த நாடகம் தான் பிஜேயின் 28.12.2007ல் நடத்திய தமிழக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து விட்டது என்று பிஜே சொன்னால், ஆமாம்! ஆமாம்!! என்று சொல்வதற்கு ஒரு எருமை மாட்டுக் கூட்டத்தை தன்னுடனேயே வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த முறை முஸ்லிம்கள் குறைந்த அளவில் அரசுப்பணிகளில் சேர்க்கப்பட்டிருப்பது போல் தோன்றுவது, பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் ரோஸ்டர் முறையினால் தான் என்பதை விளக்கினாலும் அதை அவர் ஏற்றுக் கொண்டாலும் அவர் எடுத்துள்ள 'மிஷன்' முடியும் வரை விட்டுக் கொடுக்க மாட்டார், அதற்காகவே அவர் 'விருந்துக்கு அழைத்து உணவு பரிமாறப்படுவதை' உதாரணம் காட்டி நாவு சொட்டச் சொட்ட பேசி, ரோஸ்டர் முறையை மறுக்கிறார்.

யார் யார் இந்த முறை விருந்துக்கு வர வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தித்தாளில் விளம்பரம் செய்து அழைத்துவிட்ட பிறகு, அழையா விருந்தாளியாக பிஜே சென்றால் அவர் விருந்தினராக ஆகமாட்டார், விருந்தும் கிடைக்காது. அவர் அடுத்த முறை அழைக்கப்பட்டால் தான் அவர் செல்ல வேண்டும். பொருந்தாத உதாரணத்தை சொல்லி யார் வலியவர்? யார் எளியவர்? என்று பிரித்துப் பார்க்கிறார்.

யார் வலியவர் யார் எளியர் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பிறகு தான் அந்த பட்டியலில் எளியர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். எளியர்கள் பட்டியலில் பிஜே வலியவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.

தமுமுக மார்ச் 7 ல் வரலாற்று சிறப்பு மிக்க பேரணியயை டில்லியில் நடத்தியது என்றால் இடஒதுக்கீடு தமிழகத்தில் தானே வேண்டும் டில்லிக்கு சென்று ஏன் தமுமுக பேரணி நடத்த வேண்டும்? என்று பிஜே கேட்டால் அவரது விசிலடிச்சான் குஞ்சுகள் காட்டுக் கத்து கத்திக் கொண்டு தலையை ஆட்டுகிறது.

மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக வாக்களித்துள்ளது, குறைந்த பட்ச செயல் திட்டத்திலும் இப்படிப்பட்ட இடஒதுக்கீடு தருவோம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி தமுமுக டில்லியில், பிஜே சிறிதும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பேரணியை நடத்தியது.

மத்திய அரசு பணி இடங்களில் தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு தேவை என்று தமுமுக நடத்திய 2004 தஞ்சை பேரணியில் தீர்மானம் ஏற்றப்பட்டது. அதனை நினைவு படுத்தி வேகப்படுத்துவதற்காகத் தான் தமுமுக டில்லியில் பேரணி நடத்தியது. 2004ல் போயஸ் தோட்டத்து பெட்டிகளுக்கு அடிமையாகிப் போய் சமுதாயத்தை கூறுபோட்டு ஓடிப்போன இவருக்கு மத்திய அரசுக்கு நினைவூட்ட வேண்டுமென்று எப்படி நினைவிருக்கும்?

தனது அடிவருடிகளை திருப்திப்படுத்துவதற்காக, 'டில்லிக்குச் சென்று ஏன் பேரணி நடத்த வேண்டும்?' என்ற முட்டாள்தனமான கேள்வியை கேட்டு வைத்துள்ளார். அவரது முட்டாள் குஞ்சுகளும் இதே கேள்வியை கூவிக் கொண்டு திரிகிறார்கள். இப்படித்தான் தனது இருப்பிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நாளை துக்க நாளாக அனுஷ்டித்த பிஜே, தனது அடிவருடிகளை தேற்றும் விதத்தில் பல நாடகங்களை நடத்தினார். அந்த வெட்கங்கெட்ட ஈனத்தனமான அவரது செயல்களை நாம் மறக்க தயாராக இல்லை. அந்த தருணத்தில் அவரது வெப்சைட்டுகளெல்லாம் முகாரி ராகம் பாடிக் கொண்டிருந்தன. பல நாட்களுக்குப் பிறகு தான் அவரது மௌனம் கலைந்தது. 3.5 சதவிகதம் முஸ்லிம்களுக்கு போதாது, இருந்தாலும் பரவாயில்லை என்று அறிக்கை வெளிவந்தது.

இவரது அறிக்கைகள் வெளிவருதற்கு முன்பே அவரது விசிலடிச்சான் குஞ்சுகள் அவரது மௌனத்தை ஒப்புதலாக எடுத்துக் கொண்டு, இடஒதுக்கீடு தந்த தமிழக அரசை திட்டித் தீர்த்தனர். கலைஞர் முஸ்லிம்களை ஏமாற்றி விட்டார் என்று கூவிவரத் துவங்கினார்கள். பிஜேயின் அறிக்கைக்கு பிறகு அடங்கினார்கள். உண்மை என்னவாக இருந்தாலும் பிஜே சொல்வது மட்டும் தான் அவர்களுக்கு வேத வாக்கு. இன்று ஒன்று சொல்வார், அதற்கு நேர்முரணாக நாளை ஒன்று சொல்வார். முதலில் சொல்லியதற்காக கூவிக் கொண்டு கொடி பிடித்த கூட்டம் மறுநாள் அதனை மாற்றிக் கொள்வதற்கு எவ்வித கூச்சமும் படாது. பச்சோந்திகளுக்கு போட்டியாளர்கள் இவர்கள் தான். அறிவாளிகள் விளங்கிக் கொள்வதற்கு ரதிமீனா பஸ் சம்பவம் ஒன்றே போதும்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அம்மையாரின் வீட்டிலிருந்து பிஜேயின் வீட்டுக்கு பெட்டிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதால் ஜெயலலிதாவை ஆதரித்து மண்ணைக் கவ்விய பிஜே, என்னுடைய மீசையில் மண்ஒட்டவில்லை பார்த்தீர்களா? என்று வீர வசனம் பேசிக் கொண்டு, 'பார்த்தீர்களா! தான் ஜெயலலிதாவிற்கு ஆதரவு அளித்ததால் கருணாநிதி தேர்தலில் முழு பலத்துடன் அரசு அமைக்க இயலவில்லை' என்று கூறினார். ஆளும் கட்சியாக இருந்த ஜெயலலிதாவை எதிர்கட்சி நிலைக்கு கொண்டு வந்தது தான் உண்மை.

தேர்தல் மேடைகளில் கருணாநிதியை விட மோடி சிறந்தவர் என்றும் கருணாநிதியை அவன் இவன் என்று சிங்கிளில் அழைத்தும் பேசினார்.

இட ஒதுக்கீடு தந்த பின்பு கருணாநிதியை வெட்கமில்லாமல் சந்தித்து நன்றி சொன்னதோடு எதிர்வரும் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை எழுத்து மூலமாகவும் தந்து காலில் விழாத குறையாக திரும்பி வந்தார். இதற்காக வேண்டி அவரது பாலிசியை தளர்த்திக் கொண்டாராம். ஒரு புடலங்காயும் இல்லை, இதுவெல்லாம் இவர் அடிக்கும் ஸ்டண்ட், இறுதியில் பெட்டி விசுவாசத்திற்காக ஜெயலலிதாவே சரணம். விசிலடிச்சான் ததஜ குஞ்சுகளுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக சில பல நேரங்களில் ஜெயலலிதாவை எதிர்ப்பது போல் நடித்தும் கொள்வார், ஒப்பந்தப்படி இவற்றையெல்லாம் ஜெயலலிதா கண்டு கொள்ள மாட்டார்.

அது சரி, பிறகு ஏன் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும்? ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஏன் பாலிசியை தளர்த்திக் கொள்ள வேண்டும்? நன்றாகவே தெரிகிறது ஜெயலலிதா சுத்த ஃபிராடு, இடஒதுக்கீடு தருவதாகவும் பிஜேபியுடன் கூட்டு வைக்க மாட்டேன் என்றும் கூறி முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அந்த இரண்டையுமே மீறியவர். அப்படிப்பட்டவர் எப்படி இடஒதுக்கீடு தருவார்? ஆணையம் போட்டு விட்டார் என்பதற்காக சென்று பார்த்தோம், அதுவும் பாலிசியை தளர்த்திக் கொண்டு சென்று பார்த்தோம் என்று பிஜே சொல்வது சுத்தப் பொய். ஜெயலலிதா ஆணையத்தை புதிதாக ஒன்றும் போட வில்லை, ஏற்கனவே இருந்த ஆணையம் காலாவதியானதால் அதனை புதுப்பித்தார். அது தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிப்பு செய்த பிறகு அதனை புதுப்பித்தார், அது இன்றளவிலும் சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கிறது. விண்டிவியை விட்டுக் கொடுத்ததற்காக சில கோடிகளும், கும்பமேளாவை நடத்துவதற்காக சில கோடிகளும், தேர்தல் பணியாற்றுவதற்காக சில கோடிகளும், தமிழகத்து முஸ்லிம்களை ஜெயலலிதாவிடம் அடகு வைத்ததற்காக சில கோடிகளும் பிஜேயின் பாக்கெட்டுக்கு வந்து விட்டதால், திருடனைக் கொட்டிய தேள் போல படு உஷாராக நடந்து கொண்டார். பணப்பட்டுவாடா நடந்த விபரங்களை அரசு அதிகாரிகளே ஒத்துக் கொள்கிறார்கள்.

எதிர்வரும் காலங்களில் அவரது பாலிசியை தளர்த்திக் கொண்டு தேர்தலில் நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கு, 'தமுமுக சரியில்லை, அதனால் தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்' என்று காரணம் கூறினால் போதும், அவரது குஞ்சுகள் வேகமாக தலையை ஆட்டுவார்கள்.

இதில் தமாசு என்னவென்றால் கருணாநிதியின் மகள் கனிமொழி மூலமாக கலைஞருக்கு எழுதிய கடித்தினால் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது என்ற புரூடாவை சேர்த்தே கட்டவிழ்த்து விட்டது தான்.

இதன் பிறகு தான் ததஜவினரின் கவிழ்ந்த தலை நிமிரத் துவங்கியது.

இப்பொழுதெல்லாம் ஜெயலலிதாவின் வீட்டுத் தோட்டத்திலிருந்து பிஜேயின் வீடு வரை ஒரு நிரந்தர பணப் 'பைப்' போடப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் 28.12.2007 ல் நடைபெற்ற கண்டனப் பேரணியும் அதில் கருணாநிதிக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தை மறு பரிசீனை செய்யப் போவதாக அறிவித்த அறிவிப்பும் என்று மக்கள் பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.

முஸ்லிம்களை அடகு வைத்து கோடி கோடியாக பெட்டி வாங்கிய ஒரே அயோக்கியர் முஸ்லிம் சமுதாயத்தில் பிஜே ஒருவராகத் தான் இருக்க முடியும். 'எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது' என்ற இவரது தத்துவத்தை அப்படியே நடைமுறைக்கு கொண்டு வந்தவர் இவர் ஒருவர் தான்.

அரசியல் அயோக்கியர்கள் எல்லாம் இவரிடத்தில் அரசியல் பாடம் படித்துக் கொள்ள வேண்டும், இந்த லட்சணத்தில் 'நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல' என்ற அடைமொழி வேறு. அவர் எந்த நிலையில் இருகிறார் என்பதை இது போன்ற வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதுண்டு இவர். 'எங்கப்பன் குதுருக்குள் இல்லை' என்ற பழமொழி இவர் விஷயத்தில் நன்றாகவே பொருந்துகிறது பாருங்கள்.

இவரது கண்டனப் பேருரையின் ஆரம்பத்தில் கருணாநிதி முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் இழைத்து விட்டதாகவும் அதற்கு ஆதாரமாக இருப்பது தனது கைகளில் உள்ள பேப்பர் கட்டிங்குகள் என்றும் கூறியவர், இறுதியில் ரோஸ்டர் முறையை பற்றி பேசுகிறார். கருணாநிதியின் துரோகத்தைப் பற்றி பேசினால் ரோஸ்டர் முறையை பற்றி பேசியிருக்கக் கூடாது. ரோஸ்டர் முறையை பற்றி பேசினால் கருணாநிதியின் துரோகத்தை பற்றி பேசியிருக்கக் கூடாது ஏனென்றால் இரண்டும் அவரது பார்வையில் எதிர்மறையான விஷயங்கள். எதிரெதிரான இரண்டையும் பற்றி பேசிவிட்டு திணாவட்டில் திரிகிறவர் தான் இவர். நம்மைப் பொருத்த வரை முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமைகளை எந்த விதத்திலும் பறிக்காத தமிழக அரசை கண்டித்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தால் எந்த பாதிப்பும் அரசுக்கு ஏற்படப் போவதில்லை, வரும் காலங்களில் இது போன்ற அர்த்தமற்ற போராட்டங்களால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட இவர் காரணமாக அமைந்து விடுவாரோ என்ற அச்சமும் எம்முள் இருக்கிறது. போராட்டம் என்பது விளையாட்டுக் காரியமா?

நாம் அறிந்த வரை தமிழகத்தில் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் இதே ரோஸ்டர் முறைதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கையை பொருத்து இப்பொழுது கிடைத்தவர்களுக்கு அடுத்த முறை கிடைக்காது, அடுத்த முறை கிடைத்தவர்களுக்கு அதற்கு அடுத்த முறை கிடைக்காது.

தமுமுக கொண்டுவர நினைக்கும் ரோஸ்டர் மாற்றத்தால் இரண்டு சமூகங்களுக்கு கிடைத்த பணியாளர் நியமனங்களை ஒத்துப் பார்ப்பதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர, அந்த மாற்றத்திற்கு பிறகும் இரு சமூகங்களுக்கும் கூடுதல் குறைவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

பிஜேயின் கண்டனப் பேருரையில் கர்ப்பிணிப் பெண்கள் கூட கால் கடுக்க கும்பமேளாவில் நடந்து வந்ததை குறிப்பிட்டார். அடப்பாவிகளா! முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு அளவே இல்லையா? ஒரு காலத்தில் இஸ்லாத்தை தூய முறையில் மக்களுக்கு எடுத்து வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நம்பி அவர் சொல்வது எல்லாம் சத்தியம் என்று நம்பிக் கொண்டு அவர் பின்னால் செல்லக்கூடியவர்களை வைத்து அரசியல் வியாபாரமே நடத்துகிறார். அவரின் பின்ணணியை இதற்குப் பிறகுமா விளங்கிக் கொள்ள முடியவில்லை.

பிஜேக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் சேர்த்து விலை பேசப்பட்டு ஜெயலலிதாவிடம் என்றைக்கோ விற்றுவிட்டார். அதற்காகத்தான் பத்து லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று காதில் பூ வைத்த மக்களிடமும் காதில் பூ வைக்க முடியாத ஜெயலலிதாவிடம் ஒரு லட்சம் என்றும் கூறினார்.

மொதத்தில் பிஜேயின் ஒவ்வொரு அசைவையும் அளந்து சரியாக புரிந்து கொள்ளும் மக்களின் உதவியை ஒவ்வொருவரும் நாடுவது எல்லோருக்கும் பயன் தரும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையையும் பொய்யையும் பிரித்து அறியும் சக்தியை தருவானாக.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா 31.12.2007

Wednesday, December 26, 2007

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய அதிகாரம்

வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

தமிழ்நாட்டில் ஏராளமான அளவில் வக்ஃபு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்களிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிட பல தடைக்கற்கள் இருந்தன. குறிப்பாக இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வக்ஃபு வாரியம் புகார் அளிக்க வேண்டும். தொடர்ந்து அவர்களை வலியுறுத்த வேண்டும் என எண்ணற்ற தடைகளைத் தாண்டிய பிறகே வக்ஃபு சொத்துக்களை மீட்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் தேவையற்ற கால தாமதம் நிலவி வந்தது. பல நேரங்களில் அதிகாரிகளும் ஒத்துழைக்க மறுத்த சூழ்நிலைகளும் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள வக்ஃபு நிலங்களை மீட்க பதவியேற்ற நாள்முதல் அயராது செயலாற்றி வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் 'மேற்கண்ட பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழ்நாடு வக்ஃபு வாரியச் செயலாளருக்கு அதிகாரம் பெறுவதே' என்ற முடிவுக்கு வந்தார். இதைத் தொடர்ந்து வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலரை உடைமை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என 24.7.2007 அன்று நடைபெற்ற வக்ஃபு வாரியக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்த நிகழ்வுகளின்போது வலியுறுத்தியும் வந்தார்.

இதனையடுத்து தமிழக முதல்வர், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட ஆவன செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:

''தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சட்டம் 1975 பிரிவு 2 (e)ன்படி 'பொதுச் சொத்து' என்பது அரசுக்குச் சொந்தமான அல்லது (அரசால்) குத்தகைக்கு எடுக்கப்பட்ட அல்லது (அரசால்) உடைமை கைப்பற்றப்பட்ட அல்லது அரசின் சார்பான சொத்து ஆகும். இச்சட்டத்தின் உட்பிரிவு (2)ன்படி எந்தவொரு சட்டத்தின்படியும் உருவாக்கப்பட்ட வாரியம் அல்லது உள்ளாட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அல்லது உரிமை அளிக்கப்பட்ட சொத்துக்களும் பொதுச் சொத்து என்பதில் உள்ளடங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் ஏராளமானோர் முறைகேடான வகையில் வக்ஃபு நிறுவனங்களுக்கு எவ்வித வாடகையும் செலுத்தாமல் குடியிருந்து வருவதைக் கண்டறிந்த தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் ஜனாப் செ. ஹைதர் அலி, வக்ஃபுச் சொத்துக்களில் உள்ள முறைகேடான குடியிருப்புக்களை அகற்றிட தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலருக்கும் இச்சட்டத்தின்படியான அதிகாரத்தை வழங்கி தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சட்டம் 1975 பிரிவு 3ன்படி தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரை உடைமை அதிகாரி (Estate Officer) ஆக நியமனம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வேண்டும் என தனது 12.6.2007 நாளிட்ட கடிதத்தில் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார். வாரியத் தலைவரின் கோரிக்கையைத் தமிழ்நாடு வக்ஃபு வாரியமும் தனது 24.7.2007 நாளிட்ட தீர்மானத்தில் வலியுறுத்தியது.

வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, அரசாணை (நிலை) எண்.107 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 20.12.2007ன்படி தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரை தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் அதிகாரி (Estate Officer) ஆக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் முறைகேடாக குடியிருப்போரைச் சட்டத்தின் பிரிவு 4ன்படி நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்யவும், பிரிவு 5ன்படி சொத்திலிருந்து வெளியேற்றவும் உடைமை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 8ன்படி எந்தவொரு நபருக்கும் அழைப்பாணை அனுப்பவும், விசாரணையில் ஆஜராவதை உறுதி செய்யவும், ஆவணங்களைக் கண்டு பிடித்துத் தாக்கல் செய்யவும் குறிப்பிட்ட இதர விஷயங்களில் இச்சட்டத்தின் நோக்கத்திற்காக உடைமை அதிகாரிக்கு 1908ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் வழக்கை விசாரிக்கும்போது உரிமையியல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் எவ்வித அனுமதியும் இல்லாமல், வாடகை எதுவும் கொடுக்காமல் அனுபவித்து வரும் முறைகேடான குடியிருப்பாளர்களை அகற்றும் வகையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது''.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Sunday, December 16, 2007

அயோத்தியில் இறைவனின் இல்லத்தை விரைவில் கட்டுவோம்

அயோத்தியில் ஆர்ப்பரிப்போம்!
அபூசாலிஹ்
உலகம் முழுவதும் வாழும் மனித சமூகத்தின் மத்தியில் இந்தியாவின் புகழை மாசுப்படுத்திய பாபர் மஸ்ஜித் தகர்ப்பு என்ற கொடூர நிகழ்வு நடந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்பட்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஒட்டுமொத்த இந்தியாவே பதறிய, கதறிய நிகழ்வாக அது அமைந்து விட்டது.

நாட்டின் எங்காவது ஒரு மூலையில் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டால் உடனே அந்தப் பிராந்தியமே கலவரத்தால் கொந்தளிக்கும். சமூக மோதல்களுக்கு அடிக்கல் நடப்படும். வன்முறை தலை விரித்தாடும். வாகனங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்படும். உடனே வட்டாட்சியரும், கோட்டாட்சியரும் வாரிச் சுருட்டிக் கொண்டு சம்பவ இடத்திற்கு, ஆர்ப்பாட்டக்காரர்களின் தாடையைப் பிடித்து தாங்காத குறையாக தாஜா செய்வார்கள். சேதப்படுத்தப்பட்ட 'சிலை' உடனடியாக அரசு செலவில் வைக்கப்படும் என வாக்குறுதிகள் தந்த பின்னரே சகஜ நிலைக்கு அந்தப் பகுதி திரும்பும். இது நாம் அடிக்கடி காணும் நம் நாட்டு நிலவரம். ஆனால் முஸ்லிம்கள் இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும், நீதிமன்ற அமைப்புகளின் மீதும் முழுமையாக நம்பிக்கை வைத்து இந்தியப் பேரரசு பாப்ரி மஸ்ஜித்துக்கு எத்தகைய ஊறும் நிகழாமல் பார்த்துக் கொள்ளும் என நிம்மதியுடன் இருந்த வேளையில்தான் 20ஆம் நூற்றாண்டின் நம்பர் ஒன் பேடித்தனம் நம்பவே முடியாத கோழைத்தனம் நடந்தது.

முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் இருந்த வேளையில் தான் இந்த ''நம்பிக்கைத் துரோகம்'' நடந்தது.

முஸ்லிம்கள் அவ்வாறு பொறுமை காட்டியதும், அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்ததும் தான் தவறோ என பிறகு நினைக்கும் அளவுக்கு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சதிச் செயல் நடந்தது.

மேற்படியாளர்களை நம்பாமல் முஸ்லிம்கள் தன் கையே தனக்குதவி என 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியை நோக்கி புறப்பட்டிருந்தால் பாப்ரி மஸ்ஜிதின் ஒரு செங்கல்லைக் கூட எந்த மனிதப் பதராலும் அசைத்திருக்க முடியாது. முஸ்லிம்களின் பிணங்களைத் தாண்டித் தான் அந்த பிண்டங்கள் செல்ல வேண்டும் என்ற நிலை அன்று ஏற்பட்டிருக்கக் கூடும்.

அரசு அமைப்புகளின் மீதும் நாட்டின் உயரிய மாண்புகளின் மீதும் வைத்திருந்த மதிப்பீட்டின் காரணமாக, மதிப்புமிக்க பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு மண்மேடாக்கப்பட்டது.


அன்று ஏமாற்றப்பட்ட இந்த திருச்சமூகம் அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை என்பதை 15 ஆண்டுகளுக்குப் பிறகும் 2007 டிசம்பர் 6லும் இந்த நாடும் மக்களும் உணர்ந்து கொண்டனர்.

நிலம் யாருக்குச் சொந்தம் என தீர்ப்பளிக்கப்படாமல் நெடிய 49 ஆண்டுகள். இடிக்கப்பட்ட பின்பு இடிக்கப்பட்ட மஸ்ஜிதைக் கட்டாமலும், இடித்த சதிகாரர்களை தண்டிக்க மனமில்லாமலும் 15 ஆண்டுகள் கழிந்தன.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நான்காவது நாளே சதிச் செயல் குறித்து விசாரிக்க லிபர்ஹான் ஆணையம் 'நயவஞ்சக திலகம்' நரசிம்மராவால் அமைக்கப்பட்டது. 10.12.1992ல் அமைக்கப்பட்ட லிபர்ஹான் ஆணையம் 16ஆம் தேதி தனது கடமையைத் (?) தொடங்கியது.

ஆம், தங்களது ஒத்தி வைப்பு வைபவத்தை தொடங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை 42 தடவை ஒத்தி வைக்கப்பட்டது.

43ஆவது தடவையும் லிபர்ஹான் ஆணையம் கூடும், ஒத்திவைப்பில் மேலும் ஒரு எண்ணிக்கைக் கூடும், கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து இவர்களுக்கு என்ன பொறாமையோ தெரியவில்லை? ஒத்திவைப்பு விவகாரத்தில் செஞ்சுரி அடிக்கும் அளவுக்கு லிபர்ஹான் ஆணையம் முனைவது வெட்கக் கேடல்லவா?

இதுவரை 330 அமர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. இன்னும் நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அநீதி 'பிடுங்கி' எறியப்படவும் இல்லை.

இதுவரை கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டு விட்டது. நீதிபதி லிபர்ஹானின் ஊதியமாக இதுவரை 37 லட்ச ரூபாயும், அலவன்சாக 34 லட்ச ரூபாயும் (தண்ட) செலவு செய்யப்பட்டிருக்கிறது. நீதி இதுவரை கானல் நீராகவே உள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதல் சாட்சியிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கால் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

கடந்த பாஜக ஆட்சியில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று உரிமை மீட்பு இயக்கமாம் தமுமுக டெல்லியில் கண்டனப் பேரணி நடத்தியது. பிரதமர் மன்மோகன் சிங்கை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான குழு சந்தித்தது. மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது. பாஜக ஆட்சியில் நிகழ்ந்த அந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பிரதமரிடம் தமுமுக கோரிக்கை வலியுறுத்தப்பட்டு தமுமுக உரிமைப் போராளிகள் சென்னை வந்து சேரும் முன்பே - பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் சி.பி.ஐயின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் ஆரம்ப சூரத்தனம் காட்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதன் பிறகு பாராமுகமாக இருந்தது. தமுமுகவின் நீதிமன்ற முற்றுகைக்குப் பிறகு இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் அனுமன் பிரசாத்திடம் இப்போது தான் விசாரணைத் தொடங்கியுள்ளது.

முதலில் வழக்குப் பதிவு செய்தது இவர்தான். 1992 டிசம்பரில் பெரிய கூட்டமாக வந்ததால் சாட்சிகளை அடையாளம் காண சிரமம் ஏற்பட்டதாக சிபிஐ கூறியுள்ளது. அதாவது 15 ஆண்டுகளாக சாட்சிகள் அடையாளம் காணப்படவில்லையாம்.


இது மத்திய புலனாய்வுக் குழுவின் அசட்டையா? இவர்களை வேலை வாங்குவோரின் கையாலாகாத் தன்மையா? கண்டும் காணாதிருக்கும் யுக்தியா? என நடுநிலையாளர்கள், நாட்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாபரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளான அத்வானி, உமா பாரதி உள்ளிட்டோரை விசாரிக்கும் ரேய்பரேலி நீதிமன்றத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி நான்கு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையை பிடிக்காத ஏதோ ஒரு சக்திதான் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் வெறும் பட்டாசு வகையைச் சேர்ந்தது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகள் எத்தகைய ரூபத்தில் உலா வருகின்றார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஐந்து குண்டுகள் டிசம்பர் 6ல் கண்டு பிடிக்கப்பட்டன. காவல்துறையினர் ராஜாராம் லோத் என்பவரை வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.


கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் திருமண ஊர்வலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு வகையைச் சேர்ந்தவை என்றும் கைது செய்யப்பட்ட ராஜாராம் லோத் எந்த பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்புடையவர் அல்ல என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மொகித் அகர்வால் தெரிவித்திருக்கிறார். ரொம்ப காலமாக நிலுவையில் இருக்கும் தனது வழக்கிற்காகவே ராஜராம் லோத் அங்கு வந்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை பிடிபட்டவன் முஸ்லிமாக இருந்தால் இந்த சாதாரணக் கதை 'மர்மக் கதை'யாக மாறியிருக்கும்.

நாடாளுமன்றத்தில்..

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீதி நிலை நாட்டப்படவில்லை. அநீதி 'பிடுங்கி' எறியப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று நாடாளு மன்றத்தில் இந்தப் பிரச்சினை வெடித்தது.


மாநிலங்களவை இந்தப் பிரச்சினையால் இரண்டுமுறை தள்ளி வைக்கப் பட்டது. மக்களவையில் அன்றைய அலுவல்களுக்கான பட்டியலை, சபாநாயகர் அவை துவக்கத்தில் பார்வையிடத் தொடங்கும் போது பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

உடனே, வெகுண்டெழுந்த சமாஜ் வாடிக் கட்சி உறுப்பினர்கள் 16ஆம் நூற்றாண்டின் வரலாற்று சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.

ராஜ்யசபாவில் சமாஜ்வாடி கட்சியின் ஷஹீத் சித்திக்கி மற்றும் அபூ அஸ்மியும் முழக்கங்களை எழுப்பினர். லிபர்ஹான் கமிஷன் ஆணையத்தின் அறிக்கைகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.

நாடாளுமன்ற பிரதான வாசலில் இடதுசாரி கட்சியினரும், சமாஜ்வாடி கட்சியினரும் தெலுங்கு தேசக் கட்சியினரும் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

'ஜனநாயகப் படுகொலையாளர்களை தூக்கிலிடு, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை கைது செய், என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன.

பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படை - பிரிட்டன் வாழ் இந்திய முஸ்லிம்கள் கோரிக்கை பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு மற்றும் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை போன்றவற்றுக்கு எதிரான உறுதியான நடவடிக்கையினை இந்திய அரசு மேற் கொள்ள வேண்டும் என பிரிட்டனின் இந்திய முஸ்லிம் கவுன்சில் தலைவர் முஹம்மத் முனாஃப் தெரிவித்தார்.

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும், முஸ்லிம்கள் அந்த இடத்தில் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டிக் கொள்வார்கள் - என்ற முஹம்மத் முனாஃப், 1528ல் முகலாயப் பேரரசர் பாபரின் கவர்னரால் அயோத்தியில் மஸ்ஜித் கட்டப்பட்டது. பாபரின் படைகள் பதான் மன்னர் சிக்கந்தர் லோடியை வெற்றிக்கொண்டதின் விளைவாக அயோத்தியில் கட்டப்பட்ட மஸ்ஜித்துக்கு பாப்ரி மஸ்ஜித் என பெயரிடப்பட்டது. பாபர் அயோத்திக்குச் சென்றதாகவோ அப்போது ராமர் கோவில் அந்த இடத்தில் இருந்ததாகவோ ஆதாரம் இல்லை எனக் கூறினார். முதலில் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறுதியுடன் முனாஃப் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் கடையடைப்பு

பழைய ஹைதராபாத் நகரில் முழுமையான கடையடைப்பு நடந்தது. சார்மினார் மற்றும் மக்கா மஸ்ஜித் பகுதிகள் வெறிச்சோடிச் காணப்பட்டன. அனைத்துக் கட்டடங்களின் மீதும் கறுப்புக் கொடிகள் பறந்தன. முழு அடைப்பிற்கு ஹைதராபாத்தின் முக்கியக் கட்சியான மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பு அழைப்பு விடுத்தது.

இந்தியா முழுவதும் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்றன.

இந்திய மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அணிவகுத்தனர்.

பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டி யெழுப்ப வேண்டும் என்பதை ஜனநாயகரீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி 13 ஆண்டுகளாக தமுமுக போராட்டம் நடத்தி வருகிறது.

அதுவரை பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் கறுப்புக் கொடி ஏற்றுதல் கறுப்புநாள் என அறிவித்தல் என்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என அன்றைய முஸ்லிம் அமைப்புகள் கருதின. டிசம்பர் 6 வருவதற்கு முன்பாகவே முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப் பிடித்து காவல்துறை கைது செய்வதும் நடக்கும். காவல்துறையினரின் அதிரடி சோதனைகளால் பல்வேறு இடங்களில் முஸ்லிம்களுக்கு துயரங்கள் தொடர்ந்தன.

மஸ்ஜிதை இடித்தவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு மஸ்ஜிதை இழந்த மக்களை துன்புறுத்திய கொடுமை தொடர்ந்த போது வெகுண்டெழுந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிரச்சினையை அதன் பீடத்திலேயே சந்திக்க ஆயத்த மாகியது.

தேடித்தேடி கைது செய்கிறாயா வா, வந்து இனி எங்களை கைது செய், கைது செய்து கைது செய்து களைத்துப் போவாய்' எனக் கூறி அதிரடியாய் இறங்கிய தமுமுக உரிமைப் போராளிகளின் படை அதுவரை காவல்துறை நடத்திய டிசம்பர் 6 அடாவடித் தனங்களை சந்திக்க முடிவு செய்தது. தேடித்தேடி கைது செய்த காவல்துறை, ஆயிரக்கணக்கில் திரண்ட முஸ்லிம் இளைஞர்களைக் கண்டு திணறித்தான் போனது.

தமுமுகவின் எழுச்சியால், டிசம்பர் 6ஐ காரணம் வைத்து நசுக்கும் அதிகார வர்க்கம் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வந்தது.


தலைநகர் தொடங்கி பட்டி தொட்டியெங்கும் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டங்களின் மூலம் தமிழகம் கிடுகிடுக்கத் தொடங்கியது.

டிசம்பர் 6 வந்தால் துரத்தி துரத்தி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களால் தன்னெழுச்சியாக பாப்ரி மஸ்ஜிதைக் கட்டித் தரவேண்டும் என போராடி கைதாயினர்.

தமுமுகவின் இந்த அறப்போராட்ட எழுச்சி பற்றிப்பரவிய எழுச்சித் தீ திக்கென பரவியது.

கடந்த ஆண்டு 42 இடங்களில் தமுமுக உரிமைப் போராளிகள் கறுப்புக் கொடிகளுடன் நெருப்பு விழிகளுடன் போராட்டக் களம் புகுந்தனர்.

அதனைத் தொடர்ந்து சில வாரங்களிலேயே அமெரிக்க கொடுங்கோலர்களால் மாவீரன் சதாம் ஹுஸைன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு ஆர்த்தெழுந்த கழகம் அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

கடந்த ஆண்டு சில வாரங்களுக்கு இடையே ஏற்பட்ட எழுச்சி இந்த ஆண்டு சில நாட்களிலேயே நிகழ்த்திக் காட்டி விட்டனர் கழகக் கண்மணிகள்.

வரலாற்று திருப்புமுனையாய் திகழ்ந்த நன்றியறிவிப்பு மாநாட்டை நவம்பர் 24ல் பல்லாயிரக்கணக்கில் மக்களை திரட்டி நடத்திக் காட்டி சென்னையை திணறடித்த பின்னர் சில நாட்களிலேயே டிசம்பர் 6 போராட்டத்தினை சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கி மாவட்ட நீதிமன்றங்கள் வரை முற்றுகையும் ஆர்ப்பாட்டமும் நடத்தி தேசிய அளவில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது தமுமுக.

தமுமுகவின் டெல்லிப் பேரணி, முஸ்லிம் அமைப்புகளுக்கு தன்னம்பிக்கையையும் ஒரு புத்தெழுச்சியையும் ஏற்படுத்தியது.

இதனை நிரூபிக்கும் விதமாக டெல்லியில் முஸ்லிம் அமைப்புகள் டிசம்பர் 6 போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன. தமுமுக, முஸ்லிம் இயக்கங்களுக்கு முன்னோடி இயக்கமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

ஆண்டுகள் 15 கழிந்து விட்ட போதிலும் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டும் அறப்போர்களத்தில் வீரியத்துடன் போராடுவோம். எத்தகைய தியாகத்தையும் செய்து அயோத்தியில் இறைவனின் இல்லத்தை விரைவில் கட்டுவோம் (இன்ஷா அல்லாஹ்) என தமுமுக சூளுரைக்கிறது.

Monday, December 10, 2007

மலேசியத் தமிழர்களுக்கு உரிமைகள் இல்லையா?

மலேசியத் தமிழர்களுக்கு ஒரேயடியாக உரிமைகள் இல்லை என்று கூறிவிட முடியாது

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியலில் நேரடியாகக் களமிறங்குவது என்று முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் 6 என்றாலே ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் பதற்றம், மலேசியத் தமிழர்கள் பிரச்னை உள்ளிட்ட தற்போதைய பிரச்னைகள் பற்றி தமுமுகவின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவிடம் பேசினோம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் அகிவிட்டன. இன்னும் டிசம்பர் ஆறாம் தேதி என்றால் பதற்றமான சூழல் உருவாகி விடுகிறதே...?

காவல் துறையினர் ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதை நான் தவறென்று சொல்லமாட்டேன். வருமுன் காப்பது சிறந்ததே. ஆனால் பெருமளவில் தமிழகம் அமைதியாகத் தான் இருந்து வருகிறது. 1997-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டார். அதையடுத்து நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் இறந்தார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால் அதற்கு பிறகு பொதுவாக அமைதியே நிலவுகிறது. முஸ்லிம் மக்கள் வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நாங்கள் போராட்டங்கள் மூலம் எதிர்கொள்கிறோம். தடைகளை மீறி போராட்டங்களும் நடத்துகிறோம். ஆனால் வன்முறையை விரும்புவதில்லை. இந்த பதற்றமான சூழல் தேவையற்றது.

கர்நாடகாவில் பா.ஜ.க முதன்முதலாக ஆட்சி அமைக்கும் முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் அதனால் தொடர முடியவில்லை. தென்னிந்தியாவில் பா.ஜ.க. வலுப்பெறுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

அப்படி நினைக்கவில்லை. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் செய்த தவறுகளால் தான், பா.ஜ.க. அதிக இடங்கள் பெற்றன. ஆட்சி அமைத்ததும் அதனால் தான். ஆனால் கடைசியில் கோமாளிகள் போல் அவர்கள் ஆக்கப்பட்டார்கள். கொள்கை வழியாக நடக்கும் கட்சி என்று பெருமை அடித்துக் கொள்ளும் அவர்கள், கடைசியில் பதவிக்காக எந்த நிலைக்கும் அடிபணிந்து போகக்கூடியவர்கள் என்பதை நிரூபித்தார்கள். அங்கே காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

பொதுவாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் முஸ்லிம்களை எப்படி நடத்தி வந்திருக்கின்றன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

முஸ்லிம்களுக்கு அதிக அளவில் நன்மைகள் செய்தது தி.மு.க.தான். அ.தி.மு.க. அப்படிச் செய்ததாகக் கூற முடியாது. சிறுபான்மையினரின் மனத்தைப் புண்படுத்தும் நடவடிக்கைகள் தான் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே இப்படித்தான். எண்பதுகளில் ராமகோபாலன், ராஜகோபாலன், திருக்கோவிலூர் சுந்தரம் போன்றவர்கள் பொதுக்கூட்டங்களில் மிகமோசமாக இஸ்லாம் பற்றிப் பேசி வந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களை எப்படி வேண்டுமானாலும் திட்டட்டும். ஆனால் நபிகள் நாயகம் அவர்களை மிக மோசமாக விமர்சித்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அவர்கள் மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்பட வில்லை. இவர்களின் இந்தப் பேச்சுகள் தான். பின்னாளில் பல பிரச்னைகளுக்கு வழி வகுத்தன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்தார். குஜராத் கலவரத்துக்குப் பிறகு நடந்த தேர்தலில் நரேந்திர மோடி வென்ற போது, அவருக்கு அம்மாநிலத்துக்கே சென்று பூங்கொத்து கொடுத்தார். இதெல்லாம் சிறுபான்மையினரைப் புண்படுத்தின.

சிறுபான்மையினருக்கு தமிழக அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. ஆனால் ஆந்திராவில் அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு தடைபட்டிருக்கிறது. இங்கேயும் அப்படி நேராமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டா?

ஆந்திர நிலையும் தமிழக நிலையும் வேறு. ஆந்திராவில் அது சிறுபான்மையினர் நலத்துறையின் பரிந்துரையில் செய்யப்பட்டது என்பதால் அதற்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இங்கே பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் பரிந்துரை பெறப்பட்டு இந்த இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மதரீதியான ஒதுக்கீடு அல்ல. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்களில் இடஒதுக்கீடு பெற்றுவந்த முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் தனித்தனி சதவிகித ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். ஆகவே இதற்கு சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளீர்களே?

1995-ல் த.மு.மு.க தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் எங்கள் ஆதரவு யாருக்கு என்பதைத் தெளிவாகச் சொல்லி வந்துள்ளோம். அத்துடன் அரசியல் கட்சிகளுக்கு இணையாகத் தேர்தல்களில் பிரச்சாரமும் செய்து வந்துள்ளோம். ஆனால் இப்போது நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக உணர்கிறோம். எனவே, முஸ்லிம்கள் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. ஆனால் எப்படி எந்த வடிவத்தில் போட்டியிடுவது என்பதெல்லாம் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அது பற்றி உள்கட்சி ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

மலேசியாவில் தமிழர்கள் போராட்டம் பற்றி? முஸ்லிம் பெரும்பான்மையினர் வசிக்கும் அந்த நாட்டில் இந்துக்கோயில்கள் இடிக்கப்படுவதாகச் சொல்கிறார்களே?

முதல் விஷயமாக அங்கு இந்திய வம்சாவளியினர் மீது அந்த அரசு தாக்குதல் நடத்தியதை நாங்கள் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வழிபாடு, கல்வி உரிமை இல்லை என்றெல்லாம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பி.ஆர் எனப்படும் பெர்மனென்ட் ரெஸிடென்ஸ் உரிமை பெற்றவர்களே. சிட்டிசன்ஷிப் என்ற குடியுரிமை பெற்றவர்கள் அல்ல. குடியுரிமை பெற்றவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளும் பி.ஆர். பெற்றவர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகாது. தீபாவளிக்கு முதல்நாள் ஒர் இந்துக் கோயில் இடிக்கப்பட்டது என்கிறார்கள். அன்று அங்கே நான்கு பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டன. 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் இடிக்கப்பட்டன. மலேசியாவில் மொத்தம் 60 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு 4,000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஆனால் 8 சதவிகிதம் இருக்கும் இந்துக்களுக்கு 17,000 கோயில்கள் இருக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் தான் பொதுவாக இடிக்கப்படுகின்றன.. ..

என்.அசோகன்
த சன்டே இந்தியன்

Sunday, December 09, 2007

உச்சநீதிமன்றமா? உச்சி குடுமி மன்றமா?

டிசம்பர் 6: ஆறாத மனம்... காயாத ரணம்...
ஜி.அத்தேஷ்


காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றிவிடும், வடுக்கள் அதன் நினைவுகளை அறிவுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு சமுதாயத்தின் தனித்தனி இதயங்களை உடைத்து நொறுக்க முடியாதவர்கள், இதயங்களில் வாழும் புனிதங்களை அவமதித்து மனங்களைப் புண்படுத்தி விடுகின்றனர். அப்படித்தான் நிகழ்ந்தது அந்த தேசிய சோகம்.

14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்ட நிகழ்வு. 1992 டிசம்பர் 6ம் நாள் அஃது ஓர் ஞாயிற்றுக்கிழமை. மதவெறி பிடித்த ஒரு கடப்பாரை கூட்டம், இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் மதிக்கும் இந்து மதத்தின் பெயரால், ராமனின் பெயரால், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. ராமரின் பக்தனை வெறியனாக்கிய ஜனசங்கம், நீறுபூத்த நெருப்பாக, இந்திய ஜனநாயகத்தையும், மத சகிப்புத்தன்மையையும் வேர் பிடித்து வளர்ந்திருக்கிறது. ஆதிக்க சக்திகளால் எழுதப்படும் ஊடகங்களும், வாசிக்கப்படும் செய்திகளும் இந்துத்துவ வகுப்பு வெறியை கொழுந்து விட்டு எரியச் செய்தன. இவற்றின் அறுவடையாக, சர்வதேச அளவில் முன்னுதாரணமாக நிகழ்திருக்க வேண்டிய நம் இந்திய தேசம் அவமானப்பட்டுக் கிடக்கிறது. 1992 டிசம்பர் 7ம் நாள் (மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள்) தொலைக்காட்சியில் அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் நரசிம்மராவ், ''மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டித் தரப்படும்'' என்றார். நாட்டின் தலைமை பீடமான பிரதமரின் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர். இளம் வயதில் ஜனசங்கம் ஊட்டிய வகுப்பு வெறி, நரசிம்மராவை இறுதிவரை மன்னிப்புக் கேட்க அனுமதிக்கவில்லை. நரசிம்மராவ் தவறிழைத்து விட்டார் என்று நேரு குடும்பம் தற்போது கூறிவருகிறது. அதே நேரம், 1949 டிசம்பர் மாதம் 22ம் தேதி, அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித்தில் சமூக விரோதிகள் ராமன், லட்சுமணன் மற்றும் சீதையின் கற்சிலைகளை தொழுகை தலத்தில் வைத்துவிட்டு திரும்பியதில் இருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நேரு பிரதமராக இருந்திருக்கிறார். அப்போது உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதே, யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்ட சிலைகளை யாருக்கும் தெரியாமல் வெளியே எறிந்து விட நேருவுக்கு தைரியமும், தொலை நோக்குப் பார்வையும் இருந்திருக்க வில்லை.


மஸ்ஜித்தை உடனே பூட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது எவ்வளவு அடிமுட்டாள்தனமான செயலாகும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசிய அளவில் முடிவெடுக்கும் தார்மீக உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு என்று கூறிய நேருவுக்கு, சிலைகள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தமாக இருக்க முடியும் என்பதில் முடிவெடுக்கும் உரிமை எப்படி இல்லாது போனது? சர்வாதிகாரி சர்தார் வல்லபாய் பட்டேலுடன் இணைந்து குஜராத்தின் சோம்நாத் நகரில் இருந்த ஒரு பள்ளிவாசலை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்பட காரணமான நேருவுக்கு, பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் மதச்சார்பற்ற முடிவெடுக்கும் மனம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

1949ல் பூட்டப்பட்ட பள்ளிவாசல் வளாகம் 1987ஆம் ஆண்டு ராம்நியாஸ் என்ற சிறப்பு பூசைக்காக வளாகம் திறந்து விடப்பட்ட போது தான், இப்படி ஒரு பிரச்சனை இருந்து வருவது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. பாபர் மஸ்ஜித் நிர்வாகத்திற்கும், அதை கோயில் என்று வாதாடும் ஒரு கூட்டத்திற்கும் இடையே மட்டும் இருந்து வந்த வழக்கு தேசிய இனங்களின் தன்மானப் பிரச்சனையாக்கப் பட்டது. 1987ல் ஷாபானு தொடர்பான ஜீவனாம்ச பிரச்சினையில் - பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத்தின் ஓட்டெடுப்பு மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறியடித்தார். அதற்கு பரிகாரமாக இந்துத்துவ கும்பலின் நீண்டநாள் கோரிக்கையான பாபரி மஸ்ஜித் பிரச்சினைக்கு ராஜீவ் காந்தி வழிவிட்டார். இதிலிருந்துதான் இந்திய ஒற்றமையை சீர்குலைக்கும் சில்மிஷ வேலைகள் ஆரம்பமாயின. 1987க்குப் பிறகே 1992 டிசம்பர் 6ல் பூஜைகள் செய்வதற்காக அத்வானி தலைமையிலான மதவெறிக் கூட்டம், பாபர் மஸ்ஜித் வளாகம் சென்றது. மஸ்ஜித் இடிக்கப்பட மாட்டாது என்று அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளித்தனர். மஸ்ஜித் பாதுகாக்கப்படும் என மத்திய அரசும் உறுதி கூறியது. பாதுகாப்புக்காக(?) சில மைல் தொலைவுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ராணுவம், ராம பக்தர்களாக மாறி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கோயிலை நோக்கி கையெடுத்து கும்பிட்டு நின்றது. இடிக்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டப்படும் என்பதே முன்னாள் பிரதமரின் வாக்குறுதி, மற்றும் முஸ்லிம்களின் கோரிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக 1947க்குப் பிறகு, எந்தெந்த இடத்தில் எந்தெந்த சமயத்தின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றனவோ அவை அவ்வாறே பாதுகாக்கப்படும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அந்தச் சட்டம் பாபர் மஸ்ஜிதையும் உள்ளடக்குகிறது.

இதற்காகத்தான் முஸ்லிம் சமூகம் 14 ஆண்டுகளாக விடாமல் போராடி வருகின்றது. எனவே இடித்த இடத்தில் மஸ்ஜித் மீண்டும் கட்டப்படுவதும், அமைப்புச் சட்டத்தின் உறுதிமொழியை நிறைவேற்றுவதும் அரசுக்கும், நீதித்துறைக்கும் கடமையாக இருக்கும் போது, அந்த அமைவிடம் யாருக்குச் சொந்தம் என்ற விவாதம் அர்த்தமற்ற தாகும். ஓர் உதாரணத்திற்கு, இடம் R.S.S.
க்கு சொந்தம் என்று தீர்ப்பானால், இடித்த இடத்தில் அளித்த வாக்குறுதிப்படி பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டி அதன் நிர்வாகம் பொறுப்பை நரேந்திர மோடியிடமா கொடுப்பது? என்ன பிதற்றலான வாதம். ஆனால் அறிவு ரீதியான வாதங்களை புறந்தள்ளி விட்டு, பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் முன்னர் ராமர் கோயில் இருந்ததா? அங்கே ராமர் பிறந்து, வாழ்ந்து, ஆட்சி செய்தாரா? என்றும் ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும் படி தொல்லியல் துறை பணிக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை.
புராண கணக்கீட்டின் படி ஒரு யுகத்திற்கு 5 லட்சம் வருடங்கள், முதல் யுகமான திரேதா யுகத்தில் ராமர் பிறந்தார் என்பது இந்துத்துவாக்களின் நம்பிக்கை. அரசியலமைப்பு சட்டத்தால் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மை இந்திய சமுதாயத்திற்கு இந்த கணக்கு எல்லாம் தெரியாது. அப்படியானால் 4 யுகங்களில் முதல் யுகமான திரேதா யுகத்தின் இன்றைய ஆயுள் கிட்டத்தட்ட 20 இலட்சம் வருடங்களுக்கு முந்தியது. கற்காலத்திற்கும் முற்பட்டதாக கருதப்படும் இதிகாச மனிதர்களின் தடம் பற்றி தகவல் அறிய தொல்லியல் துறை சம்மதித்து இருப்பது தேசிய நகைச்சுவை. ஒரு வேளை இந்துத்துவ சக்திகள் சில தகிடு தத்தங்களின் வழியே தங்களுக்குத் தோதான ஒரு தீர்ப்பினை உச்சநீதி மன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டால், அதன் வழியே, ராமர் அங்குதான் பிறந்தார் என்றோ, அல்லது கோயில் இடிக்கப்பட்டது என்றோ முடிவுகள் வெளியாகுமானால், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் வழக்கு என்ன வாகும்? அதற்காக சட்டத்தால் யாரையும் தண்டிக்க முடியாதே. மஸ்ஜித் இடிக்கப் பட்ட இடத்தில் கோயில் கட்டுவது சரி என்றால் மஸ்ஜித் இடித்தவர்களை தண்டிப்பது நியாயமாகாது. இடித்தவர்களை தண்டிப்பது சரி என்றால் கோயில் கட்டுவது நியாயமாகாது. அரசும், நீதித் துறையும் என்ன செய்யப் போகின்றன?

மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று, உமா பாரதியும், முரளிமனோகர் ஜோஷியும் கட்டித் தழுவி மகிழ்ச்சி வெளிப்படுத்திய காட்சி ஊடகங்களிலே உலா வந்தது. மாநிலம்தோறும் ர(த்)தம் ஓட்டி கூட்டம் திரட்டிச் சென்றவர் அத்வானி. இவர்கள் எல்லாம் தண்டனையில் இருந்து தப்பி இன்றுவரை சுதந்திரமாக உலாவருகிறார்கள். மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் பின்னணியில் கிடைத்த அரசியல் வளர்ச்சியைக் கொண்டே பிரதமர்களாகவும், மாநில முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி சுகம் கண்டார்கள்.

14 ஆண்டுகள் ஆகியும் வெளிவரத் தயங்கும் இவர்கள் மீதான தீர்ப்பு, வெளிவரும் தினத்தில், இவர்கள் ஆண்டு அனுபவித்து நீதியின் தண்டனைக்கு தப்பியவர்களாக மரணித்திருக்கலாம். நீதிமன்றம் தீர்ப்புகளை வாசிக்கும் போது, அதனை கேட்பதற்குக் கூட குற்றவாளிகள் பூமியில் உயிருடன் இருக்க மாட்டார்கள்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கும் அங்கு ராமர் கோயில் இருந்தது என்ற வாதத்திற்கான வழக்கும் சேர்த்து விசாரித்து வரும் லிபரான் கமிஷனின் முடிவுகள் இன்னும் சில மாதங்களில் வெளி வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தீர்ப்புகளின் மீது நெருப்புகளை பற்ற வைக்கும் சதித்திட்டங்களை மோடிகளும், கேடிகளும் உருவாக்குவார்கள். ராமர் கோயில் பிரச்சனையில் வெளிவர இருக்கும் தீர்ப்புகளை மிரட்டும் ஒரு முன்னோட்டமாகத்தான் ராமர் பாலம் தொடர்பான சர்ச்சையை நீதிமன்றம் மூலம் பிரச்சனையாக்கினார்கள்.

நாம் எதிர்பார்ப்பது வெறும் தீர்ப்புகளை மட்டுமல்ல, பிரச்சனைக்கான தீர்வுகள். பாபர் மஸ்ஜித் வளாகம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்ற உரிமைப் பூர்வமான தீர்வும், இடித்த இடத்தில் மீண்டும் பழம் பெருமையுடன் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பும், அவ்வாறு தீர்ப்பளிக்கும் தைரியமும், நியாய உணர்ச்சியும் நீதிபதிகளுக்கு அவசியப்படுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் அதிகபட்ச அதிகாரம் நாடாளு மன்றத்துக்கே உரியது என்றாலும், அரசியல் வாதிகள் எப்போதும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு தூரமாகவே இருந்து வருகின்றனர். அதனால் அறிவுஜீவிகள் தொடங்கி சாமானிய மக்கள் வரை அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்பு நீதிமன்றம் தான். அந்த நம்பிக்கையின் உச்சபட்சம் உச்ச நீதிமன்றத்தின் மீது இருக்கிறது. ஆனால், நீதிமன்றங்களின் செயல்பாடுகளிலும், கூட பாரபட்சங் களும், சமயச்சார்பும் காணப்படுகின்றன. உச்சநீதிமன்றமா? உச்சி குடுமி மன்றமா? என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அதன் நடவடிக்கைகள் பாரதூரமாக அமைந்திருக்கின்றன.

பாபர் மஸ்ஜித் பூட்டப்பட்டு 58 ஆண்டுகள் ஆகியும் அதன் மீதான நியாயத்தை நீதிமன்றங்களால் வெளிப்படுத்த முடியவில்லை. அதேநேரம், இந்துத்துவ சக்திகளுக்கு ஓர் ஆபத்து ஏற்படும் என்றால் விடுமுறை நாட்களிலும் கூட நீதியின் கதவுகள் திறந்து கொள்கின்றன. கொலைக்குற்றமும், காமவெறிக்குற்றமும் சுமத்தப்பட்டு காஞ்சி காமகோடி ஜெயேந்திரர் கைது செய்யப்படுகிறார். நீதிமன்றங்களின் விடுமுறை நாளான அன்று சிறப்புச் சலுகையாக நீதிமன்றம் திறக்கப்பட்டு ஜாமின் வழங்கப்படுகிறது. அதுவே, எந்தக் குற்றம் செய்யாதவர் என்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான அப்துந் நாசர் மதானிக்கு மூன்று முறை உச்சநீதிமன்றமே ஜாமின் மனுவை நிராகரித்துள்ளது, சிறுபான்மையினரை சில சமூக விரோதிகளும், அரசியல் விரோதிகளும், தேசிய மதச்சார்பின்மை யின் எதிரிகளும்தான் இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார்கள் என்றால், சில நேரங்களில் நீதிமன்றங்களும் அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்தப்படுகின்றன.

நீதிமன்றங்களிலே இருக்கும் கறுப்பு ஆடுகளுக்கும், வெளியே திரியும் வகுப்பு வெறி சக்திகளுக்கும் இடையே கண்ணுக்கு புலப்படாததோர் மெல்லிய இழை இரு முனைகளையும் இணைத்துக் கொண்டிருப்பதை மனித நேயர்கள் சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் வடிகட்டிய மீதமாக நீதிமன்றங்களே இருப்பதால் இந்த ஆண்டின் டிசம்பர் 6ஆம் தினத்தில், நீதிமன்றங்களின் கவனத்தையும், சட்டக் காப்பாளர்களின் நடவடிக்கையையும் துரிதப்படுத்தும் வண்ணம், நீதிமன்றங்களின் முன் போராட்டம் நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருக்கிறது.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் ஆத்திரத்தில் எழுந்த அறிவு மயக்கத்தால், நாடெங்கும் வீசியெறிப்பட்ட வன்மு றைக்கு ஏதும் அறியாத அப்பாவி மக்கள் பலியாகி வந்தனர். ஒவ்வொரு குண்டு வெடிப்பு ஒலங்களின் இரைச்சலால் முஸ்லிம் வீடுகளின் இரவுகள் அச்சத்துடன் விழித்திருந்தன. கைதுகளும், வழக்குகளும், அவமானங்களும், வழமையாயின.

அதுவே, குஜராத்தின் கோர படுகொலைகளை நியாயப்படுத்தவும் காரணமாயின. தமிழ்நாட்டு இளைய சமுதாயமும் மதவாத சக்திகளின் சதிகளுக்கு பலியாகிப் போகாமல் தடுக்க, த.மு.மு.க. சாத்வீகமான, அமைதி வழிப் போராட்டங்களை கையிலெடுத்தது. ஆரம்பக் கட்டத்தில் அதன் மீது விழுந்த சந்தேகப்பார்வைகளையும், எதிர்ப்புகளையும், பழிச் சொற்களையும் தன் மீதே சுமந்து, சமூகத்தின், இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம், பாதுகாவல், குடும்பங்களில் நிலவவேண்டிய சாந்தி சமாதானத்திற்காக பல்வேறு தியாகங்களைச் செய்து பல வெற்றிகளை இறையருளால் பெற்றிருக்கிறது.

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில், தேசிய அளவில் முஸ்லிம்களை ஒருமுகப்படுத்தி போராடவும் தமுமுக திட்டங்களை வகுத்து வருகிறது.

பாபர் மஸ்ஜித் மீதான உரிமை மீட்புக்காக தொடர்ந்து தன் முனைப்பான போராட்டங்களை வருடம் தவறாமல் நடத்தி, உறங்குபவர்களையும் தட்டி எழுப்பி, எதிரிகளை எச்சரித்து வருகிறது. அதன் போராட்டப் பயணத்தில் நீதிமன்றங்களுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்க மைல்கல். .

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Saturday, December 01, 2007

நன்றி அறிவிப்பு மாநாட்டில் மன நிறைவைத் தந்த குறைகள்

அசத்தி விட்டது, கலக்கி விட்டது கோவை த.மு.மு.க.

கோவையிலிருந்து வந்திருந்த தமுமுக ரயில்

த.மு.மு.க. நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு சிறப்பாகவும் மன நிறைவாகவும் நடைபெற்று முடிந்தது. அது பற்றிய உள்ளும் புறமும் நிறைந்த நிறைவான செய்திகள் பலவற்றை பல வழிகளில் தெரிந்து இருக்கிறீர்கள். எனவே நிறைவான செய்திகள் பற்றி எழுதாமல் குறைகள் பற்றி எழுத உள்ளோம்.

100க்கு 100 அல்ல 100க்கு 200 என்ற அளவில் டபுள் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒரே ஆதாரம் மாநாட்டுக்குப் பிறகு விண் டி.வி.யில் தோன்றிய நந்தினி நாயகர்கள் 3 நாட்களாக கொட்டிய வயிற்றெரிச்சல் வார்த்தைகளே.

மனப் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

மாநாடு பிசு பிசுத்து விடும் என நந்தினி நாயகர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். கோரிக்கை வைக்கத்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். நன்றி தெரிவிக்க யார்தான் வருவார்கள் என்று அவர்களுக்கு அவர்களே ஆறுதல் கூறி மனப் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள்.


முனீர் என்பவர் அவ்வப்போது தகவல் சொல்லிக் கொண்டே இருந்துள்ளார்.

மாநாடு அன்று திருவாளர் பி.ஜெ. கும்பகோணத்தில் இருந்துள்ளார். அவ்வப்போது மாநாடு பற்றிய லைவு - நேரடி தகவல்களை கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். மாநில செயலாளரான முனீர் என்பவர் அவ்வப்போது தகவல் சொல்லிக் கொண்டே இருந்துள்ளார்.

எதிர்பாரா கூட்டம் கூடி விட்டது. பல்லாயிரக் கணக்காணவர்கள் உள்ளே நுழைய முடியாமல் வெளியில் நிற்கிறார்கள். பஸ்களும் வேன்களுமாக வாகனங்களில் வந்தவர்களின் பல வாகனங்களை நிறுத்த விடாமலேயே ஒருவரைக் கூட கீழே இறக்க விடாமலேயே போலீஸாரால் திருப்பி விடப்பட்டுள்ளன.

இப்படி பல மாவட்ட வாகனங்கள் போலீஸாரால் திருப்பி விடப்பட்டுள்ளன. குறிப்பாக சேலம் மாவட்டத்திலிருந்து வந்த பஸ்களில் வரிசையாக வந்த 8 பஸ்கள் ஒட்டு மொத்தமாக யாரையும் இறங்க விடாமல் உள்ளும் புறமும் நிறைந்து விட்டது என்று கூறி போலீஸார் திருப்பி விட்டுள்ளார்கள்.

இதன் பிறகு வந்த வாகனத்தார், பராவாயில்லை ரோட்டோரமாக நின்று கேட்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த வாகனத்தாரிடம் நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று சொல்லி நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போலீஸார் ஏராளமான வாகனங்களை திருப்பி அனுப்பி விட்டுள்ளார்கள்.

நேரடி தகவல்களை கேட்பதை நிறுத்திக் கொண்டார் வயிறு எரிந்த பி.ஜெ.

இந்த மாதிரியான செய்திகளைக் கேட்டு வயிறு எரிந்த பி.ஜெ. மாநாடுன்னா கூட்டம் வரத்தானே செய்யும் என தனக்குத் தானே ஆறுதல் கூறி தனது வயிற்றெரிச்சலை ஆற்றிக் கொண்டார். முனீருக்கும் ஆறுதல் கூறிவிட்டு வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் மாநாடு பற்றிய லைவு - நேரடி தகவல்களை கேட்பதை நிறுத்திக் கொண்டார் வயிறு எரிந்த பி.ஜெ.

மாநாடு என்றால் மாதக் கணக்கில் விளம்பரங்கள் செய்வார்கள். 29 நாட்கள் இடைவெளியில் தேதி கூறப்பட்ட மாநாடு. எனவே மாதக் கணக்கில் விளம்பரங்கள் செய்வதற்கான வாய்ப்புகளே இல்லை. ஜனவரி 29 பேர்வழிகளான நந்தினி கட்சியினர் மாதிரி கோடிக் கணக்கில் செலவுகள் செய்து விளம்பரங்கள் செய்யவே இல்லை.

பெரும்பாலான சுவர்களில் டிசம்பர் 6 க்கான விளம்பரங்கள் எழுதப்பட்டு விட்ட பின்னரே நன்றி அறிவிப்பு மாநாடு தேதி அறிவிக்கப்பட்டது. எனவே மாநாட்டுக்கான போதிய சுவர் விளம்பரங்கள் செய்யவே இல்லை.

பகீரத முயற்சிகள் இல்லை. அலம்பல்கள் இல்லை. சலம்பல்கள் இல்லை. ஆட்களை திரட்டிக் கொண்டு வரவேண்டும் என்ற மிகச் சாதாரண முயற்சிகள் கூட செய்யப்படவே இல்லை.

நவம்பர் 24 நன்றி அறிவிப்பு மாநாடு என்ற மிக மிகச் சாதாரண அறிவிப்புகளையே அழைப்புகளாக ஏற்று மக்கள் வந்து விட்டனர்.

மாநாட்டுக்கு முன்பு வரை த.மு.மு.க.வினர் முறையாக மக்களை அணுகவில்லை. மக்களிடம் கொண்டு போய் செய்திகளை சேர்க்கவில்லை. சென்னையிலும் அதன் சுற்றுப் புற மாவட்டங்களிலும் தான் ஓரளவு பணிகள் நடக்கின்றன. தென் மாவட்டங்களில் நன்றி அறிவிப்பு மாநாட்டுப் பணிகள் அறவே நடக்கவில்லை என குறைபட்டுக் கொண்டேன்.

பட்டும் படாமலும் நடந்த கர்பலா காட்சிகள்.

நவம்பர் 24 நன்றி அறிவிப்பு மாநாடு நடந்து கொண்டிருக்கும்போது வெளியில் பட்டும் படாமலும் நடந்த கர்பலா காட்சிகள் பற்றி அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். த.மு.மு.க.வினர் முறையாக மக்களை அணுகாதது நல்லதாக ஆகி விட்டது.

வந்தால் வரட்டும் என்ற விதமாக நடந்து கொண்ட பின் கூட இவ்வளவு கூட்டம். அப்படியானால் முறையாக அழைத்து இருந்தால் நேரு உள் அரங்கத்தில் மாநாடு நடந்த அதே வேளையில் வெளி அரங்கில் கர்பலாதான் நடந்து இருக்கும். அல்லாஹ் காப்பாற்றி விட்டான். தென் மாவட்டங்களில் நன்றி அறிவிப்பு மாநாட்டுக்கான அழைப்புப் பணிகள் சரியாக நடைபெறாதது போதிய விளம்பரங்கள் செய்யாதது நல்ல காரியமாக ஆகி விட்டது.

நந்தினி நண்பர்கள் செய்திகளை பரப்பி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

போதிய விளம்பரங்கள் இல்லை என அரசு தரப்பு குறைபட்டுக் கொண்டது. இது வாரப்பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது. போதிய விளம்பரங்கள் இல்லை என உளவுத் துறை முதல்வருக்கு தகவல் கூறி விட்டது. எனவே கூட்டம் வராது. எனவே முதல்வரும் வரமாட்டார் என்று நந்தினி நண்பர்கள் செய்திகளை பரப்பி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

போதிய விளம்பரங்கள் இல்லை என எந்த உளவுத் துறை முதல்வருக்கு தகவல் கூறியதோ அந்த உளவுத் துறை நவம்பர் 24ஆம் தேதி என்ன செய்தது தெரியுமா? மாலை 4 மணிக்கே வெளி மாவட்டங்களிலிருந்து மட்டும் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னைக்கு வந்து விட்டார்கள் என்ற தகவலை பதிவு செய்துள்ளது.

அமைச்சர்களும் முதல்வரும் டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டார்கள்.

6.30க்கு மேல் 7மணிக்குள் அரங்கத்துக்கு வருவதாக முடிவு செய்து இருந்தார் முதல்வர். 4 மணிக்கே நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து விட்டார்கள் என்ற உளவுத் துறையின் இந்த தகவலை அறிந்தார் முதல்வர். உடனே 6 மணிக்கு முன்பே அரங்கத்துக்குள் போய் விட வேண்டும் என முன்னதாகவே உற்சாகத்துடன் புறப்பட்டுள்ளார். ஆனால் மாநாட்டுக்கு வந்தவர்கள் அவரை வர விடவில்லை. வழி நெடுகிலும் போக்கு வரத்து ஸ்தம்பித்து அமைச்சர்களும் முதல்வரும் டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டார்கள்.

மின்னல் வேகத்தில் வர வேண்டிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாகனங்கள் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டதால் மிதந்து வந்து அரங்கத்தை அடைந்தது. இவையெல்லாம் ஒருவகைக் குறைகள்தான் என்றாலும் மனக் குறைகள் அல்ல. மன நிறைவைத் தந்த குறைகள்.

நிறைவான செய்திகள் பற்றி எழுதாமல் குறைகள் பற்றி எழுத உள்ளோம் என கூறிவிட்டு மன நிறைவைத் தந்த குறைகள் பற்றி எழுதி உள்ளோமே. மன நிறைவைத் தந்த குறைகள் என்றாலே நிறைவான செய்திகள்தானே. இவை குறைகளே இல்லையே என எண்ணாதீர்கள். உள்ளும் புறமும் குறைந்த குறைமதியாளர்களால் கூறப்பட்ட குறைகள் பற்றியும் எழுத உள்ளோம்.

த.மு.மு.க.வின் நன்றி அறிவிப்பு மாநாட்டுக்கு செல்லாதீர்கள் என்று திருவாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள். நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவது கீழ்தரமான செயல் என்றார்கள். இறுதியாக விண் டி.வி.யிலேயே தோன்றி போகாதீங்கம்மா என்று கெஞ்சினார்கள். இப்பொழுது புரிந்து இருப்பீர்கள். நந்தினிக்காகவே பிரிந்து நந்தினிக்காகவே சேர்ந்தார்களே அந்த திருவாளர்கள்தான் இந்த மாதிரி கெஞ்சினார்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

எடுபிடிகள் வாயடைத்துப் போனார்கள்.

நன்றி சொல்ல வேண்டியதுதான் அதற்காக இவ்வளவு மக்களை கூட்டி நன்றி சொல்ல வேண்டியது இல்லை. இப்படி தங்கள் எடுபிடிகள் மூலம் டி.வி.யில் பேச வைத்தார்கள். எந்த மக்களை கூட்டி கோரிக்கை வைக்கப்பட்டதோ அந்த மக்களை கூட்டி நன்றி தெரிவிப்பதுதான் முறை என்றதும் எடுபிடிகள் வாயடைத்துப் போனார்கள்.

நன்றி அறிவிப்பு மாநாடு என்பது குண்டி கழிவும் வேலை என நந்தினிக்காகவே ராஜினாமா செய்தவர் கூறி இருக்கிறார். சிலரைப் பார்த்து நடு ரோட்டில் நின்று குண்டி கழிவ போகிற கூட்டம் என கூறி இருக்கிறார்.

தேர்தலிலின்போது இட ஒதுக்கீடு கோரிக்கையை நிபந்தனையாக வைத்தார்கள். கருணாநிதி இட ஒதுக்கீடு தருவார் என ஓட்டு கேட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவதை கு.. க.. வேலை என கொச்சையான வார்த்தையால் விமர்சிக்கிறீர்கள். கருணாநிதி இட ஒதுக்கீடு தர மாட்டார். நரேந்திர மோடியை விட மோசமானவர் கருணாநிதி என்று சொன்னவர்கள் நீங்கள். அப்படிப்பட்ட நீங்கள். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்கிறீர்களே அது .. .. .. (இந்த இடத்தில் இருந்த இரண்டு எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன) கிற மாதிரிதானே என பொதுவான ஒருவர் பதில் கூறி இருக்கிறார். இது நவம்பர் 22ஆம் தேதி நடந்த சம்பவம்.

தமிழகத்தின் மோடியும் நந்தினிக்காகவே ராஜினாமா செய்தவரும்.

நந்தினிக்காகவே பிரிந்து நந்தினிக்காகவே சேர்ந்தவர்கள் மாநாட்டுக்குப் பிறகு வயிறு எரிந்து விண் டி.வி.யில் பேசியதைப் பார்த்து இருப்பீர்கள். அவர்கள் வயிற்றில் எரியும் எரிச்சல் தீயை அணைக்க மேட்டூர் அணையை உடைத்து விட்டாலும் காணாது. அந்த அளவுக்கு வயிறு எரிந்து கிடக்கிறார்கள். த.மு.மு.க.வின் நன்றி அறிவிப்பு மாநாடு வெற்றி. வயிற்றெரிச்சலில் ஜே.ஜே, பி.ஜெ. என நவம்பர் 24 இரவு 9 மணிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டது. அதை தேவை இல்லாத ஒன்று என்று சொன்னவர்கள் உண்டு. அவர்கள், மாநாட்டுக்குப் பிறகு விண் டி.வியில் தமிழகத்தின் மோடியும் நந்தினிக்காகவே ராஜினாமா செய்தவரும் பேசியதை கேட்ட பிறகு உண்மையை உணர்ந்து இருப்பார்கள்.

மாநாட்டின் உச்சம் கோவையிலிருந்து வந்த தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் என்று சொன்னால் அது மிகையாகாது. அது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

கோவையிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் முதல் பிளாட்பாரத்திற்கு இன்னும் சிறிது நேரத்தில் வந்து சேரும். இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கிறது. 5ஆவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சிறிது நேரத்தில் புறப்படும் என கோவையிலிருந்து சென்னை வரையிலான ஒவ்வொரு பெரிய ரயில் நிலையங்களிலும் செய்யப்பட்ட அறிவிப்புகள் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி ரயிலில் வந்தவர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியதுடன் மாநாட்டு விளம்பரமாகவும் ஆகி விட்டது.

சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை செல்லும் தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 10ஆவது பிளாட்பாரத்தில் நிற்கிறது. ரயில் நிலையத்தில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த இந்த அறிவிப்பைக் கேட்பதற்கென்று ஒரு கூட்டம் பிளாட்பார்ம் டிக்கட் எடுத்து சென்று கேட்டு மகிழ்ந்தது.

நன்றி அறிவிப்பு மாநாடு பற்றி ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் நின்ற எல்லா சமுதாயத்தவரும் கேட்டு தெரிய வைத்தது. கோவையிலிருந்து வந்த தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்.

கோவையிலிருந்து வருகிறது என்றதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது என்றால் அதற்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் அதை விட கூடுதலான மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. கோவை முஸ்லிம்கள் என்பதால் இந்த பாதுகாப்பு என இரு பொருள்பட பலர் பேசிக் கொண்டனர்.

கோவை மக்களின் பாதுகாப்புக்காகவே அந்த மிகப் பெரிய பாதுகாப்பு.

மாநாடு முடிந்த பின்னர் த.மு.மு.க. ஸ்தாபகர் குணங்குடி ஹனீபா அவர்களை சென்னை புழல் சிறை சென்று சந்தித்தோம். அப்பொழுது கோவையிலிருந்து வந்த தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலுக்கு எஸ்கார்டு சென்ற ஒரு அதிகாரியைக் கண்டோம். ஏன் மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் அமைத்தீர்கள். கோவை மக்கள் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லையா என்று கேட்டோம். அப்படி இல்லை, தனி ரயிலில் வந்த கோவை மக்களின் பாதுகாப்புக்காகவே அந்த மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. அவர்கள் நல்ல முறையில் திரும்பப் போய் சேர வேண்டும் இல்லையா? என்றார்.

அசத்தி விட்டது, கலக்கி விட்டது கோவை த.மு.மு.க.

ஆக நன்றி அறிவிப்பு மாநாட்டு நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து இருப்பது தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் ரயில். டெல்லி பேரணியில் எந்தக் கிளையும் எதிர்பாரா அணிவகுப்பு நடத்தி முதல் இடத்தை தட்டிச் சென்றது கோவை. அது போல் எந்தக் கிளையும் எதிர்பாரா சிறப்பு ரயில் ஏற்பாடு மூலம் நன்றி அறிவிப்பு மாநாட்டிலும் முதல் இடத்தைப் பிடித்து விட்டது கோவை. எழுச்சி, புத்துணர்ச்சி, பரபரப்பு, ஒவ்வொரு ரயில் நிலையங்களிலுமுள்ள விளம்பரங்கள் என அசத்தி விட்டது, கலக்கி விட்டது கோவை த.மு.மு.க.

நன்றி: பஸ்லுல் இலாஹி