Wednesday, October 31, 2007

தமிழக வக்ஃபு வாரியம் சிறப்பாக செயல்படுகிறது

தமிழக வக்ஃபு வாரியம் சிறப்பாக செயல்படுகிறது!
பாராளுமன்ற இணைக்குழு பாராட்டு!!
இப்பி பக்கீர்


நாடு முழுவதும் வக்ஃப் வாரியங் களின் நிலைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய நாடாளுமன்ற இணைக்குழு (Joint Parliamentary Committee) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள வக்ஃபுகளின் நிலைகளை ஆராய்ந்து, பொதுமக்களின், சமூக ஆர்வலர்களின் கருத்துகளையும் கேட்டு இறுதியாக அவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.

தமிழகத்திற்கு வந்த இந்த நாடாளுமன்றக் குழு அக்டோபர் 24 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர். வக்ஃபு வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்களும் உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களை கவனமாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களை அரசுத் துறைகளும் அரசு சார்ந்த நிறுவனங்கள், தனி நபர்களும் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பலர் கவலை யோடு தெரிவித்தனர். வக்ஃபு வாரியத்தின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு சொத்துக்கள் உடனடியாக மீட்பதற்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சென்னையில் மாணவ, மாணவியர் தங்குவதற்கான விடுதிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டு வக்ஃபு வாரிய பிரச்சனைகளை எடுத்துக் கூறியது முத்தாய்ப்பாக இருந்தது.

கூட்டத்தில் பேசிய ஜமாஅத் தலைவர்கள், சமூக ஆர்வலர்களில் பலர் தமிழக வக்ஃபு வாரிய தலைவர் செ. ஹைதர் அலியின் வேகமான செயல்பாட் டையும், வக்ஃபு வாரியம் தற்போது ஆற்றி வரும் ஆக்கிரமிப்பு மீட்புப் பணிகள், கல்வி விருது வழங்கும் திட்டம். உலமாக்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி திட்டம் ஆகியவற்றை சிலாகித்து பேசினார்கள்.

இறுதியாக பேசிய நாடாளுமன்ற இணைக்குழுவின் தலைவர் எஸ்.எம். லால்ஜன் பாஷா எம்.பி., அவர்கள் நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான 6 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இச்சொத்துகளின் மொத்த மதிப்பு 10 லட்சம் கோடி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் தனியார் மட்டுமின்றி முஸ்லிம்களே பல சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளனர்.


ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்கவும் வக்ஃபு சட்டங்களை வலுப்படுத்தவும், வக்ஃபு வாரியத்தை மேம்படுத்துவதற்காகத்தான் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு வக்ஃபு சட்டப்படி வக்ஃபு சொத்துக்களை 3 வருட குத்தகைக்கு மட்டுமே விட முடியும் என்று தெரிவித்த அவர் இறுதியாக டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் எங்கள் அறிக்கையை தாக்கல் செய்வோம் என்றார்.

இக்கூட்டத்தின் போது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஜே.எம். ஹாரூன், பேரா. காதர் மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் 26.10.2007 அன்று பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் திரிபாதி, உள்துறை செயலாளர் மாலதி ஐ.ஏ.எஸ்., திருவள்ளூர், காஞ்சி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள், தமிழக காவல் துறை இயக்குநர், மாநகர காவல்துறை ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளர் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டத்திலும் பாராளுமன்ற இணைக் குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்தியாவில் உள்ள வக்ஃபு வாரியங்களில் மிகச்சிறந்த முறையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல் படுவதாக நாடாளுமன்ற இணைக்குழு கூறியது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற மாநில வக்ஃபு வாரியங்களை செயல்பட வலியுறுத்துவோம் என்றும் நாடாளுமன்ற இணைக்குழு தெரிவித்தது.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Labels: , ,

Sunday, October 28, 2007

ததஜவின் அடிவருடிகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


உண்மையை உரத்துக் கூறும் என்ற அடைமொழியுடன் பொய்யைப் பரப்புவது ஒன்றையே தொழிலாக கொண்டிருந்த உமர் என்பவரின் உளறல்களையும், திருகுதாளங்களையும் பொய்களையும் நாம் பட்டியலிட்டதன் பின்னால், பின்னங்கால் பிடரியில்பட ஓடியவர் இன்று வரை நெட் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க வில்லை.

ஒருவேளை நாம் நமது முந்தய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல் அவரது கபுரிலேயே சென்று சமாதி ஆகிவிட்டார் போலும்.

தீன் முஹம்மது, உ.உ.கூ.உமர் என பல பொய்யர்களின் (பொய் ஐடிகளின்) பொய் முகமூடிகளை நாம் தோலுரித்து காட்டியதன் பின், அந்த வரிசையில் புதிதாக ஒருவர் புறப்பட்டுள்ளார்.

அழைப்புப்பணியில் என்ற அடைமொழியுடன் பவனி வரும், இவர், தனது தலைவனான தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவைப் போலவே, பொய்யை உண்மையுடன் கலக்கும் கயமைத்தனம் செய்வதில் கெட்டிக்காரர்.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா எனும் ரீதியில் பத்துக்கு எட்டு ஆக்கங்களை சுத்த சுயப்பிரகாச குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் தந்துவிட்டு, பாக்கி இரண்டில் சமுதாய துரோகி பிஜேவின் வால் பிடித்து, கால் பிடித்து கட்டுரை வெளியிடுவார்.

இவரது பித்தலாட்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு சிலர், இனி உங்களின் கட்டுரையில் அழைப்புப்பணியில் என்ற அடைமொழிக்குப் பதிலாக, அண்ணனின் வழியில் என்று எழுதிக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்லியதாகக் கூட நம்மிடம் தெரிவித்தார்.

இத்தகைய சிறப்புக்கு(?)ரிய இந்த அதிரை ஃபாரூக்கிடமிருந்து சென்ற வாரம் ஒரு மெயில் வந்தது. அதன் தலைப்பு 'புனித ரமளானில் முஸ்லிம் சமுதாயத்திற்கு மூன்று மகிழ்ச்சிகள்' எனக் காணப்பட்டது.

சரி, ரஸுல் (ஸல்) அவர்கள், இஃப்தாரின் போது – நோன்பு திறக்கும் பொழுது – ஒரு முஸ்லீமிற்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்களே அந்த ஹதீஸை அடியொற்றி தற்சமயம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தனி இட ஒதுக்கீட்டையும் இணைத்துத் தான் அவ்வாறு எழுதியுள்ளார் போலும் என நினைத்துக் கொண்டேன்.

ஆனால், அந்த மெயிலை வாசிக்க ஆரம்பித்த பொழுது தான், இந்த அதிரை ஃபாரூக் அழைப்பது அல்லாஹ்வின் வழியில் அல்ல. மாறாக அல்லாஹ்வின் எதிரியான அபூஜஹல் என தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்ட தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவின் அடியொற்றித்தான் என அறிந்து கொண்டேன்.

இன்னும் பலரால் புரியப்படாமல் உள்ள இவரது நயவஞ்சகத்தனத்தை நாடறியச் செய்யவே இந்த கட்டுரை.

சரி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்லாமல் அவர் குறிப்பிட்டிருந்த அந்த மூன்று மகிழ்ச்சிகள் தான் என்னவென்று கேட்கிறீர்களா?

1. தழிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு கிடைத்தது.
2. ரியாத் வாழ் மக்களுக்கு, பிஜே எழுதிய நோன்பு எனும் புத்தகம் இலவச வினியோகத்தில் கிடைத்தது.
3. தினமணியில் பிஜேவின் பேட்டி வெளியானது.
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுவதில் ததஜ அடிவருடிகள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை என்று இதன் மூலம் பிஜேவின் அடிவருடி அதிரை ஃபாரூக் நிரூபித்து விட்டார்.

அவர் குறிப்பிட்டுள்ளவற்றில் முதலாவது காரணத்தால் முஸ்லிம் சமுதாயம் முழுவதுமே மகிழ்ந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திக்களில்லை.

ஆனால் முழு சமுதாயத்திற்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய இச்செய்தி வெளியான திருணத்தில், இவர் யாருடைய காலடியில் அடிவருடியாக வீழ்ந்து கிடக்கிறாரோ அந்த கிரிமினல் பிஜே, தான் களவாடிச் சென்ற பத்திரிக்கைக்காக நடத்தி வரும் இணையதளம் இருண்டு போயிருந்ததே. அது இந்த அடிவருடிக்குத் தெரியுமா. அல்லது தெரிந்தும் அவ்விஷயத்தை மறைக்கிறாரா.

முழு சமுதாயமும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன அவ்வேளையில், இவரின் தலைவருடைய சைட் மட்டும் முகாரி பாடிக்கொண்டிருந்தது.

முழு சமுதாயத்திற்கும் சந்தோஷமளித்த அந்த தருணம் இவர்களின் முகங்களை இருளடையச் செய்திருக்கிறதென்றால், இவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என்று தானே அர்த்தம்.

போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் சமுதாயத்தை அடகு வைத்து பொட்டி வாங்கிய காரணத்தால் படம் காட்டுவதற்காக, விண்டிவி காமிராக்களுடன், வயல்வரப்பெல்லாம் நடந்து சென்ற அன்றய தினத்தில் அடேங்கப்பா எத்தனை ஆர்ப்பாட்டம். ஏதோ, எலிசபெத் ராணியின் ஒட்டியானத்தை ஏலம் விடுவது போல் எடுத்த எடுப்பிலேயே இலட்சக்கணக்கில் எண்ணிக்கையைச் சொல்லி, நேரம் கடப்பதை விட வேகமாக எண்ணிக்கையை பொய்யாக உயர்த்திக் கொண்டு போனார்களே – அத்தகைய தொழில் நுட்பம் இப்பொழுது எங்கே போனது என்று சமுதாயம் கேள்வி எழுப்புகிறது.

தமுமுக இடைவிடாத நெருக்குதல் கொடுத்து தங்களது இரட்டைக் கோரிக்கையை வென்றெடுத்து விட்டதே என்ற பொல்லாங்கு. இதனால் தான் இஞ்சி தின்ற மந்திகளாய் செய்வதறியாது திகைத்துப் போய் விட்டனர்.

சமுதாயம் மொத்தமும் சந்தோஷத்தில் திளைத்த போது, அவர்களின் முகமும், முகாமும் முகாரி பாடியதிலிருந்தே இடஒதுக்கீடு கிடைத்ததற்கும், இவர்களின் இயக்கத்திற்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

0.0001 சதவிகித பங்களிப்பேனும் இருந்திருந்தால் கூட இவர்கள் தலை கால் புரியாமல் கூத்தாடி இருப்பார்கள். இறுகிய முகத்தோடு இவர்கள் இருந்ததே, இவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என எண்ணப்படுவதற்கு போதுமானதாகும்.

என்றாலும், அறுவடை முடிந்து வெள்ளாண்மை வீடு வந்து சேர்ந்து விட்டதால், பங்காளிகளாக அல்ல, முழு உரிமைக்காரர்களாக ஆக முயற்சிக்கிறார்கள். ஆனால் சமுதாயம் மிகத் தெளிவாக இவர்களின் பித்தலாட்டங்களை புரிந்து கொண்டு வருகிறது.

இரண்டாவது மகிழ்ச்சியாக இவர் குறிப்பிட்டுள்ள விஷயத்தை படித்து சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.

ஏனெனில் இவரது தலைவரின் சிறு புத்தகம் ஒன்றை ரியாதிலுள்ள சிறு பகுதியில் இயங்கும் ஒரு அழைப்பு மையத்திலிருந்து இலவசமாக வினியோகித்து விட்டார்களாம். இவருக்கு தலை கால் புரியவில்லை. முழு சமுதாயமும் இதனால் மகிழ்ச்சியடைந்ததாக கண்கள் விரிய கற்பனை சிறகடிக்க மயக்கத்தில் உளறுகிறார்.

தமிழ் முஸ்லிம் சமுதாயம் உலகமெங்கும் பரந்து விரிந்து வியாபித்து நிற்கிறது. அதில் ரியாத்தில் அதிலும் குறிப்பிட்ட அந்த சென்டரைச் சுற்றியுள்ள வெகு சில தமிழ் முஸ்லிம்கள் மட்டுமே இலவச வினியோகத்தை பெற்றிருப்பர். மீச்சிறுபான்மையினரான இவர்கள் வேண்டுமானல் 2 அல்லது 3 ரியால்கள் மதிப்புள்ள ஒரு புத்தகம் இலவசமாக கிடைத்ததனால் மகிழ்ந்திருப்பார்கள். அதுவே சந்தேகம் தான்.

ஆனால், இந்த இலவச வினியோகத்தால் முழு சமுதாயமுமே மகிழ்ந்து போனதாக – ஓவர் பில்ட் அப் செய்கிறார்.

என்ன செய்வது. கும்ப மேளாவிற்கு பிறகு, பில்ட் அப் செய்தே பழகிப் போய் விட்டதால், அதிலும் ஓவராக இவர் கதையளந்துள்ளார்.

நாமறிந்தவரை, சவுதியில் செயல்படும் அழைப்பு மையங்களில் இலவச வினியோகம் என்பது பலகாலமாக நடைபெற்று வருகிறது. பல அறிஞர்களின் ஆக்கங்கள் இதுவரை இலவசமாக வினியோகிக்கப் பட்டுள்ளன. மவ்லவி கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் எழுதிய (அ) மொழிபெயர்த்த பல நூல்கள் பல சென்டர்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்ட பொழுது ஜாக் அமைப்பைச் சேர்ந்த எவரும் இது போல் பைத்தியக்காரத்தனமாக உளறவில்லை.

மஸ்தான் அலி பாகவியின் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்ட பொழுது, ஜமாஅத்துல் இஸ்லாமி இயக்கத்தவர்கள் இதுபோல் குதியாட்டம் போடவில்லை.

ஆனாலும், இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்?

என்ன செய்வது.. குறைகுடம் கூத்தாடத்தானே செய்யும். அதனால் தான் இந்த குறைமதியாளர் கூத்தாடுகிறார். ஆனால் முழு சமுதாயமும் இவரைப் போன்ற முட்டாள்களில்லை.

இவரும் இவரைப் போன்ற சில அடிவருடிகளும் வேண்டுமானால் மகிழ்ந்திருக்கலாம். காரணம் கிரிமினல் பிஜேவின் அனைத்து ஒலி – ஒளி நாடாக்களும், கு றுந்தகடுகளும், புத்தகங்களும் சவுதியின் அழைப்பு மையங்களின் ஊடாக தடை செய்யப்பட்டிருக்கும் வேளையில், எங்கோ ஒரு மூலையில் இயங்கும் அழைப்பு மையத்தில் எப்படியோ சரிகட்டி செய்யப்பட்ட வினியோகம் அல்லவா. எனவே தான் இத்தனை தூரம் பூரித்துப் போகிறார் போலும்.

மூன்றாவது மகிழ்ச்சியாக இவர் குறிப்பிடுவது, இவருடைய தானைத் தலைவனின் பேட்டி தினமணியில் வெளியானதை குறித்தாகும்.

இதிலும் முழு சமுதாயமும் மகிழ்ந்து போவதற்கு என்ன இருக்கிறது. தனது தலைவனின் மீது இவருக்குள்ள மட்டற்ற பக்தியின் வெளிப்பாடு தான் இது. என்ன செய்வது. போயஸ் தோட்டத்து பொன்மகளின் சகவாசம் ஏற்பட்டதிலிருந்து ததஜவின் தொண்டர்கள் கூட அதிமுக தொண்டர்கள் போலவே நடந்து கொள்கின்றனர். இவரது செய்கையும் அப்படித்தான் உள்ளது.

இவருக்கு இஸ்லாமிய இயக்கங்களின் வரலாறு மட்டுமல்ல, தினமணியின் வரலாறு கூடத் தெரியவில்லை. ஒருவகையில் தினமணியும் கூட இவரது இனம் தான். அதாவது நடுநிலை நாளிதழ் என்று சொல்லிக் கொண்டு, இருப்பதில் நல்லதாக நாலு விஷயங்களை வெளியிட்டு வரும் அதேவேளையில், வாழைப்பழத்தில் ஊசியாக – விஷ ஊசியாக – அவ்வப்போது டி.கே.ஜார்ஜ் போன்ற புல்லுருவிகளைக் கொண்டோ, அல்லது குருமூர்த்தி போன்ற இஸ்லாமிய எதிரிகளைக் கொண்டோ இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி, இஸ்லாமியர்களை ரணகளப்படுத்தி கட்டுரை வெளியிட்டு தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டிக் கொள்ள தவறியதில்லை.

இந்த ஃபாரூக்கும் அதே ரகம் தான். நல்ல விஷயங்களாக குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் நாலு மெயில் அனுப்பினாரானால், தனது தலைவரை திருப்திப்படுத்த ஓரிரு மெயில்களை கலந்து விடுவார். அதனால் தான் இனம் இனத்தை பாராட்டுகிறது போலும்.

தினமணியின் நிலையாக நாம் சுட்டிக் காட்டியுள்ளது கூட கொஞ்ச காலத்துக்கு முந்தய நிலை தான். அதிலும் கூட பத்திரிக்கை பயங்கரவாதி சோவின் செல்லச்சீடர் திரு. வைத்தியநாத அய்யர் பொறுப்பாசிரியராக பதவி ஏற்ற பின் இந்த விகிதம் இன்னும் கூடிவிட்டது.

அதனால் இந்த பேட்டி எந்த வகையில், முழு சமுதாயத்திற்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்ததோ ஃபாரூக்கிற்கே வெளிச்சம்.

ஆக, வரம்பு மீறுவதிலும் கூட வரம்பு மீறுபவர்கள் தான் தறுதலை ஜமாஅத்தின் அடிவருடிகள் என்று இந்த ஃபாரூக்கும் நிரூபித்துள்ளார்.

இவர் குறிப்பிட்டிருந்த இவை மூன்றும் முன்னுரைதான்.

இவர் இத்தோடு நிறுத்த வில்லை.

தனது தலைவனின் அடியொற்றி காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டுமல்லவா. அதனால், தினமணி ஆசிரியருக்கு யாரென்றே அறியப்படாத ஃபள்லுல் இலாஹியைப் பற்றி எழுதியுள்ளார்.

பாவம். ஃபள்லுல் இலாஹி என்பவர், இன்று இந்த அடிவருடி ஃபாரூக் எவரை உயர்த்திப் பிடிக்கிறாரோ அந்த பிஜேவை, அவரது கிரிமினல்தனங்களை அறியாமல் தலை மேல் வைத்துக் கொண்டாடி, அவருக்காக தனது நேரத்தை, பொருளாதாரத்தை எல்லாம் செலவழித்து விட்டு, இன்று அதே பீஜேவால் டிசம்பர் திருடன் என நாமகரணம் சூட்டப்பட்டு ஓரங்கட்டப்பட்ட விஷயம் இந்த அடிவருடி ஃபாரூக்கிற்கு தெரியாது போலும்.

அதனால் தான், பிஜேவின் பழைய பாடலுக்கு இன்று இவர் பின்பாட்டுப் பாடியுள்ளார்.

ரதிமீனா புகழ் பாக்கர் மட்டும் தான் இதுவரை பிஜேவின் சதிவலையிலிருந்து தப்பியுள்ளார். அதற்கு அவர்களுக்கிடையில் உள்ள வியாபார ஒப்பந்தம் அல்லது அதனையும் தாண்டி புனிதமான ஏதோ ஒன்றாக இருக்க வேண்டும். இதே போன்ற சலுகை ஃபாரூக்கிற்கும் கிடைக்குமா எனத் தெரியாது. விரைவில் இந்த ஃபாரூக்கின் சேவை பிஜேவுக்கு தேவையில்லாமல் போகலாம். அப்பொழுது இந்த ஃபாரூக்கிற்கும் மனநோயாளி பட்டமோ, ஏதோ ஒரு திருடன் பட்டமோ, அல்லது ஓம்னி பஸ் புகழோ கிட்டலாம். எனவே ஃபள்லுல் இலாஹி மீது ஓவராக பாய வேண்டாம் என்று மட்டும் சொல்லி வைக்கலாம்.

இந்த ததஜ அடிவருடிகள் அனைவருமே கோயபல்ஸின் சீடர்கள் என்பதை அவ்வப்போது வெளிகாட்டுவார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள் தான் ஃபள்லுல் இலாஹி மேட்டரும், கும்பகோணம் மேட்டரும்.

ஃபள்லுல் இலாஹியை டிசம்பர் திருடன் என பட்டம் சூட்டியது குறித்து, இலாஹி பலமுறை நேரடி விவாதத்திற்கு அழைத்தும், பிடி கொடுக்காமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் மாவீரர் தான் இந்த கிரிமினல் பிஜே.

இதனை அறிந்தும் அறியாத அப்பாவி அடிவருடி ஃபாரூக் போன்றவர்கள் கொஞ்ச கொஞ்ச இடைவெளியில் மீண்டும் மீண்டும் இதனை சொல்லி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தான் கும்பகோணம் கும்பமேளாவைப் பற்றியும் ஃபாரூக் எழுதியுள்ளார்.

10,12,15,18 இலட்சம் என்று மனம் போனபடி கூவி வந்த ததஜ குஞ்சுகள், தனது தானைத் தலைவன் கும்பகோணத்தில் ஒரு இலட்சம் பேரை கூட்டினோம் என சுரதி குறைந்து, தலை குனிந்து சொல்லிய விபரம் அறிந்ததும் அடங்கி விட்டனர்.

இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதால், இப்பொழுது மீண்டும் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர் போலும். ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வது, குட்டு உடைந்து விட்டால் அமுக்கி வாசிப்பது, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு அதையே சொல்லித் திரிவது, இதுதானே கோயபல்ஸ்ஸின் டெக்னிக். இதனை தவறாமல் செய்து வரும் இவர்கள் தான் கோயபல்ஸ்ஸின் உண்மையான வாரிசுகள்.

இந்த ஃபாரூக் கனவில் மிதப்பவர் போலும்.

அதனால் தான் வளர்ச்சி ததஜவிலும், வீழ்ச்சி தமுமுகவிலுமாக மாறிவிட்டது என மனப்பால் குடிக்கிறார்.

2004இல் விரட்டப்பட்ட ஷைத்தான், வெருண்டோடியதன் பின்னால் தான் தமுமுக தனது சக்தியை உணர்ந்து கொண்டது. அதுவரை தமிழகத்திற்கு உள்ளேயே கூட குறிப்பிட்ட வட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த தமுமுக தடை பல தாண்டி இந்திய தலைநகரிலேயே தடம் பதித்தது.

இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. டிசம்பர் 6, 2004 அன்றய தினம் ஆங்கில அலைவரிசை இல்லாத அல்ஜெஸிரா அரபி அலைவரிசையில், அழகு தமிழ் கொஞ்சியது.

அன்றிலிருந்து அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் தமுமுக பெருவளர்ச்சி கண்டு வந்துள்ளது என்பது அனைவரும் அறிந்து ஒன்று. இதனை கூட மாற்றிச் சொல்ல துணிகிறார் எனில், இவர் எப்படிப்பட்ட பொய்யராக இருக்க வேண்டும்.

தமுமுக நடத்திய டெல்லி பேரணியின் தாக்கம் பலரையும் பாதித்துள்ளது. இந்த தறுதலை ஜமாத்தினரையும் அது பாதித்துள்ளது போலும். தமுமுக தஞ்சைப் பேரணியின் இறுதியில் என்ன பிரகடனம் செய்தது என்பதனையே மறந்தவர்களாக பேரணிக்குப் பின் ஓடிப்போனவர்கள் இருக்கின்ற காரணத்தால் தான் இப்படி கேள்வி எழுப்புகின்றனர்.

உண்மையில், மத்திய காங்கிரஸ் அரசுக்கு நாமும் சேர்ந்து ஆதரவளித்தோமே, அவர்களிடத்திலும் இடஒதுக்கீடு கோரிக்கையயை வைத்தோமே அதனைப் பெறுவதற்காக நாம் முயற்சிகள் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் எதுவும் இல்லாத காரணத்தால் தான் தமுமுகவின் டெல்லி பேரணி பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால், அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் டெல்லிப் பேரணியை கண்டவர்கள், அதற்காக தமுமுக எடுத்த முயற்சிகளை அறிந்தவர்கள், தமுமுகவை தங்களது முன்னோடி ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு, தமுமுகவிடம் பயிற்சி பெற பல மாநிலங்களிலிருந்தும் ஓடோடி வருகின்றனர். இந்த சிறப்பை அறியாதவர்களை நினைத்தால், கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

இறுதியாக ததஜவின் மாநிலம் தழுவிய போராட்டமே இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது என ஃபத்வா கூறி முடித்து வைத்துள்ளார்.

மாநிலம் தழுவி எத்தனை முறை போராடினார்கள்? இடஒதுக்கீடு பெற்றுத்தர என்னென்ன வழிகளில் போராடினார்கள் என்று சமுதாயத்தவரிடம் கேட்டால் சிரித்துக் கொண்டே போய் விடுவார்கள். இவர்கள் இடஒதுக்கீட்டிற்காக எந்த ஒன்றும் செய்யவில்லை என்பதற்கு அவர்களே சாட்சிகளாக உள்ளனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகி ஐந்து நாட்கள் வரை அமைதியாக இருந்ததில் இருந்தே இவர்களுக்கும் இடஒதுக்கீட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்.

பெரிய அறிவாளியாக தன்னை எண்ணிக் கொண்டு இறுதியில் 4 கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

(1) பிஜே தீவிரவாதத்தை ஆதரித்தாரா?
அடிவருடி ஃபாரூக் அவர்கள் ஏர்வாடி காஸிம் போன்றோரை அவசியம் சந்தித்தால் இதற்கான பதில் கிடைக்கும்.
(2) ஜிஹாத்
ஜிஹாத் குறித்த பிஜேவின் கருத்துக்கள் நிலையானதல்ல. ஆளுக்கு ஏற்றார்போல் சமயத்திற்கு ஏற்றார்போல் பேசுவார் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.
(3) பதவி ஆசையும் விளம்பரமும்
பதவி ஆசை இல்லாதவர் தான் எஸ்.எஸ்.யூ வை கீழிறக்கி தானே தலைவராகிக் கொண்டாரோ என்றும் விளம்பர ஆசை இல்லாதவர் தான் காசு கொடுத்து மலேசிய பத்திரிக்கையில் விளம்பரம் செய்து அதனையே பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டாரோ என பொதுமக்கள் வினவுகின்றனர்.
(4) தீவிரவாதத்தால் தான் நாடுகடத்தப்பட்டாரா?
இதற்கான பதிலை ஃபாரூக் தான் நிரூபிக்க வேண்டும். தீவிரவாத குற்றச்சாட்டினால் நாடு கடத்தப்பட வில்லையானால் ஏன் அவரது பாஸ்போர்ட்டில் ரெட் எக்ஸ் முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்? ரெட் எக்ஸ் இல்லை என வாதிடுவாரேயானால் அதே பாஸ்போர்ட்டில் மீண்டும் அவரால் அந்நாடுகளுக்குச் செல்ல முடியுமா - ஃபாரூக் விளக்குவாரா?

அரைவேக்காட்டு அடிவருடி ஃபாரூக்கிற்கு இதெல்லாம் தெரியுமா அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா.

ஆக மொத்தத்தில் இதற்கு பிறகும் ஃபாரூக் ஏதாவது மெயில் அனுப்புவாரானால் ஷைத்தானின் வழியில் அழைக்கும் அதிரை ஃபாரூக் என எழுதி அனுப்புவதே பொருத்தமானதாக இருக்கும்.

அல்லாஹ் ஃபாரூக் உள்ளிட்ட அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. வஸ்ஸலாம்.

ராவுத்தர் 28.10.2007

Friday, October 26, 2007

இடஒதுக்கீடும் இவர்களும்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

ஏக்கப் பெருமூச்சோடு பலநாட்கள் (வருடங்கள்?) எதிர்பார்த்து ஏங்கித் தவித்த சமுதாயத்தினர் சற்றே இளைப்பாற இனிக்கும் செய்தியாக தனி இடஒதுக்கீடு இந்த ரமளானில் சாத்தியமாகியது. அல்ஹம்துலில்லாஹ்.

தமுமுக தனது தாரக மந்திரமாக முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன்வைத்த போது,

அதனை ஏகடியம் பேசி எள்ளி நகையாடிய முஸ்லீம் லீக், தற்பொழுது தாங்களும் அதற்காக பலமுறை குரலெழுப்பியதாக கூப்பாடு போடுகின்றனர். முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு பறிக்கப்பட்ட போது பதவியில் இருந்து கொண்டு பாராமுகமாய் இருந்தவர்கள், இன்று தமுமுகவின் முயற்சியால் மீண்டும் சாத்தியமாகின்ற பொழுது தன்னை நிலை நிறுத்துவதற்காக தாமும் போராடியதாக தப்பு தாளம் வாசிக்கிறது என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒன்று.

முஸ்லிம் லீக் மட்டுமல்ல, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாக உள்ள பல்வேறு இயக்கங்களும் இன்று உரிமை கொண்டாடி வருவதை காண முடிகிறது.

அந்த வகையில், இடஒதுக்கீட்டை பெறுவதற்காக எந்த ஒன்றையும் செய்திடாத ஒருவர், இணைந்திருந்த காலத்திலேயே முஸ்லிம்களின் வலிமையை பறைசாற்றிய தஞ்சைப் பேரணிக்கு எதிராக சதி செய்த தனித்தலைவர், முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்குவதையே தனது பிழைப்பாக கொண்டுள்ள எழுத்து வியாபாரி திருவாளர் கிரிமினல் பிஜே அவர்களும் இன்று தன்னால் தான் இடஒதுக்கீடு சாத்தியமாகியது என சவுண்டு விடுகிறார்.

அவரது பேட்டி தினமணியில் பிரசுரமானதும், அதுவரை இருண்டு போயிருந்த அவரது இரசிகமணிகள், பிரகாசமடைந்து விட்டனர்.

இடஒதுக்கீட்டிற்கென எந்த துரும்பையும் நாம் அசைக்காமல் இருக்கும் பொழுது, தமுமுகவின் நெருக்குதலால் இந்த இடஒதுக்கீடு அமுலுக்கு வந்துவிட்டதே. இந்நிலையில் சமுதாய மக்களிடம் நாம் எப்படி சமாளிப்பது என இல்லாத மூளையை கசக்கிக் கொண்டு இருண்டு போய் கிடந்தவர்கள் இஸ்லாமிய எதிரி குருமூர்த்தியின் நண்பன் வைத்தியநாதன் கருணை கிட்டியதும் பிரகாசமாகி விட்டனர்.

அரசியல் அநாதையாகி விட்டவர்களை கொஞ்சம் கைதூக்கி விடுவதற்காக பார்ப்பன பத்திரிக்கைகள் அவ்வப்போது கைக்கூலி பெற்றுக் கொண்டு, தங்களது தூரிகைகளை துடைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து வருவார்கள். அந்த நிலையைத்தான் தற்பொழுது தினமணியும் எடுத்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. அதனால் தான் குருமூர்த்தியை பேட்டி காணும் அதே வைத்தியநாதன் பிஜேவையும் பேட்டி கண்டார் போலும்.

மலேஷியாவில் மானம் கெட்டு, கைக்காசு செலவு செய்து பத்திரிக்கையில் விளம்பரம் செய்து, அதையே தனது ரசிகர்களிடம் பத்திரிக்கை செய்தி என படம் காட்டி அனுபவப்பட்டவர் இப்பொழுதும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாரோ என்று கூட ஒரு பேச்சு நிலவுகிறது.

தினமணிப்பேட்டியை போஸ்டர் வேறு அடித்து ஒட்டி அற்ப சுகம் காண ததஜ ரசிகர்கள் துடிக்கின்றனர். இது ஒன்றே தனி இடஒதுக்கீட்டிற்கும் ததஜவிற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என நிரூபிக்க போதுமானதாகும்.

அந்த பேட்டியிலும் எத்தனை முரண்பாடுகள்? எத்தனை பொய்கள்?

முதலாவதாக, கிரிமினல் பிஜேவின் சிறப்பம்சமாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் என்ன தெரியுமா – பதவி அரசியல் இவருக்கு இல்லாத நாட்டம் - என்பதாகும்.

படித்தவுடனேயே பலர் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.

காரணம் தமுமுகவிலிருந்து தறி கெட்டு ஓடி திருச்சியில் நின்று கொண்டு இவர் புணர்நிர்மானம் செய்த அமைப்பு, அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு என்பது தான். பின்னர் அதனையே தவ்ஹீத் ஜமாஅத் என்றும், பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் புதிய புதிய நாமகரணங்கள் சூட்டியதே அரசியலில் பதவி காண வேண்டுமென்ற இவரது அவாவினால் என்பது இவரது பரகசியமான அரசியல். இது மட்டுமல்ல, பதவி ஆசை இல்லாததால் தான், தான் துவங்கிய அமைப்புக்கு ஆரம்பத்தில் ஒரு பொம்மை தலைவரை அமர்த்தி விட்டு, பின்பு தலைவராகிக் கொண்டாரோ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இது மட்டுமல்ல, அப்பேட்டியில் ததஜவின் ஆரம்பம் என அவர் குறிப்பிட்டுள்ளது அப்பட்டமான பொய் என விஷயமறிந்தவர்கள் கொதித்துப் போயுள்ளனர். என்ன செய்வது, அவர் குறிப்பிடும் காலத்தில் தவழ்ந்தவர்களாகவும், நடை பழகியவர்களாகவும் இருந்தவர்கள் தானே அவரது இன்றய சீடர்கள். அவர்களுக்கு வரலாறு தெரியாததனால் தான், இப்பேட்டியை போஸ்டர் அடித்து எச்சில் தடவி ஒட்டிக் கொண்டுள்ளனர் போலும்.

தவ்ஹீத் என்ற வார்த்தையை வைத்து கட்சிக்கு விளம்பரம் தேடியது போதாதென்று மலிவு விளம்பரமாக (Cheap Popularity) தானே காசு கொடுத்து பத்திரிக்கை செய்தியாக விளம்பரத்தை கொடுத்து ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைத்திட, இந்த கிரிமினல், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்து விளக்கியது தான் காரணம் என்று ஒரு கேள்விக்கு பதிலாகவும், குலுங்கிய கும்பமேளா என்று முன்னுரையிலும், சிறை நிரப்பு போராட்ட அறிவிப்பு என்றும் இஷ்டத்திற்கு அவிழ்த்து விட்டுள்ளார்.

கும்பமேளா பற்றி பலமுறை பலரும் அதிலுள்ள அபத்தங்களை பட்டியலிட்டு உள்ளனர். வயல்வரப்பின் மீது ஒருவர் இருவராக நடந்து செல்லும் படத்தைக் காட்டி, அந்த ஏரியாவின் பரப்பளவில் பெருக்கி அப்படியாக பல இலட்சம் பேர் கூடியதாக புருடா விட்ட பொழுதே, உண்மையிலேயே பல இலட்சம் பேர் கூடும் ஹஜ்ஜின் செய்திகளை சுட்டிக்காட்டி சவுதியிலிருந்து ஒரு சகோதரர் கும்பமேளா ஒரு பொய், செட்அப் என விளக்கி இருந்தார்.

மார்க்க விஷயத்திலிருந்தே உதாரணம் காட்டிய போதும், அதனை ஒப்புக்கொள்ளாமல் இருந்தவர்களை இருப்பவர்களை எங்ஙனம் முஸ்லிம்களாக இருக்க முடியும்.

அதுமாத்திரமல்ல, கோயபல்ஸின் பிரதான சீடர்களும், பிரச்சாரகர்களும் தாங்கள் தான் என இப்பேட்டி மூலம் மீண்டும் பறைசாட்டியுள்ளனர்.

அதாவது, கோயபல்ஸ் தத்துவமே, ஒரு பொய்யைச் சொல்வது, மீண்டும் மீண்டும் சொல்வது, அது பொய் என்று பலரால் நிரூபிக்கப்படும் பொழுது மவுனம் காப்பது, சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பொய்யை கட்டவிழ்த்து விடுவது.

இதைத்தான் கும்பமேளா விஷயத்தில் இவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இப்பேட்டியில் கனிமொழி எம்.பி அவர்கள், தங்களை அழைத்து இடஒதுக்கீடு குறித்துப் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

மறுமையைப் பற்றி அஞ்சாமல் பொய் பேசுவதில் பெரும் பேர் பெற்றுவிட்ட இந்த கிரிமினல் பிஜே, கனிமொழியை சந்தித்து தங்களது கோரிக்கையை பற்றி எடுத்துச் சொல்லியதாக முன்பு தனது (களவாடிய) பத்திரிக்கையில் குறிப்பிட்டவர், இப்பேட்டியில் கனிமொழி தம்மை அழைத்துப் பேசியதாக கதையளந்துள்ளார்.

சிலருக்கு இரண்டுக்குமுள்ள வித்தியாசம் தெரியாததால், இவரைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் தலையாட்டி பொம்மைகளாக, மூளை கழுவி விடப்பட்ட முட்டாள் சீடர்களாக இருக்கின்றனர்.

கனிமொழியை இவர் சென்று சந்திப்பதாக இருந்தால், இவர் அவரிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்க வேண்டும். அதே சமயம், கனிமொழி இவரை சந்திப்பதாக இருந்தால், அதற்கான அழைப்பு அனுப்பட்டிருக்க வேண்டும். இப்பேட்டியில் தங்களை கனிமொழி அழைத்துப் பேசியதாக – தங்களை மேன்மைப்படுத்திக் காட்டுவதற்காக – புளுகியுள்ளார். இது உண்மையானால், கனிமொழியின் அழைப்பை இவரால் பகிரங்கப்படுத்த, பிரசுரிக்க முடியுமா?

மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்கான ஜீவாதார பிரச்சனையான, இடஒதுக்கீட்டையே ஒரே ஒரு சந்திப்பின் மூலம் சாத்தியமடையச் செய்யும் மந்திரவாதியான இந்த பிஜே, ஏன் துளசியேந்திரபுரம் என்ற சிறு கிராமத்தில் ஏற்பட்ட ஒரு நூலக எதிர்ப்புக்காக ஆர்ப்பாட்டம் அறிவித்தார் - என அறிவுள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இப்படியான அறிவானவர்கள் குறைவு என்பதால், ததஜ விசிறிகள் இந்த பேட்டி கண்டு விசிலடித்துத் திரிகின்றனர். அதனால் தான் ஒரு பேட்டியை போஸ்டர் அடித்து ஒட்டிக் கொண்டு அதனையும் வெட்கமில்லாமல் தனது சைட்டில் வெளியிட்டுள்ளார்கள் - இப்பொழுது சொல்லுங்கள் இவர்கள் விளம்பரபிரியர்களா இல்லையா?

அதைப் போலவே, தினமணியில் செய்திகளுக்கு வறட்சி ஏற்பட்டிராத நிலையில், ஒருவருடைய போட்டாவை பக்கத்தை நிரப்புவதற்காக சிறிதும் பெரிதுமாக இட்டிருப்பார்கள் என நம்ப இயலவில்லை. இதன் காரணத்தால் கூட இது ஒரு விளம்பரம் தான், பேட்டியில்லை என்று வாதிடுபவர்களும் உண்டு. விளம்பரம் விரும்பாதவர்களின் ஸ்டைல் இதுதான் என சொல்பவர்களும் உண்டு.

அரசியலில் நுழைவதற்கு அச்சாரமாகத்தான், தற்சமயம் அரசியல் அரங்கத்தில் நுழைந்துள்ளார், அதனால் தான் முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என தனது தொப்பியையும் கழட்டி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

ஆக மொத்தம் இட ஒதுக்கிட்டிற்காக எந்த ஒன்றையும் செய்யாமல், அது கிடைத்ததற்கு தான் தான் காரணம் என பேட்டி அளிப்பதிலிருந்து இவர்களின் சிறுமைத்தனத்தை சமுதாயம் இப்பேட்டியின் மூலம் சரிவரப் புரிந்து கொண்டது.

காலம் கடந்த பின்பாவது மூளை கழுவிவிடப்பட்ட முட்டாள் ததஜவினரும் புரிந்து கொள்வார்கள் என நம்புவோம்.

வஸ்ஸலாம்
இப்னு ஹஸன்

Labels: , , , , , , , , , ,

Monday, October 22, 2007

தனி இடஒதுக்கீடு சட்டம் சட்டசபையில் நிறைவேறியது

சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு சட்டம்
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது

கலைஞர்

சட்டமன்ற வரலாற்றில் இது ஒரு பொன்னாள்; சமூகநீதி வரலாற்றில் புரட்சிகரமான நாள், முதல்வர் கலைஞர் உருக்கம்.

தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் (22.10.2007) தாக்கல் செய்தார்.

இச்சட்ட முன் வடிவை ஆதரித்து பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) ஜி.கே. மணி (பாட்டாளி மக்கள் கட்சி) பால பாரதி (இ.கம்யூனிஸ்ட்) ராமசாமி (வ.கம்யூனிஸ்டு) செல்வப் பெருந்தகை (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சட்டமசோதாவை முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இம்மசோதா குரல்வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சட்ட மசோதாவை வரவேற்று பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இந்த மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த நாள் சமூக நீதிக்கான போராட்டத்தில் மற்றும் சட்டமன்ற வரலாற்றில் ஒரு பொன்னாள். சமூகநீதி வரலாற்றில் ஒரு புரட்சிகரமான நாள். 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி வரலாற்றில் இதற்கான விதை ஊன்றப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பல்வேறு தலைவர்களால் சமூகநீதிக்கான போராட்டம் முன் எடுத்து வரப்பட்டது. இதற்காக எத்தனை தடங்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இப்போராட்டம் முற்று பெறவில்லை. தொடர்ந்து நடைபெறும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டத்தை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Sunday, October 21, 2007

நெல்லையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி:
காவல் துறையினர் பொய் வழக்கு போடுவதாகக் கூறி தமுமுகவினர் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசியில் நடைபெற்ற தொடர் கொலை சம்பவம் தொடர்பாக அப்பாவிகள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகக் கூறி, அதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்தது. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமுமுக அறிவித்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை அனுமதி அளித்தது.

இந் நிலையில் நெல்லை டவுன் வாகையடி முனையில் தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரிபாய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தென்காசி, பேட்டை, மேலப்பாளையம் ஆகியப் பகுதிகளில் இருந்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தென்காசி டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிந்த பின் அதே இடத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.

அதில் பேசிய வக்பு வாரியத் தலைவரும் தமுமுக பொதுச் செயலாளருமான ஹைதர் அலி, மரியாதைக்குரிய முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்கள் இஸ்லாமிய தாயிடம் தான் பால் குடித்து வளர்ந்தார். ஒரு தாய்ப் பிள்ளையாக இருந்த இரு சமுதாயங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

கடந்த 2000த்தில் பாளை கிரசன்ட் நகர் பள்ளிவாசலில் நடந்த கொலை வழக்கில் கொலையுண்டவரின் மகன் மீதே வழக்கு போட்டனர். அதே போல் தென்காசியிலும் அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். அப்போது பதவியில் இருந்த உயர் போலீஸ் அதிகாரியே இப்போதும் பதவியில் இருக்கிறார்.

மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் தடியடிக்கும், குண்டடிக்கும் பயப்பட மாட்டோம். சமூகத்தில் அமைதியை ஏற்படுத்தாத காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாவிட்டால் எனது தலைமையில் தென்காசியில் போராட்டம் நடக்கும். இதற்காக நான் வக்பு வாரிய பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன். எங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நன்றி: தேட்ஸ்தமிழ் டாட் காம்

Saturday, October 20, 2007

முத்துப்பேட்டை விவகாரம் - தமுமுக ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை வன்முறைச் சம்பவம் காவல் துறையைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்


திருவாரூர், அக். 20: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வன்முறைச் சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆசாத் நகர் பள்ளிவாசலில் காவல் துறையினர் காலணியுடன் நுழைந்ததைக் கண்டித்து தமுமுக சார்பில் திருவாரூர் அஞ்சல் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கடந்த 17-ஆம் தேதி முத்துப்பேட்டையில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், முத்துப்பேட்டையில் மதக்கலவரங்கள் ஏற்படாத வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


அமைப்பின் மாவட்டச் செயலர் எம்.முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.


மாவட்டத் தலைவர் கே.எச்.நூர்தீன் முன்னிலை வகித்தார்.


மாநிலச் செயலர் எஸ்.தமிமுன் அன்சாரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.


நாகை (தெற்கு) மாவட்டத் தலைவர் ஜபருல்லா, நாகை (வடக்கு) மாவட்டத் தலைவர் ஆரிப், தஞ்சை மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான், காரைக்கால் மாவட்டத் தலைவர் லியாகத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நன்றி: தினமணி