Thursday, June 11, 2009

தமுமுகவின் உறுதியான நிலைபாட்டால் திமுக நடுக்கம்

தமுமுகவின் உறுதியான நிலைபாட்டால் திமுக நடுக்கம்

இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் தமிழகத்தின் சட்டமன்றத்திலும் முஸ்லிம்களின் குரல் கடந்த பல ஆண்டுகளாக ஒலிக்க வில்லை என்பதற்காக தமுமுக எனும் சமுதாய பேரியக்கம் தனது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியை கடந்த பிப்ரவரி 7, 2009 அன்று துவக்கியது.

அதற்காக சென்னை தம்பரத்தில் லட்சக்கணக்கானோர் பங்கு பெற்ற துவக்கவிழா மாநாடு நடத்தப்பட்டது. அந்த துவக்க விழா மாநாட்டில் கூடிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்த போதே திமுகவின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.

இனிமேல் அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற முடியாது என்ற அச்சம் தான் அவர்களின் கிளிக்கு காரணம்.

அந்த மமகவின் தாம்பரம் மாநாட்டிலேயே ஒரு சீட்டுக் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏதே வெற்றுக் கோஷங்கள் என திமுக நினைத்து விட்டதோ என்னவோ, தமுமுகவின் மமகவினர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் தொகுதி ஒதுக்கீட்டின் போது, திமுகவினர் தலைகீழாக நின்று பார்த்தும், இவ்விரு விஷயங்களில் மமக சமரசம் செய்து கொள்ள முன்வரவே இல்லை.

தேர்தலில் மமக வெற்றி பெறுமோ இல்லையோ, இவ்விரு கோரிக்கைகளும் முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றும் உறுதியான படிக்கற்கள் என்பதில் உறுதியாக இருந்தது.

காதர் மைதீனின் முஸ்லிம் லீக்கைப் போன்று மமகவையும் ஆக்கி விடலாம் என்ற திமுகவின் பகற்கனவின் மீது இடி விழுந்தது.

அதிமுகவின் ஓட்டுக்களை தேமுதிகவினர் அள்ளிக் கொண்டு போனதைப் போன்று, திமுகவின் முஸ்லிம் வாக்குகளை மமகவினர் அள்ளிக் கொள்வார்களோ என்ற பீதியிலிருந்து இன்னும் திமுகவினர் மீளவில்லை.

வாக்குப்பதிவு இயந்திர மோசடி மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் திமுகவினர் மிகப்பெரும் தோல்வியை சந்தித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதே மின்னணு வாக்குப்பதிவு முறை தொடர்ந்தால் வரும் இடைத்தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதனாலேயே வாக்குச் சீட்டு முறை வேண்டும் என்று திமுக, காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.

மமக இன்னும் ஒரு படி மேல் சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மேலும் எதிர்வரும் இடைத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி வாக்குச்சீட்டு முறை கொண்டு வராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய் விட்டது.

திமுக அரசு ஒரு விஷயத்தில் நியாமாகவே நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தேர்தலுக்கு முன்பும் வழங்கப்படும், தேர்தலுக்குப் பின்னும் வழங்கப்படும் அதற்கு பகரமாக அரசு ஊழியர்கள் அரசுக்கு ஆதரவாக மின்னணு இயந்திர அட்ஜஸ்ட்மென்ட் உட்பட நடந்து கொள்ள வேண்டும். அதுவே நடந்திருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி அம்பலத்துக்கு வந்து விட்டதால் இது போன்ற வேலைகளில் இனிமேல் ஈடுபட முடியாது என்பது திமுகவுக்கு இன்னொரு அதிர்ச்சி.

மமக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மமகவினரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணரிப்போன திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தூய அரசியலை முன்னிறுத்தி, மமக பிறந்த மூன்றே மாதங்களில் தேர்தலை சந்தித்து, பணபலம் மிகுந்த தேர்தல் களத்தில் போதிய பணபலம் இன்றி, தனித்து நின்று தேர்தலை சந்தித்த விதம் அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வெற்றி பெற்றால் அதிகாரத்தில் சமுதாயப்பணி, வெற்றி வாய்ப்பை இழந்தால் அதிகாரம் இல்லாத மட்டத்தில் சமுதாயப்பணி என்ற இலக்கை நோக்கி மமக நகர்ந்து கொண்டிருப்பது உண்மையான சமுதாய மற்றும் மக்கள் முன்னேற்றத்தை விரும்பும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறது.

இப்னு ஃபாத்திமா
11.06.2009

Wednesday, June 03, 2009

ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

புகாரியின் புதல்வன்

இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி (IT)துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை (Media) இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்னடைவு அடைந்திருப்பதையும், பிரபலமான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது.

இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் இருந்து வருகின்றது என்று பார்க்கலாம்.

விஷுவல் கம்யூனிகேசன் (Visual Communication), ஜெர்னலிசம் (Journalisam), எலக்ட்ரானிக்ஸ் மீடியா (Electronic Media), மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேசன்ஸ் (Mass Media and Communications) ஆகிய படிப்புகளை தமிழ கத்தில் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.

விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் (Visual Communication) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா (Electronic Media) ஆகிய இரண்டு படிப்புகளும் பி.எஸ்.சி.(B.Sc.), மற்றும் எம்.எஸ்.சி (M.Sc.) படிப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்.சி படிப்பதற்கு பிளஸ் டூவில் எந்த குருப் படித்தவர்களும் இதில் சேரலாம். அது போலவே இளநிலை பட்டம் முடித்தவர்கள் யார் வேண்டுமானாலும் எம்.எஸ்.சி விஸ்காம் (M.Sc. Viscom) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா (M.Sc.Electronics Media)வைப் படிக்கலாம்.

இந்த விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகளில் இணையதள வடிவமைப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, மல்டி மீடியா, அனிமினேஷன் ஆகியவை பாடத்திட்டங்களாகும். இதனை படித்து முடித்து விட்டால் தொலைக்காட்சிகள், வானொலிகள், விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு அனைத்து ஊடகங்களிலும் நுழைவதற்கு இந்த படிப்புகள் ஒரு விசிடிங் கார்டு போன்று ஆகும். இதனைப் படித்து விட்டு வேலையில் சேர்பவர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமே குறைந்தது ரூ.10,000க்கு மேல் கிடைக்கும். மேலும் வளைகுடா நாடுகளில் இந்த படிப்பு களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஊதியமும் மாதத்திற்கு லகரங்களில் கிடைக்கும்.

ஜெர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளைப் பொறுத்த மட்டிலும் பத்திரிக்கை துறையில் நுழைய விரும்புபவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். ஆரம்ப நிலை ஊதியமாக குறைந்தது ரூ.7,000 கிடைக்கும். இதுவே ஆங்கில ஊடகங்களாயின் ஆரம்ப நிலை ஊதியமே ரூ. 20,000க்கு குறையாது.

மேற்கண்ட ஊடகப் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒருதுறையை முன்னரே தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சி பெறுவதே நன்று. படிக்கும் போதே பகுதி நேரம் வேலையை தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்தப் படிப்புகளில் உண்டு.

இந்த படிப்பினை வழங்கும் கல்வி நிறுவனங்கள்..

1) புதுக்கல்லூரி, சென்னை
2) லயோலோ கல்லூரி, சென்னை
3) சதக் கல்லூரி, சென்னை
4) அண்ணா பல்கலைக் கழகம்
5) சென்னை பல்கலைக் கழகம்
6) காமராஜர் பல்கலைக் கழகம்
7) ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெர்னலிசம், சென்னை