Sunday, July 30, 2006

பொதக்குடி: உணர்வுக்கு மக்கள் உரிமை கண்டனம்

பொதக்குடி: நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை!

கூலக்கமால் குடும்பத்தினர் குறித்து பொதுமக்கள் சிலரிடம் விசாரித்தோம்... நம்மிடம் பேசிய சிலர் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என தெரிவித்து விட்டு, ''அந்தக் குடும்பத்தினர் ஊர் மக்களிடம் அனுசரித்துப் போக மாட்டார்கள். தாங்கள்தான் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள் என்று திமிருடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். கடந்த ரமலான் நோன்பின் போது, நோன்புக் கஞ்சி சட்டியிலேயே மண்ணை அள்ளி வீசினார்கள். மொத்தத்தில் அந்தக் குடும்பம்னாலே யாருக்கும் அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இல்லை. (உணர்வு 14:20, 2006)

மேற்கண்ட செய்தியை வெளியிட்டு விட்டு, இத்தகைய தவறான மக்கள் விரோதிகளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு, தமுமுகவிடமிருந்து களவாடிய பத்திரிகையில் ஆதரவு தெரிவித்திருக்கிறது ததஜ தலைமை.

தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பிறகு கொஞ்ச நாள் மவுனமாகக் கிடந்தவர்கள், தேவையில்லாமல் பொதக்குடி விவகாரத்தில் மூக்கை நுழைத்து அநியாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து தங்கள் கோணல் புத்தியைக் காட்டியிருக்கிறார்கள்.

''பொதக்குடியில் தமுமுகவினரை தாக்கிய குண்டர்கள்'' என்ற தலைப்பில் 'மக்கள் உரிமை'யில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை மறுத்தும் திரித்தும் தேவையில்லாமல் தமுமுகவினரை சீண்டியுள்ளனர் களவாடிய பத்திரிகையில்!

இதைப் படித்த பொதக்குடி மக்கள் ததஜ தலைமை இவ்வளவு தரங்கெட்டதா? எனக் கொதித்தெழுந்துள்ளனர்.

இதனிடையே நேரிடையாக நமது செய்தியாளரை அனுப்பி பொதக்குடி மக்களை சந்தித்தோம்.

இவர்களா யோக்கியமானவர்கள்?

தமுமுகவினர் கொடியேற்றும் போது 'நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்' என முழங்கியுள்ளனர். அப்போது கமாலுதீன் குடும்பத்தினர் கைலியை தூக்கிக் காண்பித்துள்ளனர். அங்கு நின்றிருந்த சப்இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மாவட்ட தமுமுக தலைவர் தாஜுதீன் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, கெட்ட வார்த்தைகளால் கமாலுதீன் குடும்பத்தினர் திட்டியுள்ளனர். அப்போதும் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று தமுமுகவினர் அமைதியாக இருந்துள்ளனர். ஏதாவது செய்ய வேண்டும் என்றே திரிந்தவர்கள், தமுமுகவினரின் ஆட்டோவைத் தாக்கியுள்ளனர். அதில் காயம் அடைந்த பசீர் என்பவரை உளவுத்துறையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர்தான் ஆட்டோவில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி உள்ளார்.

இப்படியாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் காவல்துறை, உளவுத்துறையினர் முன்பே நடந்திருக்க, இப்படியான சம்பவங்களே நடக்கவில்லை என பொய்ச் செய்தியை களவாடிய பத்திரிகையில் பிரசுரித்திருப்பது அவ்வூர் மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

ஜமாஅத் என்ன சொல்கிறது?

இச்சம்பவம் பற்றி பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் சங்கத்தின் தலைவர் ஏ.கே. அன்வர்தீன், செயலாளர் பி.எம். கமாலுதீன், பி.எம். அமானுல்லா ஆகியோரிடம் கேட்டோம்.

உணர்வில் வந்த செய்தியைக் கண்டு அதிர்ந்து போனோம். கமாலுதீன் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடையை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பல வருடங்களாக வாடகை பாக்கி வைத்திருக்கிறார். அடுத்து ஜமாஅத்திற்கு எதிராக நடந்து கொண்டு பலமுறை அபராதம் கட்டியுள்ளார்.

பல வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டவர் என்ற பெருமைக்கு உரியவர்.

இலவச சட்ட முகாம் நடத்த வந்த பொதுநல வழக்கறிஞர்களை அவமானப்படுத்தி அதன் அமைப்பாளரைத் தாக்கியவர்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் பெரிய பள்ளி செயலாளர் ஏ.எச். நூர்முகம்மது என்பவரைத் தாக்கி 5,000 ரூபாயை அபராதம் கட்டியவர்.

கூத்தாநல்லூர் அலி சுல்தான் என்ற டாக்டரை அடித்துத் துன்புறுத்திய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

பொதக்குடி ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாயை (இரண்டு) தான் முன்னாள் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னமும் மற்றவர்கள் பயன்படுத்த முடியாமல் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார். இதுபற்றி பல உயர் அதிகாரிகளுக்கு மனுச் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தால் துஷ்பிரயோகம் செய்கிறார்.

மற்றபடி செல்வாக்கு மிக்கவர் என்றும், அந்தஸ்து உடையவர் என்றும் குறிப்பிட் டுள்ளார்கள். அப்படி எதுவும் இங்கு இல்லை. மேற்படி காரியத்தை செய்பவர்கள் இவர்களுடைய அமைப்புக்கு வேண்டுமானால் நல்லவராகவும் வல்லவராகவும் தெரியலாம்.

கமாலுதீன் சொத்து?

எஸ்.டி. நஜ்முதீன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கூறுகையில், தமுமுகவினர் வைத்தி ருக்கும் கொடிமரம் இருக்கும் இடம் பொதுச் சொத்தாகும். கமாலுதீனுக்கு சொந்த மானது அல்ல. இருந்தும் நேரில் ஆய்வு என்று சொல்லி மக்களை திசை திருப்புவது தமுமுகவை அழிப்பதற்கான செயல்பாடு போன்று தெரிகின்றது.

பொதக்குடி தவ்ஹீத் ஜமாஅத் பொருளாளர் எஸ்.ஏ. ஹாஜா மைதீன் கூறுகையில், இங்குள்ள கொடிமரம் பி.ஜே. முன்பு தமுமுக அமைப்பாளராக இருந்தபோது பாக்கரால் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கமாலுதீன் மகன் ஆட்டோவை மறைத்து படுத்துக் கொண்டும் கமால் என்பவர் ஆட்டோவில் உள்ளவரைத் தாக்கினார். இதில் காயம் அடைந்த பசீர் என்பவரை சி.ஐ.டி. பாஸ்கர் என்பவர்தான் உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுதான் நடந்தது. இதுதான் உண்மை என்றார்.

உணர்வு செய்தி தவறு

பஷீர் என்பவர் விசா மோசடி செய்தவர் என்றும், அவர் மீது வழக்குகள் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சொல்லப்படும் நிலையில், தற்போது ததஜவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கே.எம்.சாதிக் என்பவரை இதுவிஷயமாக சந்தித்தோம். (இவர் 2003லில் தமுமுகவிலிருந்து விலக்கப்பட்டவர்.) அவர் கூறுகையில்,

பஷீர் மீது எந்த நடவடிக்கையும் நாங்கள் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, அப்பத்திரிகைக்கு நான் பேட்டி அளித்தால் முன்னுக்குப் பின்னாக ஏதும் போட்டு விடுவார்கள் என்று எண்ணி, என்னுடைய கருத்தை எழுத்து வடிவில் கொடுத்தேன். இருப்பினும் தமுமுக கிளைச் செயலாளர் பஷீர் என்பவர் மீது நடவடிக்கை எடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளதாக வந்த செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். இச்செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என்றார் சாதிக்.

உண்மைக்குப் புறம்பானது

இதுபற்றி ததஜ மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் உள்ளூர் வாசியுமான ஏ. முகம்மது சலீம் என்பவரை சந்தித்து கேட்டதற்கு ஒரு கேவலமான குடும்பத்திற்கு ஆதரவாக, நீதிக்கு எதிராக உணர்விலிருந்து வந்து செய்திகள் சேகரிப்பதைக் கேள்விப்பட்டு உடனடியாக தடுத்து நிறுத்த முயன்றேன். ஆனால் ததஜவில் சிலர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இதுபற்றி உடனடியாக மாவட்டச் செயலாளர் பகுருதீனை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு அவர், 'தலைமை யிலிருந்து வந்து செய்தி சேகரிப்பதாகவும், நான் எவ்வளவு சொல்லியும் கேட்க வில்லை' என்றும் சொன்னார். அந்த செய்தியில் உள்ள விஷயங்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளாகும் என்றார்.

எஸ்.ஐ. நடராஜனை சந்தித்தோம்... அவர்,

''தமுமுகவினர் பொய்ப் புகார் அளித்திருக்கின்றார்கள் என்றும், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் அல்லாஹ்விடம் சத்தியம் செய்யட்டும் என்றும் நான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது சுத்தப் பொய். இதன்மூலம் என் மேல் தமுமுக வின் கோபத்தை உண்டாக்குவது போல் தெரிகிறது. இதுகுறித்து தமுமுகவினர் புகார் கொடுத்திருக்கின்றார்கள். இதை ஆராய்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மேலும், ''தமுமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது கூட 'நடவடிக்கை எடுக்கின்றேன்' என்று சொன்னதும் தாஜுதீன் அவர்கள் அவரது தரப்பை உடனடியாக அழைத்துச் சென்றார்கள்'' என்றார்.

ஓ.எஸ். இப்ராஹிம், திருவாரூரிலிருந்து

http://www.tmmkonline.org/tml/others/109757.htm

Wednesday, July 26, 2006

ததஜவினரின் தவ்ஹீது பூச்சாண்டி

தமுமுகவினரைப் பற்றி விமர்சனம் செய்யாமல் தமுமுகவிலிருந்து களவாடப்பட்ட 'உணர்வு' வார இதழ் வெளிவராது என்பது ததஜவினரின் ஒற்றைக் கொள்கையாகும்.

'தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது' என்ற பொய்யை கூறிவிட்டு தமுமுகவிலிருந்து தாமே கழன்று கொண்டார், ஒட்டு மொத்தமாக தமுமுகவை விழுங்குவதற்கு அவர் தீட்டிய சதித்திட்டம் அம்பலமானவுடன், 'சதித்திட்டம் தீட்டி தமுமுகவிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்' என்ற மற்றொரு பொய்யையும் சொல்லி வைத்தார் பிஜே.

'தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது' என்ற பொய், தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களின் மத்தியில் நன்றாகவே வேலை செய்தது. இவரின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளாத பலர் ஏமாந்து போனார்கள்.

தவ்ஹீதை வைத்து லாபகரமாக வியாபாரம் செய்ய முடியும் என்பதை நன்றாக புரிந்து கொண்ட பிஜே, மூன் பப்ளிகேஷன், மூன் மீடியா என்று அந்த வியாபாரத்தை தனதாக்கிக் கொண்டார்.

சத்தியப் பிரச்சாரம் அல்லாஹ்வுக்காக செய்யப்பட வேண்டிய ஓர் இபாதத் என்பதை மக்களுக்கு சொல்லி விட்டு, பிரச்சாரத்திற்காக அன்டர்கிரவுண்டில் பணம் பெற்றுக் கொண்ட பார்ட்டி தான் இந்த பிஜே.

ஸஹர் நேர சிறப்பு டிவி நிகழ்ச்சியில் பிரச்சாரம் செய்வதற்காக அந்த இயக்கத்தின் பொருளாளரை மடக்கி அந்த நிகழ்ச்சிக்குரிய சம்பளத்தை பெற்றுக் கொண்டார். இதை கணக்கு அளவில் மட்டுமே வைத்துக் கொண்டார்களே தவிர, மற்றவர்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை.

அதற்கு அடுத்த வருடம் ஸஹர் நேர சிறப்பு டிவி நிகழ்ச்சி நடத்துவதற்காக பிஜேயை அணுகிய போது நிகழ்ச்சியில் பிரச்சாரம் செய்வதற்கு மறுத்து விட்டார். விபரம் கேட்ட போது தான் இந்த சம்பள விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. பார்த்தீர்களா? இந்த தவ்ஹீது வியாபாரிகளின் லட்சணத்தை.

இவர்கள் தான் 'தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது' என்று கூறிக் கொண்டு அதை விட்டு வெளியே வந்தவர்கள், தெரிந்து கொள்ளுங்கள் இவர்களை.

தவ்ஹீதில் ஸலபுகளின் கூற்று ஓர் அங்கம் என்பதை இவர்கள் புறக்கணித்து விட்டு தனது சொந்தக் கருத்தை புகுத்துபவர்கள் தான் தவ்ஹீதை முழுமையாக பின்பற்றக் கூடியவர்களாம். கேட்டால் தேவையற்ற ஒரு கேள்வியையும் கேட்டு விட்டு தேவையற்ற ஒரு பதிலையும் தந்து விட்டு ஓடி விடுவார்கள்.

உண்மையான தவ்ஹீதுக்கு உதாரண புருஷர் தான் இந்த பிஜே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த நினைவில் மண்ணை அள்ளி தூவி விட்டவரும் இந்த பிஜே தான். அன்று கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டில் நடந்த ஒரு சந்திப்பின் போது வரவேற்பறையில் காத்திருந்த பிஜே கலைஞரைக் கண்டதும் இருகரம் கூப்பி எழுந்து நின்று வணக்கம் சொன்னார். கலைஞரை சந்திக்கச் சென்றவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? கடந்த 21.04.2006 அன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான நேருக்கு நேர் நிகழ்ச்சியின் முடிவில் இருகரம் கூப்பி தெளிவாக வணக்கம் என்று கூறி நிகழ்ச்சியை முடித்தவர் வேறு யாரும் அல்ல வடிகட்டிய தவ்ஹீதுவாதி என தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக் கொண்ட சாத்சாத் பிஜே தான். பின்னர் தான் அந்தக் கண்டராவி எடிட் செய்யப்பட்டது.

இவர் தான் தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது என்று புலம்புகிறார்.

'ஏகத்துவம்' ஏப்ரல் 2004 ல் 'களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுவார்கள்' என்று எழுதினார்கள். இந்த ஏகத்துவத்தை இழக்கும் நிலைக்கு ஆளாவோம் என்று ததஜவினர் அப்போது நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

நாங்கள் கொடி தூக்கும் கூட்டம் அல்ல என்று தமுமுகவுக்கு எதிராக கோஷம் போடுவதாக நினைத்துக் கொண்டு காட்டுக் கத்து கத்தியவர்கள், பரிணாம வளர்ச்சி பெற்று ததஜவுக்கு என்று திருட்டுக் கொடியை (வேறு ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் கொடி) நிர்ணயித்துக் கொண்டார்கள்.

அந்த கொடியை கையில் பிடித்துக் கொண்டே ததஜ என்ற தவ்ஹீது ஜமாத், உச்சி முதல் உள்ளங்கால் வரை சங்பரிவார விஷ இரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்காக களப்பணியாற்றினார்கள். இப்பொழுது தெரிகிறதா? தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது அல்ல என்று, ததஜ என்று வெறுமனே பெயர் வைத்துக் கொண்டு சங்பரிவாரங்களின் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட ததஜ என்ற அரசியல் கட்சி தவ்ஹீதுக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது. தவ்ஹீதை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

தவ்ஹீது பற்றிய முழு அறிவும் இல்லாத அரை வேக்காட்டு பிஜே பல விஷயங்களை நாளுக்கு நாள் கற்றுக் கொண்டு வருகிறாரே தவிர, அது பற்றிய முழுமையான அறிவு இல்லை அவருக்கு. அதனால் தான் அவரது மார்க்கத் தீர்ப்புகளிலே ஏராளமான முரண்பாடுகளை நம்மால் காண முடிகிறது. தயவு செய்து அவர் இன்னும் அவரது இஸ்லாமிய அறிவு ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நமது பரிந்துரையாகும்.

அமானிதம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது தவ்ஹீதின் ஒரு அங்கம். பிறருக்காக வழங்கப்பட்ட அமானிதம் தன்னிடம் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் வாதம் செய்து கொண்டிருப்பது நல்லதா? இதுதான் தவ்ஹீதா? இந்த லட்சணத்தில் தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது என்ற கூப்பாடு வேறு?

இந்த வரிசையில் கடைசியாக வந்த விமர்சனம் தான் பிஜேயிடம் அமானிதமாக ஒப்படைக்ப்பட்ட தமுமுகவுக்கு சொந்தமான 'உணர்வு' வார இதழ் 10:46ல் 'பதில்கள்' பகுதியில் இடம் பெற்ற ஒரு கேள்வி:

'? சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை என்ற பெயரில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி 'தவ்ஹீது'க்கு எதிரான - 'ஷிர்க்'கிற்கு ஆதரவான பிரச்சாரத்தை செய்து வருகிறார். இந்நிலையில், 'இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை' என்ற பெயரில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்து வருகிறோம் என்று கூறும் தமுமுகவினர், லெப்பைக்குடிகாட்டில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ததோடு, தங்களின் தொண்டர் அணி சீருடையுடன் அவரது கூட்டத்திற்கான வேலைகளை செய்ததை ஒரு 'தமிழ்' தொலைக்காட்சியில் காண முடிந்தது.
இது பற்றி உங்களின் கருத்து என்ன? எம்.ஏ.சித்திக், மேலப்பாளையம்.
!இது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் அல்ல. இதற்கு பெயர் தான் அவர்கள் கூறும் 'பன்முகம்'.
நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம்! கேள்வியை தாமே எழுதிக் கொண்டு, அதற்கு பதிலையும் தயாரித்து விற்பனை செய்பவர் தான் இந்த பத்திரிக்கை வியாபாரி.

இதில் ஒரு குள்ளநரித் தந்திரத்தை இந்த பிஜே கையாண்டுள்ளார் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. அதாவது பதிலை பொய்யாக எழுதினால் அதற்கு மறுப்பு எழுதப்படும். தனது இமேஜ் இன்னும் பாதிக்கப்படும், உண்மை அம்பலத்திற்கு வந்து விடும் என்று நினைத்த பிஜே பொய்யான கேள்வியை பிறர் மீது திணித்து விட்டு தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தை கையாண்டுள்ளார்.

1) 'இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை' அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வில்லை என்பதை ஃபித்னா செய்வதையே நோக்கமாக கொண்டுள்ள பிஜேக்கு சொல்லிக் கொள்கிறோம்.

2) தமுமுகவினரும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய இல்லை.

3) அந்தக் கூட்டத்தில் ஒரு சிலர் தமுமுக உடையில் காணப்பட்டார்கள் என்பது உண்மையே. (அது அறியாமையின் காரணமாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண ஆடையாகவே (கேசுவலாகவே) அந்த உடையை அணியக் கூடியவர்களாக அவர்கள் இருந்தாலும் சரி,) அதற்காக அந்த நிகழ்ச்சியை தமுமுக தான் ஏற்பாடு செய்தார்கள் என்று சொல்வது மடத்தனம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோபித்துக் கொள்வார்கள்.

ஒரு பழமொழி சொல்வார்கள் கிராமங்களிலே 'நொண்டிக் கழுதைக்கு சறுக்கியது தான் சாக்கு' என்று. இதற்கு என்ன பொருள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

தமுமுக உடையில் அங்கே சிலர் சென்றது கண்டிக்கத்தக்கது. நாமும் கண்டிக்கிறோம். தலைமையும் அதை கண்டித்ததாக அறிகிறோம்.

அசத்தியத்தில் இருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்றோர்கள் பாய்ண்ட் டூ பாய்ண்ட் விவாதம் செய்யக் கூடிய அளவுக்கு துணிச்சல் பெற்றதும், ததஜவை விட மிகச் சிறப்பாக விவாத முறையை அமைத்துக் கொண்டதும் பிஜேயின் போலித்தனமான, பொய்யான நடவடிக்கைகள் தான் காரணமாகும் என்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.

தமுமுக இயக்கத்தவர்கள் பிஜேயின் முகத்தில் கரியைப் பூசிய விஷயங்களுள் ஒன்று தான் 'பன்முகம்'. இதற்கு விளக்கம் சொல்ல வருகிறாராம் அந்த பேரறிஞர்.

'பன்முகம் என்பது தவ்ஹீதுக்கு எதிரானது, ஒருமுகம் தான் தவ்ஹீதுக்கு ஆதரவானது' என்று பொருள் சொல்ல வருகிறார்.

'தக்லீது கூடாது' - (தனிமனித வழிபாடு) என்று மேடைகளிலே முழங்கிய பிஜே, தன்னை ஒரு கூட்டம் வணங்க வேண்டும் என்பதிலே அதிக கவனம் எடுத்துக் கொண்டார்.

நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சிய பிஜேக்கு சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டால் பிஜேயின் ரசிகர் கூட்டம் சிலை வைக்கக்கூட தயங்க மாட்டார்கள் அந்த அளவுக்கு ரசனையில் ஊறித் திளைத்து வருகிறார்கள்.

இந்த ஒருமுகம் மட்டும் இல்லையென்றால் ததஜ எனும் பிஜே ரசிகர் மன்றம் அத்தனையும் கலைக்கப்பட்டாலும் கலைக்கப்படலாம், அல்லது வேறு ஒரு ரசிகர் மன்றத்தில் இணைக்கப்படலாம்.

ஆனால் தமுமுக என்னும் மக்கள் பேரியக்கத்தில் இப்படிப்பட்ட முஸீபத்துக்கள் ஏதும் இல்லை. பிஜேயின் வார்த்தைகளிலேயே சொன்னால்,

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.

ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.

மறுமைக்கான பணியைக் கூட சில பேர் இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விட்ட நிலையில் இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கிக் கொண்டதை நான் பார்க்கிறேன்.....

எந்த இயக்கமும் தனி மனிதனைச் சார்ந்து இருக்கக் கூடாது. தனி மனிதக் கவர்ச்சியில் இயங்கும் இயக்கங்கள் காலப் போக்கில் தடம் புரண்டு விடும் என்பதை நான் ஆரம்ப காலம் முதலே
வலியுறுத்தி வந்துள்ளேன். தமுமுக தனிமனிதரைச் சார்ந்த இயக்கமல்ல. அது ஒரு மகத்தான மக்கள் இயக்கம்.
இது பிஜே தமுமுகவுக்கு அளித்த நற்சான்று.

இப்போது சொல்லுங்கள் 'பன்முகம்' என்பதன் பொருள் என்னவென்பதை?

அன்புடன்,
இப்னு ஃபாத்திமா 26.07.2006

Saturday, July 22, 2006

டான் டிவியில் ததஜவின் பொய்யான அறிவிப்பு

பொய்யின் மீது தளம் அமைக்கப்பட்ட ததஜ எனும் அரசியல் கட்சி டான் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. வளைகுடா ஐரோப்பாவில் வசிக்கும் மக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நடுவே ததஜவின் நிர்வாகிகளுள் ஒருவரான நாகூர் ஏ.எஸ்.அலாவுதீன் தோன்றி இராப்பிச்சை எடுத்து வருகிறார்.

இதுதான்இஸ்லாம்.காம் என்ற இணைய தளத்திலிருந்து அப்பட்டமாக திருடப்பட்ட டைட்டில் தான் 'இதுதான்இஸ்லாம்' என்பதாகும். திருட்டையே தொழிலாக கொண்டுள்ளவர்களுக்கு இதைத் திருடுவது அவர்களுக்கு அர்ப்ப விஷயமாகும்.

இதுதான்இஸ்லாம் என்ற நிகழ்ச்சி மிகவும் கஷ்டத்தில் நடத்தப்படுவதாகவும், நன்கொடைகள் வெகுவாக குறைந்து விட்டதாகவும், அதனால் மக்கள் நன்கொடைகள் மூலமாக, வாழ்த்தும் நெஞ்சங்கள், நிறுவன விளம்பரங்கள் தருவதன் மூலமாக இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறார். அதோடு சவூதிஅரேபியாவில் தொடர்பு கொள்ள வேண்டிய மூன்று நபர்களின் பெயர்களை வேறு அவர் அறிவிக்கிறார்.

நமது கேள்வி என்னவென்றால்,

விவாதம் செய்வது கூடுமா? கூடாதா? எப்படிப்பட்ட விவாதத்திற்கு அனுமதியுண்டு, எதற்கு அனுமதியில்லை என்பதெல்லாம் இருக்கட்டும்.

சுன்னத்வல் ஜமாத்தினர் என்று அழைக்கப்படுவோர் முதலில் உண்மையான மத்ஹபு கிதாபுகளை அடையாளம் கண்டு கொள்வது அவசியமாகும். மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக மத்ரஸாக்களில் பாடத்திட்டத்தில் வைத்திருப்பதெல்லாம் சரியானவை என்ற எண்ணத்தை கைவிட முன்வர வேண்டும். இமாம்களோடு தொடர்புடைய உண்மையான கிதாபுகளை அடையாளம் காண வேண்டும். இது நடந்தால் பிஜேயின் மத்ஹபுக்களுக்கு எதிரான ஆட்டம் அடங்கிப் போய்விடும்.

குர்ஆன் ஹதீஸ் போர்வையில் தனது சொந்தச் சரக்கை விலை கூவி விற்றுக் கொண்டிருக்கும் பிஜேயும் அவரது நிலைபாட்டிலிருந்து மாற வேண்டும். பிஜேயும் அவரது ஜமாத்தை தவறான வழிக்கே வழி நடத்துகிறார் என்பது தான் உண்மை.

இப்படிப்பட்டவர்கள் தான் களியக்காவிளையில் விவாதம் நடத்துகிறார்களாம். அதை டான் டிவியில் ஒளிபரப்பு செய்கிறார்களாம். இதற்காகத்தான் மக்கள் தங்கள் பொருளாதாரத்தை செலவு செய்து மறுமை வெற்றியைப் (?) பெற வேண்டுமாம்.

இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே உண்மையாகவே உண்மையை விளங்கிக் கொள்வதற்காக விவாதம் நடப்பதாக இருந்தால், மக்களிடம் யார் நன்றாக விவாதம் செய்தார்கள் என்று அங்கீகாரம் பெறுவதற்காக அதை டிவியில் ஒளிபரப்ப வேண்டுமா? அல்லது அதை ஒளிபரப்பியதன் பொருள் என்ன?

ஸஹாபாக்கள் கிரிமினல்கள், பதவி ஆசை பிடித்தவர்கள், கொலை வெறி பிடித்தவர்கள், ஸஹாபாக்களுக்கு உள்ளே சண்டையிட்டுக் கொண்டார்கள் என்று 'அந்த 72 கூட்டத்தினர்' என்ற தலைப்பிட்டு பேசுவதற்கும் அதை டான் டிவியில் ஒளிபரப்பு செய்வதற்கும் மக்களே நீங்கள் உங்கள் நன்கொடைகளை வாரி வழங்கி நரகத்திற்கு செல்லுங்கள் என்று ஏ.எஸ். அலாவுதீன் அழைப்பு விடுக்கிறார்.

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் மிக முக்கியமான ஒன்றாகிய ஜகாத் எனும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையில் கைவைத்து, ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும், ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கத் தேவையில்லை என்ற கொள்கையை உலகில் முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்த பிஜேயின் ஜகாத் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் டான் டிவியில் ஒளிபரப்பு செய்வதற்காக மக்களே நீங்கள் உங்கள் பொருளாதாரத்தை நன்கொடைகளை அள்ளி அள்ளி கொடுங்கள் அதன் மூலம் நீங்கள் நரகத்திற்கு செல்லலாம் என்று ஏ.எஸ்.அலாவுதீன் கேட்கிறார்.

தனக்கென்று ஒரு மன்ஹஜ் இல்லாதவர்தான் இந்த பிஜே, புத்திக்கு ஒத்துவராத ஹதீஸ்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை, அவைகளை நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பிஜேயின் அது தொடர்பான சொற்பொழிவுகளை டான் டிவியில் ஒளிபரப்பு செய்வதற்காக நன்கொடைகளை அள்ளித் தந்து நீங்கள் உங்களை நரகத்திற்கு செல்வதற்கு தயார் செய்து கொள்ளுங்கள் என்று ஏ.எஸ்.அலாவுதீன் டான் டிவியில் கூறுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகமான விளம்பரங்கள் இடம் பெறக்கூடிய ஒரே நிகழ்ச்சி இந்த இதுதான்இஸ்லாம் நிகழ்ச்சி ஒன்று தான். இருந்தாலும் அதிகமான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்து கொண்டே விளம்பரங்கள் வெகுவாக குறைந்து விட்டன என்று ஏ.எஸ்.அலாவுதீன் பொய் சொல்கிறார் என்பது உங்களுக்கு விளங்குகிறதா?

அதற்கும் முன்பாக வரக்கூடிய அரை மணிநேர நிகழ்ச்சி தமுமுக நடத்தும் 'பிளாக் அன்ட் ஒயிட் கம்யூனிகேஷன்' நிகழ்ச்சியில் நான்கே விளம்பரங்கள் மட்டும் தான். அவர்களால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிகிறது. ஏராளமான விளம்பரங்கள் குவிந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற கூப்பாடு வேறு.

தமுமுக நடத்தும் நிகழ்ச்சியில் பாவம்! எந்த விதமான நன்கொடை கேட்டு விளம்பரம் ஏதும் இடம் பெறுவதில்லை. ஆனால் எமது ஆலோசனை என்ன வென்றால், பிச்சை கேட்காத தமுமுகவிற்கு தான் உங்கள் நன்கொடைகள் சென்று சேர வேண்டும்.

பொருளாதாரத்தை திரட்டுவதையே முழுமுதற் குறிக்கோளாக கொண்டு இயங்குகின்ற ததஜ என்ற அரசியல் கட்சிக்கு நன்கொடைகளை அனுப்புவதை முதலில் நிறுத்துங்கள். வரும் ஆண்டில் ஃபித்ரா தொகையை அந்தக் கட்சிக்கு அனுப்புவதையும் நிறுத்துங்கள். அவர்கள் இந்த கடமையை ஒழுங்காக உங்களுக்காக நிறைவேற்றுவார்கள் என்ற உத்திரவாதம் இப்போது இல்லை.

தமுமுகவிற்கு அனுப்பும் உங்களது நன்கொடைகளை, கீழ்காணும் முகவரிக்கு அனுப்புங்கள்:

பிளாக் அன்ட ஒயிட் கம்யூனிகேஷன்ஸ்
7,வடமரைக்காயர் தெரு,
மண்ணடி,
சென்னை 600 001

தங்களன்புள்ள,

இப்னு ஃபாத்திமா 22.07.2006

Thursday, July 20, 2006

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற அரசியல் கட்சி

தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் என்பது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று தவ்ஹீதை நிலைநாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜமாத் இல்லை. சமூக அரசியல் பேரியக்கம் என்று அதற்கு தஃப்ஸீர் எழுதியிருப்பதை அதிகமானோர் கவனிப்பதில்லை. தவ்ஹீதுவாதிகள் எல்லோரும் அதில் தான் ஐக்கியம் ஆக வேண்டும், இல்லையேல் அவர்கள் தவ்ஹீதை விட்டு வெளியேறி விட்டவர்கள் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி வருகிறார்கள் அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

சமீபத்தில் வெளியான ததஜவின் ஊதுகுழல் 'ஏகத்துவம் ஜுலை 2006' ல் தலையங்கத்தில் ஒழுங்காக எழுதிக் கொண்டு வந்த ஆசிரியர் இடையில் ஒரு வாசகத்தை இடைச் செருகல் செய்கிறார். 'ஏகத்துவ வேடம் போட்ட நடிகர்களைத் தவிர்த்து, வேறு யாரும் இந்தக் கொள்கையை விட்டு வெளியேறவில்லை' என்பது தான் அந்த வாசகம்.

இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும், இந்த 'ஏகத்துவம்' என்ற மாத இதழ் கூட தமுமுக என்ற பேரியக்கத்தின் உணர்வு வார இதழை ததஜவினர் களவான்டது போன்று களவாடப்பட்ட ஒன்றாகும். 'அல்முபீன்' என்று ஒரு மாத இதழ் வந்து கொண்டிருந்தது இல்லையா? அது எங்கே சென்றது?

நயவஞ்சகத்தனமாக நாடகமாடி தன்வசப்படுத்திக் கொண்ட பிஜே, அதன் பெயரையும் மாற்றி, இல்லாத 'ஜமாஅத்துத் தவ்ஹீது' என்னும் பெயரால் தனதாக்கிக் கொண்டு அதன் பப்ளிஷர் தனது மகன் முஹம்மதின் பெயரைப் போட்டுக் கொண்டார் என்பது 'அல்முபீன்' திருடப்பட்ட வரலாறு.

தமிழகத்திலேயே குறிப்பாக முஸ்லிம்களிலேயே மீடியாவின் பலம், சக்தி என்னவென்பதை எல்லோரையும் விட மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டவர்தான் பிஜே என்பதை மறந்து விடாதீர்கள். அதை கையகப்படுத்திக் கொள்வதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிவார் என்பதும் உண்மை.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் சேராத எல்லோரையும் தவ்ஹீதுவாதிகள் இல்லை என்கிறார்கள். யாரையோ விமர்சனம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் ஏகத்துவவாதிகள் அல்ல என்று சொல்வதற்கு என்ன துணிச்சல் இவர்களுக்கு?

சரி ததஜ எனும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் (அரசியல் கட்சி)யில் இருப்பவர்களாவது தவ்ஹீதுவாதிகளா? அவர்களது கூற்றுப்படி, இல்லை என்பது தான் உண்மை.

திருடப்பட்ட 'ஏகத்துவம்' ஏப்ரல் 2004 ல் 'களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுவார்கள்' எழுதினார்கள்.

தேர்தலும் வந்தது ஒட்டுமொத்த ததஜவினர் அத்தனை பேரும், குறிப்பாக கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் கைகளிலும் ததஜவின் கொடியை கொடுத்து களப்பணி ஆற்ற அனுப்பினார்கள். ஈமான் பறிபோய் விட்டதா?

'நாங்கள் தனித்தன்மையோடு களப்பணியாற்றினோம்' என்று பொய்யான பேச்சு வேறு அந்த மனிதருக்கு.

பின்னர் எப்படி உங்களால், 'வேறு யாரும் இந்தக் கொள்கையை விட்டு வெளியேறவில்லை' என்று சொல்ல முடிந்தது.

இன்னும் சொல்லப் போனால், சங்பரிவார் கும்பலின் தலைவி செல்வி (?) ஜெயலலிதாவிற்கு ஆதரவு திரட்டுவதற்காக களப்பணியாற்றினார்கள். இப்போது சொல்லுங்கள் அவர்களது ஈமானின் நிலை எந்த அளவுக்கு இருந்திருக்கும். ஈமான் பறிபோய் விட்டதோடு அவர்களது நம்பிக்கை அதைவிடவும் தரம் தாழ்ந்து சென்று விட்டதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

தனது நிலை மிகவும் மோசமாகிப் போய்விட்டதை அறிந்து கொண்ட பிஜே, 'தேர்தல் நிலைபாடு தேர்தலோடு போய் விட்டது' என்று கூறி ததஜவை விட்டு விலகிக் கொண்டிருப்பவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக நாடகமாடி வருகிறார்.

அந்த வரிசையில் இருக்கும் 'ஏகத்துவம்' என்னும் மாத இதழ் சொல்வதையும் யாரும் நம்ப வேண்டாம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை விளங்கக் கூடிய ஆற்றலைத் தந்தருள்வானாக. ஆமீன்

இப்னு ஃபாத்திமா 20.07.2006

Sunday, July 16, 2006

பீஜேக்கு பிடித்த பித்து

'எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல' என்று பழமொழி சொல்வார்கள், அப்படிப்பட்ட வேலையை செய்யக் கூடியவர் தான் நமது சின்னத் திரை கதாநாயகர் பீஜே.

ததஜவின் கோல்மால்தனத்தை கண்டுகொள்ளாமல் நடிக்கத் தெரியாத ஒரு சகோதரரர் தான் வகித்த முக்கியப் பொறுப்பை முறையாக துறந்து விட்டு, ததஜவிலிருந்து வெளியேறிவிட்டார்.

அவரை எப்படியும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீஜே அலைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது சரியான சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. தவ்ஹீதை உயிர் மூச்சாக நினைக்கும் அந்த சகோதரரர் தாய் தந்தையர் இல்லாத ஓர் விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிக்கும் நோக்கில் தனது இரண்டாவது மனைவியாக ஆக்கிக் கொள்கிறார்.

இதில் முதல் மனைவியை தகுந்த முறையில் பராமரித்தும் வருகிறார். இதை தெரிந்து கொண்ட பீஜே தன்னை சந்திக்குமாறு அந்த முதல் மனைவிக்கு ஆள் அனுப்பி பல முறை வரச் சொல்லியிருக்கிறார். இவரைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட அவர், சந்திக்கச் செல்ல வில்லை. வேறொரு நபரிடம் இந்த பிரச்சனையை பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருக்கிறார்.

பாவம் அந்த குடும்பம் பீஜெயின் பழிவாங்கும் போக்கால் வீதிக்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இது போன்றே பீஜே பல கோல்மால் வேலைகளையும் இதற்கு முன்பும் செய்துள்ளார். அதில் முக்கியமாக, ஜாமிஆ புஷ்ரா பெண்கள் கல்லூரையை முறையாக சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வந்த ஜாக் நிர்வாகத்தை பலவந்தமாக அகற்றுவதற்கு பின்புலமாக இருந்தவர், எதிரணியினருக்கு தக்க ஆலோசனையும் பாதுகாப்பும் தந்தவர் என்பது இன்றுவரை மறக்க முடியாத அவரது துரோகமாகும்.

பீஜேயோடு இருப்பவர்கள், பீஜேயை விட்டு விலகும் தருணம் ஏற்பட்டால் ஏதாவது ஒரு வகையில் நஷ்டத்தை ஏற்படுத்த அல்லது பழிவாங்க முயற்சிகள் மேற்கொள்வார் என்பதை புரிந்து கொண்டு அவரையே வலம் வர வேண்டும். அப்படியில்லையேல் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கட்டும்.

இப்னு ஃபாத்திமா 17.07.2006

Tuesday, July 04, 2006

பீஜே வடிக்கும் முதலைக் கண்ணீர்

சிறைவாசிகள் சம்பந்தமாக எந்தவித அக்கறையும் இதுவரை காட்டாத பிஜேயும் அவரது சொந்தச் சொத்தான ததஜவும் தங்களுக்கு ஞானம் பிறந்து விட்டதைப் போன்றும் சிறைவாசிகள் விஷயத்தில் தமக்கு அக்கறை இருந்ததைப் போன்றும் ஆனால் சிறைவாசிகள் விரும்பாததால் எந்த நடவடிக்கையிலும் இறங்க வில்லை என்பதைப் போன்றும் நாடகமாடி மக்களை நம்ப வைக்க முயற்சித்து வருகிறார்கள்.

சிறைவாசிகள் விஷயத்தில் போலீஸ் தரப்பு அப்ரூவராக சிறைவாசிகளுக்கு எதிராக சாட்சி சொன்னார் பீஜெ என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றிருக்கும் போது, சிறைவாசிகள் எப்படி நம்பி இவர்களின் உதவியைப் பெறுவார்கள். எதையாவது போட்டுக் கொடுத்து வெளியே வரக்கூடியவர்களை வெளியே வரமுடியாத அளவிற்கு செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் இதற்குக் காரணமாகும். பிஜேயின் துரோகம் எப்படிப்பட்டது என்பதற்கு இது நல்ல சான்றாகும்.

பிஜேயும் ததஜவும் சிறைவாசிகள் விஷயத்தில் சம்பந்தப்பட வேண்டாம் என்று சிறைவாசிகள் சொல்லி விட்டார்களாம், அதனால் இனி இவ்விஷயத்தில் சம்பந்தப்பட மாட்டார்களாம்.

இப்படிச் சொல்லக்கூடியவர்கள் சிறைவாசிகள் விஷயத்தில் ஒரு கேள்வியையும் போட்டு அதற்கு பதில் சொல்கிறேன் பார் என்ற விதத்தில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது. முன்பு சொன்ன அதே முடிவிலேயே இருந்து விட வேண்டியது தானே. ஏன் முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்ள வேண்டும்.

சிறைவாசிகள் விடுதலை என்பது விளையாட்டுக் காரியம் அல்ல, அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை, தயவு செய்து கெடுத்து விட வேண்டாம்.

இந்த லட்சணத்தில் இப்படியும் எழுத எப்படித்தான் துணிச்சல் வருகிறதோ, அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

தமுமுகவிடமிருந்து களவாடப்பட்ட உணர்வு இதழ் 10:43 ல் 'பதில்கள்' பகுதியில் கீழ்காணும் செய்தி இடம் பெற்றுள்ளது.

? சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அது நீதிமன்ற விவகாரம் என்று தமிழக முதல்வர் கூறி தனது வாக்குறுதியை மீறிவிட்டார். இடஒதுக்கீடு வழங்குவதாக அவர் அளித்த வாக்குறுதியையும் அவர் மீறுவதற்கு முன்னோடியாக இதை எடுத்துக் கொள்ளலாமா? அபூஅனஸ், திருவண்ணாமலை.

! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்றோ, ஜாமீனில் விடுவோம் என்றோ திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போதும் திமுக தலைவர் இப்படி எந்த வாக்குறுதியும் அளிக்க வில்லை.

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நமது சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தான் சிறைவாசிகள் விடுதலை பற்றி எங்களிடம் திமுக உறுதிமொழி தந்துள்ளது என்று வாய்கிழிய பிரச்சாரம் செய்தனர்.

கருணாநிதி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அறிவித்த பின்பும், திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நம்
சமுதாயத்தினர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். கருணாநிதியிடம் உறுதிமொழி பெற்றிருந்தால் கருணாநிதி வாக்குறுதி மீறிவிட்டார் என்று அவர்கள் கொதித்துப் போயல்லவா அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.

எனவே திமுக தலைமையிடம் சிறைவாசிகள் விடுதலை
பற்றி உறுதிமொழி வாங்கியதாக பொய்ப்பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் அல்லது கருணாநிதி அளித்த உறுதிமொழியை மீறியதற்காக அவரைக் கண்டிக்க முடியாத அளவுக்கு வேறு
ஏதோ கைமாறியிருக்க வேண்டும். அது என்ன என்பது விரைவில் தெரியவரும்.

இது அந்த பதிலின் நமக்குத் தேவையான முக்கியப் பகுதியாகும்.

தமுமுகவைப் பற்றி விமர்சனம் செய்யாமல் இனி உணர்வு வெளிவராது என்கிற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். வழக்கம் போல இதிலும் தமுமுக பற்றிய விமர்சனம் இடம் பெற்றுள்ளது.

இப்படி எழுதுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

தமுமுகவிடமிருந்து தகவல்களை இலவசமாக பெற்றுக் கொண்டு சிறைவாசிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பீஜே இறங்க நினைக்கிறார்.

சிறைவாசிகள் விஷயத்தில் தான் செய்த அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக இப்படிப்பட்ட கேள்விபதில் நாடகத்தை நடத்தியிருக்கிறார்.

உண்மையில் கேள்விகள் தமக்கு வராவிட்டாலும் தாம் சொல்ல வரும் விஷயத்தை துணிந்து ஒரு கேள்வியை தயார் செய்து அதற்கு பொய்யான முகவரியும் கொடுத்து செட்டப் செய்வது பீஜேயின் கைவந்த கலைகளில் ஒன்று என்பதை நாம் இங்கே சொல்லி வைக்கிறோம். சிலவேளைகளில், தமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து, 'தம்பி உன் பேரில் ஒரு கேள்வி வரும்பா' என்று சொல்வதும் அவரது பழக்கமாகும்.

பீஜேக்கு விளங்கும் விதமாக ஒரு உதாரணத்தை சொல்லி வைப்போம்.

மிட்டாய் கடையில் சென்று ஒரு கிலோ மிட்டாய் கொடுங்கள் என்று கேட்டால் மிட்டாய் கிடைக்கும். துணிக்கடையில் சென்று ஒரு கிலோ மிட்டாய் கேட்டால் எப்படிக் கிடைக்கும்.

நீதி மன்ற விவகாரங்களை நீதி மன்றத்தில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் வாக்குறுதி தரவில்லை, கவர்னர் அதற்கு வாக்குறுதி தரவில்லை, தேர்தல் அறிக்கையில் சொல்ல வில்லை என்று கதறுவதால் ஒரு பயனும் இல்லை.

ஆனாலும் முதலமைச்சர் சிறைவாசிகள் விஷயத்தில் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு சில செயல்களை செய்ய முடியும். அதுவும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்ய முடியும். அதைத்தான் நாம் அவரிடமிருந்து எதிர்பார்கிறோம்.

நாலாம் கிளாஸ் படித்த மேதைக்கு எப்படி இந்த விஷயங்கள் விளங்கப் போகிறது, நீதி மன்றத்தில் சரணடைவதற்கு பதிலாக ஜெயலலிதாவிடம் சரணடைந்த பிஜேக்கு ஜெ சொல்வது தான் வேதம். அவரைப் பின்பற்றுவது தான் ஒரே வழி.

முன்பெல்லாம் சவால் விடும் போது, இதற்கு ஆதாரம் கொண்டு வந்தால் ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் என்று பிஜே பெட் கட்டுவார், ஆனால் இப்போதோ நிலைமை வேறு இப்போதைய சவால்களில் கோடிக்கணக்கில் இணாம் அறிவிக்கிறார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. ஜெ கொடுத்தாரா?

ரகசியம் அதிக நாட்கள் ரகசியமாகவே இருக்காது. பொறுத்திருப்போம்.

இப்னு பாத்திமா 04.07.2006