Sunday, January 24, 2010

கோட்டை மசூதிக்காக தொல்.திருமா ஆர்ப்பாட்டம்

கோட்டை மசூதிக்காக தொல்.திருமா ஆர்ப்பாட்டம்

வியாழன், 21 ஜனவரி 2010

வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதி தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி பல முஸ்லிம் அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

முஸ்லிம்களிடம் மசூதியை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அவர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்திலும் கோட்டையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 1800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

Friday, January 01, 2010

இந்தியா புரட்சியை நோக்கி...

இந்தியா புரட்சியை நோக்கி...

உரிமைகள் பறிக்கப்படுவதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத அப்பாவி முஸ்லிம்களை 'தீவிரவாதிகள்' என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யும் இவர்கள் தான் தீவிரவாதிகள். இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இந்த தீவிரவாதிகளை ஒடுக்க என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அப்பாவி முஸ்லிம்கள் மட்டும் தீவிரவாதிகள் என்ற பெயரில் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்?. நாட்டு மக்களின் ஒரு பிரிவினர் அநியாயமாக ஒடுக்கப்பட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்று இந்திய அரசாங்கத்திற்கு தெரியாதா?